
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணிகளில் ஈடுபட்ட சாய்பாபா கடந்த 24-ந்தேதி மரணம் அடைந்தார். கடந்த புதன்கிழமை அவரது உடல் அங்குள்ள பிரசாந்தி நிலையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது சமாதியை தரிசனம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாய்பாபா சமாதியை தரிசனம் செய்தனர். இன்றுடன் சமாதி தரிசனம் முடிவடைகிறது. சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும் என்று ஆந்திர மந்திரி ரகுவீரா ரெட்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சாய்பாபா வாழ்ந்து மறைந்த புட்டபர்த்தி மிகவும் புனிதமான தலம். இதை உலகின் மிகப் பெரிய புண்ணிய தலமாக மாற்ற ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும். சாய்பாபா ஆசிரமத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.
சாய்பாபா தனது காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெற இலவச மருத்துவமனை, கல்வி கூடங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தினார். அவரது பணி தொடர மாநில அரசு அத்தனை உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாய்பாபா சமாதியை தரிசனம் செய்தனர். இன்றுடன் சமாதி தரிசனம் முடிவடைகிறது. சாய்பாபா மறைந்த புட்டபர்த்தி புண்ணிய தலமாக மாற்றப்படும் என்று ஆந்திர மந்திரி ரகுவீரா ரெட்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சாய்பாபா வாழ்ந்து மறைந்த புட்டபர்த்தி மிகவும் புனிதமான தலம். இதை உலகின் மிகப் பெரிய புண்ணிய தலமாக மாற்ற ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும். சாய்பாபா ஆசிரமத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.
சாய்பாபா தனது காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெற இலவச மருத்துவமனை, கல்வி கூடங்களை ஏற்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தினார். அவரது பணி தொடர மாநில அரசு அத்தனை உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment