Monday, April 4, 2011

சாய்பாபாவின் உடல்நிலை கவலைக்கிடம்.

சாய்பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு(85) கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சை முறைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொள்கை ஜெயில்ல உள்ளது: விஜயகாந்த்.


அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளது அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். பணங்குடி கிராமத்தில் பிரச்சாரம் செய்து பேசிய விஜயகாந்த்,

இன்றைக்கு அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயில்ல இருக்கிறார். ஆக அண்ணா திமுக கொள்கையே ஜெயில்ல இருக்கு. நான் தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கேன் என நினைக்கிறேன் என்றார்.

விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என விஜயகாந்த் பேசியபோது, தேமுதிகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.

இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.

தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர்.

கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் - விஜயகாந்த் ஆத்திரம்.

நாகர்கோவில், கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் என குமரி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து கூச்சல் போட்ட தொண்டரையும் அவர் கூட்டத்தில் இருந்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மனித நேயம், அன்பு அனைவருக்கும் அவசியம். பகவத் கீதை, பைபிள், குர் ஆன் ஆகிய மூன்றும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. வேட்பாளர் யார், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் அதுதான் முக்கியம்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன் - பூனம் அறிவிப்பு.


உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் பொதுமக்கள் நிர்வாணமாக காட்சி தரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம். இந்த நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், பூனம் எங்கே என்று கேட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டர் தளத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பூனத்தின் தரப்பில் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெளனத்தைக் கலைந்து வாய் திறந்துள்ளார் பூனம். இதுகுறித்து அவரது மேலாளர் விபின் கூறுகையில்,

பூனம் பாண்டேவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச பத்திரிகைகள் பூனத்தை அணுகின. தங்களது அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருமாறு அவை கேட்டுள்ளன. ஆனால் அதை பூனம் நிராகரித்து விட்டார். இந்தியா வென்றால் நிர்வாணமாவேன் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், பொது இடத்தில் நிர்வாணமாவேன் என்று அர்த்தம் இல்லை. மாறாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டுமே நிர்வாணமாவேன் என்றுதான் அர்த்தம்.

எனவே பொது இடத்தில் பூனம் நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை. எந்தப் பத்திரிகைக்கும் அவர் நி்ர்வாணமாக போஸ் தரவும் மாட்டார் என்றார்.

இதனால் பூனத்தின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜொள்ளு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கிடையே பூனத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து விபின் கூறுகையில், மாரல் போலீஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் பூனத்தை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். நிர்வாணமாக காட்சி தரக் கூடாது என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றார்

தேமுதிகவிற்கு பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும் - சுப்ரமணியம்சாமி


சுப்ரமணியம்சாமி பேட்டி ;

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தேர்தல் ஆணையம் பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும். முரசு சின்னம் தரக்கூடாது. என்று கோரிக்கை வைத்துள்ளாதாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது. என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தொண்டர்களைவிட, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.

விஜயகாந்த் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுஇடங்களில் அநாகரிகமாக நடந்து வருகிறார். அவர் வைத்திருக்கும் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும்.

குடிச்சிட்டு வற்றார். குடிக்காம அதுமாதிரி பேசமுடியாது. அப்படியே பிரச்சாரம் பண்றார். போற இடங்கள்ல வாய்க்கு வந்த மாதிரி பேசறார். வேட்பாளர அடிக்கிறார். பொது இடத்திலே அநாகரிகமா நடந்துக்கிறார், நிதானம் இல்லே. விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவர் ஒரு ஜானி வாக்கர் என்றார்.

அதனால குடிகாரருக்கு பாட்டில் சின்னம்தான் லாயக்கி, அதான் பொருத்தம். முரசு சின்னம் தரக்கூடாது. இவ்வாறு சுப்ரமணியம்சாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்

அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!!

