Friday, July 22, 2011

சுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.



வானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை பேசினார்.

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் பேசியதாவது :-

இந்தியாவில் விவசாயம் பெருக வேண்டும். ஏனென்றால் சுற்று சூழல் பாதுகாக்க வேண்டும். பூமி என்பது தாய் மாதிரி தாயை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் தான் பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும். அதேபோல் தான் நிலமும், நிலத்தில் உள்ள மண் இவற்றை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் தான் ஆரோக்கியமான விவசாயம் கிடைக்கும்.

இந்தியாவில் மட்டும் விவசாய நிலங்களில் சின்ன ஓட்டை, பெரிய ஓட்டை என கூறுவார்கள். சின்ன ஓட்டை என்பது காற்று செல்லக் கூடிய பகுதி, பெரிய ஓட்டை என்பது தண்ணீர் இருக்கும் பகுதி என குறிப்பிடுவார்கள். சின்ன ஓட்டையில் மழை காலங்களில் மண்புழுக்கள் சென்று உரமாக மாறுகின்றது. கரையான் உமிழ் நீரில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் அது உரமாக பயன்படுகிறது.

இது வெயில் காலங்களில் சிறிய ஓட்டை வழியாக சென்று விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுகிறது. இந்த முறையை பிரான்ஸ்சை சேர்ந்த ஒரு வேளாண் விஞ்ஞானி கண்டுபிடித்தார். இந்த முறையின் மூலம் விவசாய பணிகளை செய்து வருகிறார். நம் நாட்டை பின்பற்றி தான் வெளிநாடுகள் விவசாயம் செய்கின்றன. ஆனால் நம் விவசாயிகள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய ரசாயன மருந்துகளை வாங்கி நிலத்தை பாழ்படுத்துகின்றனர். அமெரிக்காவில் ராபர்ட் ஓவார்டு என்பவர் மிகச் சிறப்பாக விவசாயம் செய்து வருகிறார்.

அவர் எம்முறை விவசாயம் செய்து வருகிறார் என்றால் இந்தியாவில் வந்து சில வருடங்களில் விவசாய பணிகளை கற்றுக் கொண்டு அங்கு சிறப்பாக விவசாயங்களை செய்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகள் நிலையான கொள்கை கிடையாது பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த வேளாண் அறிஞர்கள் இந்தியாவில் செய்யப்படும் விவசாயங்களை கற்றுக் கொண்டு அவர்கள் நாடுகளுக்கு சென்று கற்று தருகின்றனர். அதனால் முன்னேறி செல்கின்றனர். இந்திய மக்களின் நிலமை மோசமாகி கொண்டே செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு முறையாக இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் என நபார்டு வங்கி மூலம் அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது திருச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சியால் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பின்பற்றுவார்கள்.

மேலும் அனைத்து விவசாயிகளும் ஒரே பயிரை சாகுபடி செய்வதால் அதன் விலை குறைந்து விடுகிறது. மற்ற விவசாய பொருட்கள் விலை ஏற்றப்படுகிறது. அதனால் அனைத்து விவசாயிகளும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தால் விலைவாசியினை கட்டுப்படுத்த முடியும். அதற்காக நபார்டு வங்கி பல்வேறு வசதிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது. என்று நபார்டு வங்கி மேலாளர் பார்த்திபன் பேசினார்.

No comments: