Friday, April 8, 2011

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி.


சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

4வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அனிருதா 55 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்களும், ரெய்னா 33 ரன்களும், டோனி 29 ரன்களும் எடுத்தனர்.


154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.


கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக காலிஸ் 54 ரன்களும், மனோஜ் திவாரி, பிஸ்லா ஆகியோர் தலா 27 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.



விஜயகாந்த் டெபாசிட் வாங்க கூடாது: ராமதாஸ்


ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதாவது எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் டெபாசிட் வாங்க கூடாது.

இதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிவராஜ் அவர்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் எதிரணி வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது. டெபாசிட் வாங்க கூடாது.

இதேபோல் வானூர் தொகுதியில் புஷ்பராஜ், உளுந்தூர் பேட்டையில் முகமது யூசப், கள்ளக்குறிச்சியில் பாவரசு, விக்கிரவாண்டியில் ராதாமணி, சங்கராபுரத்தில் உதயசூரியன் ஆகியோர் வெற்றி பெற வேண்டும். இதற்கு பாமக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா? கி.வீரமணி.


கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா? கி.வீரமணி.

மற்ற மாநிலங்களில், மனிதனை மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா இன்றைக்கும் இருக்கிறதே, கலைஞர் வந்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டில் மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்து, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா திட்டம் கொண்டு வந்தார். அதுதான் மனித நேயம். எனவே நம்முடைய எதிர்காலத்திற்கு, வாழ்வதற்கு பெரிய வாய்ப்புகள் கொடுக்கும் கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா?

இந்தத் தேர்தலை, மக்கள் தேர்தல் களமாகப் பார்க்கவில்லை. இனப்போராட்ட களமாக, திராவிடர் ஆரியர் போராட்டமாகக் கருதுகிறார்கள். அதை எங்களைப் போன்றவர்கள் உணர்கிறோம். இது ஸ்ரீக்கும், திரு-வுக்கும் போராட்டம், பரம்பரைப் போராட்டம். ஏனென்றால் அவர்கள் தங்கள் பரம்பரையைத் தேடிப் போய் இருக்கிறார்கள்.

உழைக்கின்ற, பாட்டாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மறுக்கப்பட்டு இருந்ததை மாற்றி, திராவிடர் சமுதாயம் மூலம் ஒரு வளர்ச்சியை, எழுச்சியை பெற கலைஞர் அரசு பாடுபட்டுக்கொண்டு வருகிறது. சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.

தேர்தல் என்பது இது ஒரு கட்சிப் பிரச்சனை அல்ல. மதப் பிரச்சனை அல்ல. மாறாக நம் இனத்தின் வாழ்க்கை பிரச்சனை இதில்தான் நம் இனம் வாழ்வதா? வீழ்வதா? என்ற நிலை அடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில்தான் அனைத்து மக்களும், சிறுபான்மை மக்களுடன் உறவுக்காரர்கள் போன்று செயல்பட்டு, பழகிக்கொண்டு இருக்கிறோம். இதுபோல் வேறு நாட்டில் உண்டா. வேறு மாநிலத்தில்தான் உண்டா. மக்களிடையே வெறுப்பை தூவுவதற்கு, தூண்டுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் வருகிறது.

திராவிடர் இயக்கம் வளர்ந்தால், சிறுபான்மை சமுதாயமாக இருந்தாலும், பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், எல்லோரும் கைகோத்துக்கொண்டு சகோதரர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மிகப்பெரிய ஒற்றுமையாளர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலை மற்ற அமைப்புகள் வந்தால் தொடராது. எனவே, கலைஞர் தலைமையில் உள்ள அணி வெற்றி பெறுவது யாருடைய சுயநலத்திற்காகவும் அல்ல. தமிழ் இனத்தின் மீட்புக்காக, எதிர் காலத்திற்காக. இவ்வாறு கி.வீரமணி பேசினார்.


கலைஞரின் உயர் எண்ணமும் ஜெயலலிதாவின் உருமாறும் எண்ணமும்.


பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் அந்த அம்மா ஆட்சியில் தற்காலிகமாக வேலைக்கு ஆள்களை எடுத்தார்கள். சிறிது காலம் கழித்து அவர்கள். தங்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டம். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த அம்மா அவர்களை பணியில் இருந்து தூக்கி விட்டு தனது கட்சிக்காரர்களை வேலையில் அமர்த்தினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கலைஞரிடம், அவர்களின் பதவிக் காலம் முடிவடையப்போகிறது எங்களுக்கு அந்த பணியை வழங்குங்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் எல்லாம் உடன் இருந்தோம். உடனே, கலைஞர் சொன்னார் அவர்கள் யாராக இருந்தாலும் நம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் வேலையில் இருக்கட்டும் என்று கூறியதோடு புதிதாக வேண்டுமானால் வேலைக்கு ஆள்களை சேர்த்துக்கொள்ளலாம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றவர் கலைஞர்.

அந்த அம்மா ஆட்சியில் என்ன செய்தார் என்றால், 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். அதை எப்படியோ கம்யூனிஸ்ட் நண்பர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். இதிலிருந்து தெரிகிறதா? கலைஞரின் உயர் எண்ணமும், அந்த அம்மாவின் உருமாறுகின்ற எண்ணமும். இவ்வாறு கி.வீரமணி பேசினார்


சென்னையில் 4வது ஐபிஎல் போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்கியது.