ஐசிசி உலகக் கோப்பை இன்னும் சுங்கத்துறையிடம்தான் உள்ளது என்றும், இந்திய வீரர்களிடம் கொடுக்கப்பட்டது நகல் கோப்பை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Mahendra Singh Dhoni poses  World Cup Trophy
Getty Images
வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் 35 சதவீத தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரி கட்டப்படவில்லை.

இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர். ஆனால் உலகக் கோப்பை தங்களிடம்தான் இருப்பதாக முன்பு ஐசிசி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அது மேலும் விரிவாக தெரிவிக்கவில்லை. சுங்கத்துறையிடம் கேட்டதற்கு, வரி கட்டாததால் உலக்க கோப்பை தங்கள் வசமே இருப்பதாகவும், வரியைக் கட்டினால் மட்டுமே கோப்பையைத் திருப்பித் தருவோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கருத்து கணிப்பு ஜெயிக்காது; மக்கள் கருத்துதான் ஜெயிக்கும்! - வடிவேலு


"கருத்து கணிப்பு வெளியிடுவதால் எதிரணிக்கு தேர்தல் வெற்றி வந்துவிடப் போவது இல்லை; மக்கள் கருத்துதான் வெற்றியைத் தரும். அந்த வெற்றி திமுகவுக்குதான்'' என்று தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார். காலையில் திருச்செந்தூரில் பிரசாரம் தொடங்கினார். பல்வேறு ஊர்களில் ஆதரவு திரட்டிவிட்டு, பழையகாயல், முத்தையாபுரம் வழியாக பகல் 1 மணி அளவில், தூத்துக்குடி அண்ணாநகருக்கு வந்தார்.

அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டகள் மத்தியில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து பேசினார். அப்போது நடிகர் வடிவேலு கூறியதாவது:

அடிப்படை தேவைகள்

"எல்லோரும் என்னயப் பார்த்து சிரிக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நான் விளையாட்டு பொம்மையாக இருக்கேன். நீங்கள் தினமும் என்னை டி.வி.யில் பாக்குறீ்ங்க. ஆனா, உங்களை பார்க்கிற வாய்ப்பை எனக்கு நம்ம கலைஞர் கொடுத்து இருக்கிறார்.

எல்லா மக்களுக்கும் அடிப்படை தேவையான உணவு, உடை, வீடு அவசியம். இது எதுவும் கிடைக்காத மக்களுக்கு அடிப்படை தேவைகளை கலைஞர் செய்து கொடுத்து உள்ளார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் கலைஞர் திட்டங்களை பார்த்து என் மனம் குளிர்ந்து விட்டது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்திருக்கிறார். ஏழை மாணவ-மாணவிகள் படிக்க சமச்சீர் கல்வி, இலவச சீருடை என்று பல திட்டங்களை தந்து உள்ளார். 108 ஆம்புலன்சு திட்டம் மூலம் ஏராளமான உயிர்கள் பிழைத்து உள்ளன.

பல்... செல்...

பல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்போது செல் (செல்போன்) இல்லாமல் இருக்க முடியாது. செல்போன் இருப்பதால் அவசரம் கருதி, மக்கள் எளிதாக 108 ஆம்புலன்சை அழைத்து விடுகின்றனர். அந்த திட்டத்தால் உயிர் பிழைத்தவர்களின் வாழ்த்துக்களாலேயே கலைஞர் 108 வயதுக்கு மேல் வாழ்வார்.

வீட்டுக்கு பெரியவர் இல்லாமல் சிறப்பு இல்லை. அதே போன்று தமிழகத்துக்கு ஒரு பெரியவராக தலைவர் கலைஞர் உள்ளார். காமராஜர், பெரியார், அண்ணா இப்போது இல்லை. ஒரே தலைவராக கலைஞர் உள்ளார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று அங்கு உள்ள சிறந்த திட்டங்களை பார்வையிட்டு இங்கு வந்து செயல்படுத்துகிறார்.