4வது ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர் இன்று மாலை சென்னையில் கோலாகலமான கலை விழாவுடன் தொடங்கியது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகள் வருடத்திற்கு ஒருமுறை நடந்து வருகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. 2009ல் நடந்த போட்டித் தொடரில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பட்டம் வென்றது. தென் ஆப்பிரிக்காவில் 2010ல் நடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆனது.

இந்த நிலையில் தற்போது 4வது போட்டித் தொடர் இன்று தொடங்கியது.

இன்று தொடங்கி மே 28ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 74 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்துள்ளன.

இதுவரை இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய எட்டு அணிகளுடன் புதிதாக சஹாரா புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரு அணிகளும் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் போட்டி நடைபெறவுள்ளது.

கோலாகல தொடக்க விழா.

இன்று மாலை ஆறரை மணியளவில் தொடக்க விழா நடைபெற்றது.

போட்டியின் தொடக்கத்தில் ஐபிஎல் ஆணையர் சிரயு அமீன் தொடக்க உரையாற்றினார். பின்னர் பத்து அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழிக் கையெழுத்தை இட்டனர். அதன் பின்னர் போட்டி தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தொடக்க விழா தொடங்கியது. இதில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு அழகிகள், நடிகைகள் உள்ளிட்டோர் ஆடிப் பாடி, ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளனர். சூப்பர் ஸ்டார் ஷாருக் கானும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை அளிக்கிறார். அவரும் நடிகை ஷ்ரியாவும் இணைந்து இந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு ஆடுகின்றனர்.

சுனிதி செளகான், குனால் கஞ்சாவாலா, சோனா மொஹபாத்ரா, அக்ரிதி காக்கர் ஆகியோர் பாடவுள்ளனர்.

முதல் போட்டி.

தொடக்க விழாவுக்குப் பின்னர் இரவு 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

ஐபிஎல் தொடரின் தொடக்க விழா சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் குஷியுடன் தயாராகி வருகின்றனர்.

இரு பிரிவுகள்.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் இடங்கள்.

சென்னை, பெங்களூர், டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நவி மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும்.

பழைய அணிகள் எட்டிலும் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு வரை ஒரு அணிக்காக ஆடிய பல வீரர்கள் இந்த முறை அணி மாறியுள்ளனர்.

கேப்டன்களைப் பொறுத்தவரை, சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தற்போது புனே வாரியர்ஸுக்கு வந்துள்ளார். கொல்கத்தா நைட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி நீக்கப்பட்டு கெளதம் கம்பீர் கேப்டனாகியுள்ளார். கொச்சி அணிக்கு மஹேளா ஜெயவர்த்தனே கேப்டனாகியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே இந்த முறை இல்லை. டேணியல் வெட்டோரி புதிய கேப்டனாகியுள்ளார்.

இதுவரை டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த கில்கிறைஸ்ட் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு மாறியுள்ளார்.


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை.


4 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு :



ஏப் 8: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை இரவு 8 மணி


ஏப் 9: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

ஏப் 9: கொச்சி டஸ்கர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 10: டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இந்தியன்ஸ் டெல்லி மாலை 4 மணி

ஏப் 10: புனே வாரியர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இரவு 8 மணி

ஏப் 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

ஏப் 12: ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

ஏப் 12: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ் பெங்களூர் இரவு 8 மணி

ஏப் 13: கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை சூப்பர் கிங்ஸ் மொகாலி மாலை 4 மணி

ஏப் 13: புனே வாரியர்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 14: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐதராபாத் இரவு 8 மணி

ஏப் 15: ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

ஏப் 15: மும்பை இந்தியன்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 16: சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை மாலை 4 மணி

ஏப் 16: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐதராபாத் இரவு 8 மணி

ஏப் 17: புனே வாரியர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை மாலை 4 மணி

ஏப் 17: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

ஏப் 18: கொச்சி டஸ்கர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 19: டெல்லி டேர்டெவில்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி மாலை 4 மணி

ஏப் 19: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் இரவு 8 மணி

ஏப் 20: மும்பை இந்தியன்ஸ் புனே வாரியர்ஸ் மும்பை மாலை 4 மணி

ஏப் 20: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

ஏப் 21: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராஜஸ்தான் ராயல்ஸ் மொகாலி இரவு 8 மணி

ஏப் 22: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா மாலை 4 மணி

ஏப் 22: மும்பை இந்தின்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 23: டெல்லி டேர்டெவில்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி இரவு 8 மணி

ஏப் 24: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

ஏப் 24: ராஜஸ்தான் ராயல்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

ஏப் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் புனே வாரியர்ஸ் சென்னை இரவு 8 மணி

ஏப் 26: டெல்லி டேர்டெவில்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி இரவு 8 மணி

ஏப் 27: புனே வாரியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை மாலை 4 மணி

ஏப் 27: கொச்சி டஸ்கர்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 28: டெல்லி டேர்டெவில்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி இரவு 8 மணி

ஏப் 29: ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

ஏப் 29: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் புனே வாரியர்ஸ் பெங்களூர் இரவு 8 மணி

ஏப் 30: கொச்சி டஸ்கர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் கொச்சி மாலை 4 மணி

ஏப் 30: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தா இரவு 8 மணி

மே 1: ராஜஸ்தான் ராயல்ஸ் புனே வாரியர்ஸ் ஜெய்ப்பூர் மாலை 4 மணி

மே 1: சென்னை சூப்பர் கிங்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 2: மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை மாலை 4 மணி

மே 2: டெல்லி டேர்டெவில்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் டெல்லி இரவு 8 மணி

மே 3: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

மே 4: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை மாலை 4 மணி

மே 4: புனே வாரியர்ஸ் மும்பை இந்தியன்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 5: கொச்சி டஸ்கர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொச்சி மாலை 4 மணி

மே 5: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஐதராபாத் இரவு 8 மணி

மே 6: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூர் இரவு 8 மணி

மே 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மாலை 4 மணி

மே 7: மும்பை இந்தியன்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 8: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

மே 8: கிங்ஸ் லெவன் பஞ்சாப் புனே வாரியர்ஸ் மொகாலி இரவு 8 மணி

மே 9: ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

மே 10: ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் புனே வாரியர்ஸ் ஐதராபாத் மாலை 4 மணி

மே 10: கிங்ஸ் லெவன் பஞ்சாப் மும்பை இந்தியன்ஸ் மொகாலி இரவு 8 மணி

மே 11: ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 13: கொச்சி டஸ்கர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இந்தூர் இரவு 8 மணி

மே 14: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

மே 14: மும்பை இந்தியன்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 15: கிங்ஸ் லெவன் பஞ்சாப் டெல்லி டேர்டெவில்ஸ் தர்மசாலா இரவு 8 மணி

மே 15: கொச்சி டஸ்கர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தூர் இரவு 8 மணி

மே 16: புனே வாரியர்ஸ் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 17: கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தர்மசாலா இரவு 8 மணி

மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி டஸ்கர்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 19: புனே வாரியர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 20: மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இரவு 8 மணி

மே 21: கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் தர்மசாலா மாலை 4 மணி

மே 21: டெல்லி டேர்டெவில்ஸ் புனே வாரியர்ஸ் டெல்லி இரவு 8 மணி

மே 22: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

மே 22: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா இரவு 8 மணி

இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று

மே 24: லீக் சுற்றில் முதலிடம் 2 வது இடம் மும்பை இரவு 8 மணி

மே 25: லீக் சுற்றில் 3 வது இடம் 4 வது இடம் மும்பை இரவு 8 மணி

மே27: முதல் தகுதிசுற்றில் தோற்கும் அணி 2 வது தகுதி சுற்றில் வெல்லும் அணி சென்னை இரவு 8 மணி

மே 28: இறுதிப் போட்டி சென்னை இரவு 8 மணி


ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் 14 லீக் போட்டிகள் அட்டவணை.


நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் "டுவென்டி-20' தொடர் நடந்து வருகிறது. நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு ஏப். 8 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது.

போட்டி அட்டவணை.

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டங்கள்.

4வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஆட்டங்கள் விவரம் வருமாறு:

ஏப் 8: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா சென்னை இரவு 8 மணி

ஏப் 13: கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை மொகாலி மாலை 4 மணி

ஏப் 16: சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் சென்னை மாலை 4 மணி

ஏப் 18: கொச்சி சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி இரவு 8 மணி

ஏப் 22: மும்பை சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இரவு 8 மணி

ஏப் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் புனே சென்னை இரவு 8 மணி

ஏப் 27: புனே சென்னை சூப்பர் கிங்ஸ் நவிமும்பை மாலை 4 மணி

மே 1: சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை இரவு 8 மணி

மே 4: சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் சென்னை மாலை 4 மணி

மே 7: கொல்கத்தா சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா மாலை 4 மணி

மே 9: ராஜஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெய்ப்பூர் இரவு 8 மணி

மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி சென்னை இரவு 8 மணி

மே 18: சென்னை சூப்பர் கிங்ஸ் கொச்சி சென்னை இரவு 8 மணி

மே 22: பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் மாலை 4 மணி

தேர்தல் ஆணையத்தின் கண்களில் மிளகாய் தூவ அ.தி.மு.க. ரெடி.


நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சுவர் விளம்பரங்கள், பேனர், கட்அவுட், தோரணங்கள், உட்பட எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் தடை செய்துவிட்டது.

தேர்தல் என்றாலே திருவிழாவாய் காட்சிதரும் தொகுதிகள் தற்சமயம் வெறிச்சோடி கலையிழந்து காணப்படுகிறது. கூட்டமாய் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிகழ்வுகளையும் காணவில்லை.

இதை விடக் கொடுமை என்னெவென்றால், தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகளினால் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிய முடியவில்லை என்பதும் வருத்தத்திற்குறிய உண்மையே..

பழைய செய்தித் தாள்களை பத்திரமாக பக்கத்தில் வைத்திருப்பவர் வேண்டுமானால் இத் தகவல்களை அறிய முடியும், என்றால் பாமரனின், படிக்காதவனின், உலக அறிவற்ற தாய்க் குலங்களின் நிலை தான் என்ன?

செம்மறி ஆட்டுக் கூட்டங்களாய் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னங்களுக்கு மட்டுமே ஓட்டு போட்டு பழகி வந்தவர்களும் இன்று தடுமாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது விழிப்புணர்வால் அல்ல. வழக்கமான சின்னத்திற்குறிய வேட்பாளர் யார் என்ற தடுமாற்றத்தினாலே!

தொகுதி மறு சீரமைப்பால் அறிந்தவனின், கற்றவனின் நிலையும்கூட இதை ஒட்டியே இருக்கிறது.

வேட்பாளர்கள், அதிலும் இரண்டுமுறை, மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினர்களாய் இருந்தவர்கள்கூட தொகுதி மாறி பிரச்சாரம் செய்தவற்றை கண்கூட காணமுடிகிறது.

சுயேட்சை வேட்பாளர்கள் சுனாமியில் அடித்துச் செல்லும் மீனாக இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியாகட்டும், எதிர்கட்சியாகட்டும், நாளை ஆள்வேன் என்று சொல்பவர்களாகட்டும், வெற்றி குறித்த ஐயப்பாடு, மதில்மேல் பூனையாக இல்லாமல் யானையாகவே காட்சி தருகிறது.

இந்நிலையில்தான் சிவகாசி பகுதி அதிமுக அதிரடியாய் ஒரு அறிவிப்பை ஆட்டோவில் செய்து கொண்டு சென்றது.

அன்பார்ந்த தாய்க்குலங்களே, வருகிற 13ம் தேதி தேர்தல் நாளன்று காலையிலே உங்கள் வீட்டு வாசலில் இரட்டை இலை சின்னத்தை கோலமாக போட்டுவைக்க கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம், எல்லோருக்கும் நமது சின்னமான இரட்டை இலையை பதியவைக்க அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஆட்டோவில் அறிவிப்பு பரபரப்பாய் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன செய்யும்?



தொண்டை வலியால் விஜயகாந்த் அவதி.

தொண்டை வலியால் விஜயகாந்த் அவதி - நெய்வேலி பிரச்சாரம் ரத்து.
தொண்டை வலியால் விஜயகாந்த் அவதி;    நெய்வேலி பிரசாரம் ரத்து

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க- தே.மு.தி.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். விஜயகாந்த்துக்கு தொண்டை வலி இருந்து வருகிறது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் இடைவிடாது கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார். நேற்று அவர் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

திட்டக்குடியில் பிரச்சாரத்தை தொடங்கி பிற்பகல் விருத்தாசலத்தில் முடித்தார். பின்னர் ஒய்வெடுப்பதற்காக நெய்வேலி வந்தார். அப்போது விஜயகாந்த் தொண்டை வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து டாக்டர் சுப்பிரமணியன் வந்து விஜயகாந்த்தை பரிசோதித்தார். கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர் ஆலோசனை கூறினார்.

இதையடுத்து விஜயகாந்த் நேற்று மாலை நெய்வேலியில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு ஓய்வு எடுத்தார். விஜயகாந்த் பிச்ரசாரம் செய்வதற்காக நெய்வேலி இந்திரா நகர், ஆர்ச் கேட் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். விஜயகாந்த் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்தப்பகுதியில் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்வார் என்று தே.மு.தி.க.வினர் தெரிவித்தனர்.

என்னை எப்படி நீங்கள் ஊழல்வாதி என்று கூறலாம்? - ஜெயலலிதா.


கருணாநிதியோடு சேர்த்து என்னை எப்படி நீங்கள் ஊழல்வாதி என்று கூறலாம் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட அவரிடம் வட இந்திய ஆங்கில சேனல் ஒன்று சிறப்புப் பேட்டி கண்டது. அப்போது ஜெயலலிதா கூறுகையில், உங்களைப் போன்ற வட இந்திய மீடியாக்கள், டிவி சேனல்கள், பத்திரிக்கைகள் தமிழகத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஒரு பெரிய தவறை செய்கின்றன.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஊழல்வாதிகள் என்று குறி்ப்பிடுகிறீர்கள். கருணாநிதி பெரிய ஊழல் பேர்வழி. ஆனால், நான் என்ன ஊழல் செய்தேன்?. என் மீது பொய்யான ஊழல் வழக்குகளை கருணாநிதி போட்டார். அதில் 12 வழக்குகளில் நான் விடுதலை ஆகிவிட்டேன். அப்படியிருக்கையில் கருணாநிதியைப் போலவே நீங்களும் என்னை எப்படி ஊழல்வாதி என்று கூறலாம்.

நான் ஊழல்வாதி அல்ல. எனது கட்சியும் ஊழல் கட்சி அல்ல என்று கடிந்து கொண்டார் ஜெயலலிதா.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பின்னரும் நீடிக்குமா என்று கேட்டதற்கு, தேர்தல் முடிவுக்குப் பின் இதற்கு பதில் சொல்கிறேன் என்றார்.

ஆனால் கூட்டணி கட்சிகள் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கவில்லை.

கருணாநிதிக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, I wish him bad luck என்றார்.

முன்னதாக திருப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தருகிற தேர்தல். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்குவது சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி தான். தமிழ்நாட்டில் இப்போதுள்ள நிலைமையை நான் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை.

மின்சாரத்தை பொறுத்த அளவில் கடந்த 5 ஆண்டாக மின்வெட்டு அமலில் உள்ளது. மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் தேவையான இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் இருக்கிற அனைத்து தொழில்களும் நலிவடைந்து விட்டன. தொழில் முனைவோர் புதிய தொழில்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. வேலை இல்லா திண்டாட்டம் பெருகி விட்டது.

தமிழக மக்களாகிய நீங்கள் தான் தெய்வங்கள். தமிழக மக்களே நல்ல தீர்ப்பு தாருங்கள். தமிழ்நாட்டை காப்பாற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

நூல் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. உயர்நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் 750க்கும் மேற்பட்ட சாய, சலவைப்பட்டறைகள் மூடப்பட்டு விட்டன. தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித்தொழில் முடங்கும் நிலைக்கு வந்து விட்டது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாய நிலம் பாதிக்கப்படாத வகையிலும், நிலத்தடிநீர் மாசுபடாத வகையிலும், அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி மூடப்பட்ட சாய, சலவைப்பட்டறைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து கடலுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் மின்வெட்டு, நூல்விலை உயர்வு, தவறான ஏற்றுமதி கொள்கை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி உள்ளடக்கிய ஜவுளித்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் பனியன் தொழிலுக்கு விதிக்கப்பட்டு உள்ள 10 சதவீத கலால் வரியை ரத்து செய்ய வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவோம். நெசவாளர்களை பாதுகாக்க அனைத்து வகை நடவடிக்கையும் எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்துக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறைப்படுத்தப்படும்.

100 நாள் வேலையளிப்பு திட்ட ஊதியத்தின் முழு பயனும் தொழிலாளர்களுக்கு சென்றடையவும், கூடுதல் நாள் வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். அவற்றை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தொழில்கள் துவங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டாததால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. லஞ்சமும், ஊழலும் பரவியுள்ளது. இதனால், இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அனைவரும் ஏங்கும் நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.

தன் குடும்பத்தினரை தவிர வேறும் யாரும் புதியதாக தொழில்புரியக் கூடாது என நினைப்பதால் சினிமா, பத்திரிகை, மணல், கிரானைட், கேபிள் டிவி என அனைத்து துறைகளையும் கைப்பற்றிவிட்டு மீதமுள்ள துறைகளையும் அபகரிக்க 6வது முறையாக ஆட்சிக்கு வரத் துடிக்கிறார் கருணாநிதி.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தாலே போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். அதைவிடுத்து உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார் கருணாநிதி. அதனால், ஒரே நாளில் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழினத்தை பாதுகாப்பதற்கு பதிலாக தன் குடும்பத்தை பாதுகாப்பதுதான் கருணாநிதியின் முக்கியக் குறிக்கோளாகும்.

தமிழினம் பெரும் துயரத்தில் இருந்தபோது செம்மொழி மாநாட்டை நடத்தினார். அதில், கருணாநிதியின் குடும்பத்தினர் முன்வரிசையில் அமர்ந்து கொண்டதால் தமிழறிஞர்கள் பின்னால் நின்று கொண்டிருந்தனர். தமிழறிஞர்கள் கௌரவிக்கப்படுவதற்கு பதிலாக கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே கௌரவிக்கப்பட்டனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் தொடர்புள்ளது. இருப்பினும், இவ்விவகாரத்தில் மாட்டிக் கொண்டவர் ஆ. ராசா, உயிரை விட்டவர் சாதிக் பாட்ஷா. இவ்வளவு பெரிய ஊழல் நடந்தும் வெட்கமின்றி கருணாநிதி குடும்பத்தினர் வாக்குகள் கேட்டு வருகின்றனர். பேரவைத் தேர்தலுக்காக 2ஜி வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தண்டனை தரக்கூடிய சக்தி மக்கள்தான். இவற்றை அப்படியே விட்டுவிட்டால் தமிழ் மக்களை விரட்டிவிட்டு தமிழகத்தையே திமுகவினர் குடும்ப வசமாக்கிவிடுவர். அதைத் தடுக்க ஜனநாயக நாட்டில் ஒரே வழி தேர்தல். வரும் தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அனைத்து திட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும். எனவே அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

பின்னர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.


மானங்கெட்ட கூட்டணிக் கட்சிச் தலைவர்களுக்கு அன்புச் சகோதரி எழுதுவது


மானங்கெட்ட கூட்டணிக் கட்சிச் தலைவர்களுக்கு, அன்புச் சகோதரி எழுதுவது!

எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?

சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?

எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?

இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது.

அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?

மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!

விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்ல விரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது!

இப்படிக்கு
உங்கள் அன்பு சகோதரி

நன்றி : ரெட்டைவால்ஸ்

வடிவேலு கார் மீது செருப்பு வீச்சு: விஜயகாந்த் கட்சி அலுவலகம் சூறை.



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாணைக்காவல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இன்று நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது திமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்ததோடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் தாக்கி பேசினார்.

பிரச்சாரம் முடிந்து வடிவேலு புறப்பட்டபோது, அவர் கார் மீது இரண்டு செருப்புகள் விழுந்தன. அப்போது அங்கிருந்த போலீசார் செருப்பு வீசியவரை பிடித்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்டவரின் பெயர் மாசிலாமணி என்றும், அவர் திருவாணைக்காவல் பகுதி தேமுதிக துணைச் செயலாளர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை அறிந்த திமுகவினர் தேமுதிக அலுவலகத்தை சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக பெண்ணின் கடையில் டீ சாப்பிட்ட ஸ்டாலின்.

அதிமுகவைச் சேர்ந்த பெண்மணி நடத்தி வரும் டீக்கடைக்கு திடீரென விஜயம் செய்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு டீ வாங்கி சாப்பிட்டது கலகலப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் சமத்தில் இதுபோன்ற சிறு சிறு கலகலப்புக் காட்சிகள் அரங்கேறும். சென்னை அருகே அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றபோது திமுகவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, அதிமுக கூட்டணியினருக்கு துண்டு அணிவித்து அசத்தினார்.

அதேபோல நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த பெண்மணி நடத்தி வரும் டீக் கடைக்குச் சென்று டீ சாப்பிட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.

குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெப்படை செல்வராஜை ஆதரித்து குமாரபாளையம் நான்கு ரோடு பகுதியில் பிரசாரம் செய்தார் ஸ்டாலின். பின்னர் வெப்படைக்கு அவர் கிளம்பினார். வழியில் மேட்டுக்காடு என்ற கிராமத்தில் ஸ்டாலின் வண்டி நின்றது. வேனிலிருந்து இறங்கிய அவர் சாலையோரமாக இருந்த ஒரு டீக்கடைக்குள் புகுந்தார்.

அங்கிருந்த தனலட்சுமியிடம் டீ கொடுக்குமாறு கேட்டார். இதை எதிர்பாராத தனலட்சுமி மிகுந்த சிரிப்புடன் டீ போட்டுக் கொடுத்தார். அப்போதுதான் கடையில் மாட்டியிருந்த காலண்டரைப் பார்த்தார் ஸ்டாலின். அது அதிமுகவினர் அடித்திருந்த காலண்டராகும்.

இதையடுத்து நீங்க அதிமுகவைச் சேர்ந்தவரா என்று கேட்டார் ஸ்டாலின். அவரும் ஆமாம் என்றார். பின்னர் டீக்கு எவ்வளவு காசு என்று ஸ்டாலின் கேட்கவே, தனலட்சுமி புன்னகையுடன் வேண்டாம் என்று கூறினார். ஸ்டாலின் வந்தது அவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்ததைக் காண முடிந்தது.

பின்னர் வெளியில் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்செயலாக டீ குடிக்க இந்த கடைக்கு வந்தேன். ஆனால், இந்த கடை அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் நடத்தும் கடை என்பது எனக்கு தெரியாது.

கடையில் இருந்த பெண் மாற்றுக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், மனதார எனக்கு டீ போட்டு தந்தார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தலைவர் கருணாநிதி கடந்த 5 ஆண்டுகளாக செய்த சாதனை திட்டங்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்ந்தது தான் என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலின் டீக்கடைக்கு வந்த தகவல் அறிந்து நிறைய பேர் கூடி விட்டனர். பெண்கள், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்டாலினைப் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் ஸ்டாலினிடம் குழந்தைகள் ஆட்டோகிராப் கேட்கவே அவரும் மகிழ்ச்சியுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பின்னர் கோவிலாங்காடு என்ற இடத்தில் ரயில்வே ஊழியர் சிவலிங்கம் என்பவரது வீட்டுக்கும் ஸ்டாலின் சென்றார். அதை எதிர்பார்க்காத சிவலிங்கம் குடும்பத்தினர் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்க ஸ்டாலினை வரவேற்றனர். அவரிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கவே, இப்போதுதான் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று ஸ்டாலின் கூறினார்.

பிறகு அவர்களிடம் யாருக்கு ஓட்டுப் போடுவீங்க என்று ஸ்டாலின் கேட்கவே, உங்களுக்குத்தான் என்றனர் அவர்கள்.

தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சிதான்:

பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தலைமையில் நடப்பது குடும்ப ஆட்சிதான். முதல்வர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதித்தான் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இவை தவிர, திருமண உதவித் திட்டம், சத்துணவில் வாரத்துக்கு 5 முட்டைகள் திட்டம், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

ஐபிஎல் - 4 திருவிழா இன்று துவக்கம் : சென்னையில் முதல் போட்டி.


இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல்லின், நான்காவது போட்டித் தொடர் இன்று சென்னையில் விமரிசையாக தொடங்குகிறது.

இதுவரை நடந்த 3 சீசன்களிலும் வீரர்களும், அணிகளும் பட்டையைக் கிளப்பி கிரிக்கெட் ரசிகர்களை துள்ளலில் ஆழ்த்தின. முதல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது கோப்பையை ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸும் கைப்பற்றின. கடந்த முறை நடந்த 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனானது.

இந்த நிலையில் நாளை 4வது போட்டித் தொடர் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டித் தொடர்கள் இந்தியாவிலும், 3வது தொடர்தென் ஆப்பிரிக்காவிலும் நடந்தது. இந்த முறை மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

நாளை முதல் வரும் மே மாதம் 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கின்றன. இம்முறை ஏற்கனவே இருக்கின்ற 8 அணிகளோடு புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகள் விளையாடுகின்றன.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகியவை இன்னொரு அணியிலும் உள்ளன.

ஒவ்வொரு அணியும் தத்தமது லீக் பிரிவில், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும்.

இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும். சென்னை, மும்பை அணிகளை தவிர மற்ற அணிகள் பெரும்பாலான வீரர்களை மாற்றம் செய்துள்ளன. கடந்த 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தற்போது வெவ்வேறு அணிகளில் விளையாடுகின்றனர்.

அதிக ஏலத்தொகைக்கு போன கம்பீர் கடந்த 3 சீசனிலும் டெல்லிக்கு விளையாடினார். ஆனால் இம்முறை கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார். இதேபோல ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய யூசுப் பதான் தற்போது கொல்கத்தா அணியில் உள்ளார். சென்னை அணியில் இருந்த முத்தையா முரளிதரன் தற்போது கொச்சி அணியில் உள்ளார்.

கேப்டன்களைப் பொறுத்தவரை, சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தற்போது புனே வாரியர்ஸுக்கு வந்துள்ளார். கொல்கத்தா நைட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி நீக்கப்பட்டு கெளதம் கம்பீர் கேப்டனாகியுள்ளார். கொச்சி அணிக்கு மஹேளா ஜெயவர்த்தனே கேப்டனாகியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே இந்த முறை இல்லை. டேணியல் வெட்டோரி புதிய கேப்டனாகியுள்ளார்.

இதுவரை டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த கில்கிறைஸ்ட் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு மாறியுள்ளார்.

4-வது ஐபிஎல் திருவிழாவின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணி வரை நடக்கிறது.

அதன் பின்னர் 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் ஐபிஎல் வெடி நாளை முதல் வெடிக்கப் போகிறது. சரவெடியாக தொடர்ந்து 50 நாட்கள் பட்டாசு கிளப்பப் போகும் இந்த மத்தாப்புப் போட்டிகளைக் காண ரசிகர்கள் ரகளையாக தயாராகியுள்ளனர்.

செட் மாக்ஸ் டிவியில் இந்தப் போட்டிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் கண்டுகளிக்கலாம்

கருணாதி-குடும்பம் பற்றி விமர்சனம்: ஜெயலலிதா-விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு.

கருணாதி - குடும்பம் பற்றி விமர்சனம் : ஜெயலலிதா - விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு; இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
கருணாதி-குடும்பம் பற்றி விமர்சனம்:    ஜெயலலிதா-விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு;    இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி. மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் அந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதையடுத்து மத்திய தேர்தல் கமிஷன் ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் விதியை மீறி தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்தது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆதாரமில்லாமல் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டு கூறி உள்ளீர்கள். ஊழல்வாதி, சினிமா துறையை சுரண்டிவிட்டார். தமிழகத்தை சுரண்டிவிட்டார் என தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்வதாக உங்கள் மீது தி.மு.க. முக்கிய நிர்வாகி பொன் முத்துராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார். இதற்கான விளக்கத்தை இன்று மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசை விஜயகாந்திடம் கொடுப்பதற்காக நேற்று இரவு 10.20 மணி அளவில் புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி கல்யாணசுந்தரம் சென்றார். ஆனால் ஓய்வெடுப்பதாக கூறி விஜயகாந்தை தேர்தல் அதிகாரி சந்திக்க தே.மு.தி.க.வினர் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து நோட்டீசை தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவிடம் தேர்தல் அதிகாரி கொடுத்தார். இதுபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவரையும், அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மத்திய தேர்தல் கமிஷன் 2 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

தேர்தல் ஆணையத்திடம் ஜெ., கேப்டன் 2 நாள் அவகாசம்.

இந்த புகார் குறித்து நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நோட்டீசுக்கு பதில் அளிக்க அவர்கள் இருவரும் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாக பிரவீன் குமார் தெரிவித்தார்.

ம.தி.மு.க. ஆதரவு : மதுரையில் கருணாநிதி பேட்டி.

ம.தி.மு.க.வும் ஆதரவு:    தி.மு.க. கூட்டணி    வெற்றி பெறும்    மதுரையில் கருணாநிதி பேட்டி


முதல் அமைச்சர் கருணாநிதி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: மிக துல்லியமாக உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் எங்கள் அணி வெற்றி பெறும்.

கே: தி.முக. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தருவது ஏன்?

ப: கழக அரசின் சாதனைகள். குறிப்பாக தமிழகத்தில் ஏழைகள் குடிசைகள் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு அறிவித்து 20 லட்சம் குடிசைகளை அகற்றி அவற்றுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டன. அந்த திட்டத்தின்படி இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் காங்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளையும் கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் கட்டி முடிப்பார்கள் என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடம் இருப்பதுதான் ஒரு காரணம்.

கே: சட்டசபை தேர்தலில் மின் பற்றாக்குறையை ஒரு காரணமாக வைத்து எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறதே?

ப: மின் பற்றாக்குறை என்பது தொடர்கின்ற நிகழ்வு. தொழிற்சாலைகள், வீட்டு பயனாளிகளுக்கு தேவைப்படுகின்ற மின் சாரத்தை உற்பத்தி செய்ய முற்படும்போது மேலும் சில தொழிற்சாலைகள் வரத் தொடங்குகின்றன. தொழிற்சாலைகள் வளர, வளர மின்தேவையும் அதிகப்படுகின்றது. அதற்கேற்ப மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடையில் அ.தி.முக. அரசு தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டபோது மின்உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்துள்ளது.

மின் உற்பத்திக்கான திட்டங்கள் கழக ஆட்சியில் தயாரிக்கப்பட்டு தற்போது நல்ல முறைக்கு வரும் நிலை உருவாகி உள்ளது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தால் அந்த திட்டங்கள் வரிசையாக நிறைவேறும் போது மின் தட்டுப்பாடு அறவே அகற்றப்படும்.

கே: ம.தி.மு.க.வில் 2-ம் கட்ட தலைவர்கள் தி.மு.க. வுக்கு ஆதரவாக பேசி வருகிறார்களே? ம.தி.மு.க. தொண்டர்களுக்கு நீங்கள் என்ன கூறு விரும்புகிறீர்கள்?

ப: பல இடங்களில் ம.தி. மு.க. தொண்டர்கள் தி.மு.க. வுக்கு தங்களது ஆதரவை மானசீக ஆதரவை தருவதாக நானும் அறிகிறேன். திராவிட இயக்கங்கள் ஒன்றாக இருந்து உறுதிபட தனது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். இடையே ஏற்பட்ட சில மாறுபாடுகளால் ஒற்றுமை குலைந்து மாற்றாருக்கு இடம் தருவதாக ஆகிவிட்டது. ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணுகிற சூழல் விரைவில் வரும். அதன் அடையாளம் தான் ம.தி. மு.க.வினர் இந்த தேர்தலில் பல இடங்களில் எங்களை ஆதரிக்கிறார்கள்.

கே: தமிழ்நாட்டை மீட்டெடுப்பேன் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி உள்ளாரோ?

ப: அவர் முதலில் பெங்களூர் நீதிமன்றத்தில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதற்கு அடையாளமாக இருக்கும் நகைகளை முதலில் மீட்கட்டும்.

கே: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளதே?

ப: தேர்தல் ஆணையம் என்பது தன்னை அரசியல் கட்சியின் அங்கமாக ஆக்கிக்கொள்ளலாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம். நீதிமன்றத்தைப்போல அந்த ஆணையத்தை அவர்கள் நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுகிறதை காணும் போது தேர்தல் ஆணையம் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு கண்டிப்பாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்ற மாநிலங்களை போல தமிழக அரசும் ரூ.4 கோடி அளவுக்கு பரிசுகள் அறிவித்தது. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோம். கிரிக்கெட் வீரர்களுக்கோ, கிரிக்கெட் சங்கத்திற்கோ முதல்-அமைச்சர் வெகுமதியை வழங்குவதை போல படம் எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

கே: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதே?

ப: நான் ஒப்பிட்டு பார்க்கும்போது மத்திய மந்திரி மீது இன்றைய எதிர்க்கட்சியில் உள்ள ஜெயலலிதா மற்றும் அவரது அணியில் உள்ள எல்லோருமே கோபம் காட்டி வருகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தில் இருந்த மதுரை மாவட்டத்தில் இன்றைய மத்திய அமைச்சர் செல்வாக்கு பெறுவதும், மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை, நல்ல காரியங்களை செய்வதும் எதிர்க்கட்சி கூட்டணியினரின் வெறுப்பை வெளிபடுத்துகிறது.அதனால் அவர்கள் மத்திய அமைச்சர் மீது அடிக்கடி பொய் புகார் கூறி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை கொண்டுதான் தேர்தல் ஆணையம் இப்போது செயல்படுகிறது என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்பது எனது கருத்து.

கே: ஆளும் கட்சி மீது அதிகாரிகள் அதிக கெடு பிடி செய்வதாக கூறப்படுகிறதே?

ப: அரசியலில் மட்டுமல்ல. அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் உண்டு.

கே: கோவையில் நேற்று நடந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ள வில்லையே?

ப: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்துள்ளாரே?
அது மாத்திரமல்ல. அவர் பேசும்போது தி.மு.க. குடும்ப கட்சி என்று கூறி உள்ளார். தி.மு.க. குடும்ப கட்சியாக இருக்கலாம். சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி அல்ல.

கே: மத்திய மந்திரி முக.அழகிரி மாநில அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறதே?

ப: அது தாய் நாட்டின் பற்று. தமிழ்நாட்டின் மீது உள்ள பாசத்தை காட்டுகிறது. டெல்லியில் பதவியில் இருந்தாலும் அந்த பதவியை தமிழகத்திற்குதான் பயன் படுத்துகிறார்.

கே: மதுரையில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிக தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

ப: ஆட்சிகள் வரும். மீண்டும் திரும்பி வரும்.

கே: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுவதாக பாராட்டுகிறார்களே?

ப: தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக நான் கூறவில்லை. சில குறிப்புகளை தெளிவுபடுத்தினேன். எதிர் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

கே: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மத்தியிலும் எதிரொலிக்குமா?

ப: எதிரொலிக்கும்.

கே: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியான மிக்சி, கிரைண்டர் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது?

ப: நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். சிலர் அதனை காப்பி அடித்து ஜெராக்ஸ் எடுத்து படித்துள்ளார்கள். அதனை எப்படி நம்புவார்கள் என்று எனக்கு தெரியாது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய ஒன்று, இந்து மதத்தினர் தங்களுக்கு சொந்தமான இடத்திலோ புறம்போக்கு இடத்திலோ வழிபாட்டு தலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதுபோல கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் வழிபாட்டு தலங்ககளை கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கட்டிடம் கட்டலாம் என்பதை அரசு பரிவோடு பரிசீலிக்கும். உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள பூலோகமாற்றம் காரணமாக சுனாமி எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையில் கடலோர மக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கும் வகையில் அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்க மீன்வளம் மற்றும் கடலியல் சம்பந்தப்பட்டகுழு அமைத்து ஆய்வு நடத்தி கடலோர மீனவர்கள் பாது காப்பு செயல் திட்டம் வகுக்கப்படும். ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலையை மத்திய அரசின் தொல்லி யல் துறை எடுத்துக் கொள்ளப்போவதாக வைகோ உள்ளிட்ட சிலர் எதிர்த்து குரல் கொடுத்தபோது அதனை இந்த அரசு மறுத்ததுடன் அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும், அதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளோம்.

கே:- நேற்று கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பார் என்று பேசியிருக்கிறாரே?

ப:- பண்ருட்டியை நினைக்கும்போது அவரை பற்றி மறைந்த கோவிந்தசாமி கூறியது நினைவுக்கு வருகிறது. பண்ருட்டி மாதிரி துரோகிகளை நம்பாதீர்கள் என்றார். அதனையும் மீறி நம்புவது எனது தவறு.

கே:- சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் நடந்த வாகன சோதனையில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதே?

ப:- எந்த கட்சியின் பணம் என்று அறிவிக்கப்பட வில்லையே?

கே:- தமிழக வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:- தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

கே:-தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது?

ப:- எல்லாம் சரியாக உள்ளது. சில பத்திரிகைகள்தான் சரியாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி உடன் இருந்தார்.