எதிர் கூட்டணியில் குழப்பம்

எதிர் கூட்டணி குழம்பிப் போய் இருக்கிறது. அவர்களால் கலைஞர், நிழலைக் கூட நெருங்க முடியாது. முதல்வர் இருக்கை என்ன மியூசிக்கல் சேரா? தலைவர் என்பதற்கு தகுதி வேண்டும். தலைவர் என்று கூறிக் கொள்கிற ஒருவர் வேட்பாளரை அடிக்கிறார். அவர் ஜெயித்தால் மக்கள் அவரிடம் திட்டங்களை பெற முடியுமா?

கருத்து கணிப்பு வெளியிடுகிறார்கள். அதன்படிதான் நடக்கப் போகிறதா? மக்கள் கருத்துதான் வெற்றியை தேடித்தரும். தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்க போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தென்மாவட்டங்களின் தேர்தல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவர் மு.க.அழகிரி. ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுத்தார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

எல்லா மக்களிடமும் எழுச்சி உள்ளது. ஆகையால், வருகிற 13-ந் தேதி அன்று தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்...", என்றார் வடிவேலு.

வடிவேலு கூட்டத்தில் கல்வீச்சு

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வடிவேலு மீது சரமாரியாக

கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரவில் வடிவேலு பேசிக்கொண்டி ருந்தார். அப்போது, விஜயகாந்த் ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான் என்று வடிவேலு கூறியபோது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஆனால் கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

வடிவேலு விஜயகாந்த்தை காட்டுத்தனமாக விமர்சனம் செய்து வருகிற போதிலும், இதுவரை விஜயகாந்த், வடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பதிலுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுக்கு துணைபோகும் காங்கிரஸுக்கு தமிழர்களிடம் ஓட்டு கேட்க தகுதியில்லை: சீமான்


ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர என்ன தகுதி இருக்கிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான தங்கபாலுவுக்கு எதிராக நேற்று மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசியதாவது,

63 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை அத்தனை தொகுதிகளிலும் தோற்க வைக்க நாம் களம் இறங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சியினரும் இதே பணியில் தான் உள்ளனர். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் 40ல் போட்டி வோட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பீகார் மாநிலத்திலாவது காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தது. இங்கு அதுவும் கிடைக்காது. நாங்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராட வந்த அரசியல்வாதிகள் இல்லை.

உலகத்தில் உள்ள சிறிய நாடுகளில் கூட தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 8 மணி நேரம், 10 மணி நேரம் என்றும், சில கிராமங்களில் 3, 4 நாட்களுக்கு கூட மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்சாரமே இல்லையாம், இதில் இலவச மின்சாரத் திட்டமா? நல்ல வேடிக்கை. நாங்கள் இலவச மின்சாரம் கேட்கவில்லை, தடையில்லா மின்சாரத்தைத்தான் கேட்கிறோம்.

இலங்கையிலே ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்துவிட்டு, தற்போது தமிழர்களிடம் வாக்கு கேட்டுவர காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது?.

யாராவது உங்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுக்க வந்தால், அவர்களிடம் உங்களுக்கு இந்த பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? என்று கேளுங்கள். அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். மக்களின் உழைப்பை சுரண்டி சேர்த்த பணம். அதை வாங்கிக் கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் தோல்விக்கான காரணத்தை ஊடகங்கள் ஆராயும்போது, ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த துரோகத்திற்காகத்தான் தோல்வி கிடைத்தது என்பது தெரியவேண்டும் என்றார்.

வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் நடந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாரை ஆதரித்து சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் இருக்கையில் நாம் மட்டும் ஏன் கங்கிரஸுக்கு எதிராக யுத்தம் செய்கிறோம். ஏனென்றால் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்துள்ளனர்.

தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி துணைபோகிறது. இந்த அக்கிரமங்களையெல்லாம் இந்திய கடலோர காவல் படையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.தமிழக மீனவர்கள் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, தமிழக மீனவர்களை கொன்று குவிக்கிற இலங்கை அரசுக்கு துணை போகிற காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடியுங்கள். ஈழத்தமிழர்கள் வாழ வேண்டும் என்பதற்காக அள்ளி, அள்ளி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். எனவே இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற டி.ஜெயக்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார்.

நாட்டை மாசுபடுத்தும் சாயத்தொழில் - தீர்வு என்ன?

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலைப் பொழுதினில் நொய்யல் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப் பாளையம் அணையைப் பார்வையிட என் போன்ற சுற்றச்சூழல் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சென்றபோது ஒரு முண்ணனி தொலைக்காட்சியின் நிருபர் முன் ஒரு பாட்டி பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்...

"எங்க விவசாயத்தை நாசம் செய்து எங்க வாழ்க்கையை நாசம் செய்த திருப்பூர்காரனுக நாசமாப்போவானுக.. அவனுக புள்ளைகுட்டி எல்லாம் நாசமாப்போகுங்க... எங்க சாபம் அவங்கள சும்மாவிடாது" என்ற பாட்டியின் பேட்டி என்னை தூக்கிவாரிப்போட்டது... (அதே பாட்டி பாலமுருகனின் நொய்யல் பற்றிய குறும்படத்தில் பேட்டி கொடுத்துள்ளதாக ஞாபகம். இவ்வளவுக்கும் அந்தப் பாட்டி எந்தச் சமூகம் திருப்பூரில் மிகுதியாக பனியன் & சாயமிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளதோ அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது அவரது பேச்சில் தெரியவந்தது…).

நண்பர்களுடன் வேகமாக ஓடிப்போய் அணைமீது ஏறி பார்த்தபோது ஏதும் புரியவில்லை. அணையில் அவ்வளவு தண்ணீர் இருக்க, ஒரத்துப்பாளையம் மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று அன்றாட தேவைக்கு நீர்கொண்டுவந்து உபயோகித்தார்கள். பணப்பயிர்களான வெற்றிலை போன்ற தாவரங்கள் நன்கு வளர்ந்தும் வளராமலும் ஒருவிதமாய் குறுகிப்போய் வாடிக்கொண்டிருந்தன. இள‌நீரைக் குடிக்க‌லாம் என்று கேட்ட‌போது ஒரு இள‌நீரை வெட்டிக்கொண்டுவ‌ந்து கொடுத்தார்க‌ள். வாயில் வைக்க‌ முடியாத‌ப‌டி ஒருவித ஆகாத‌ சுவையோடு இருந்த‌து. என் உட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ர் அணை நீரில் கையால் அல‌ம்பினார். சில‌நிமிட‌ங்க‌ளிலேயே

கை அரிப்பெடுத்து சொறிய‌ ஆர‌ம்பித்தார். ஆடு மாடுக‌ள்.. நாய், ப‌ன்றிக‌ள் கூட‌ அந்த‌ நீரை குடிப்ப‌தில்லை‌!.

ஒரு காலத்தில் காவேரி வரண்டபோது அதை ஈடுகட்டும் வகையில் நொய்யல் பெருக்கெடுத்து ஓடி தஞ்சை வளம் காத்ததால் அதற்கு காஞ்சிமாநதியென்று பெயர் வந்ததாக சிலர் சொல்லக்கேட்டுள்ளேன். இன்று நொய்யல் வரண்டுவிட‌வில்லை. ஆனால் அதன் நீர் சீண்ட ஆள் இல்லாமல் உள்ளது வேதனைக்குரியது. திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் அனைவருமே 11,000 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கொடுத்து வந்த ஏற்றுமதி வியாபாரம்... சில லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துவந்த தொழில் நசிகிறது நாட்டுக்கு நல்லதா என்று தேசபக்தி வேடம் போடுகிறார்கள், சாய ஆலை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள்! தங்கள் தொழிலின் மூலம் ஒரு நதிக்குச் சமாதிகட்டி உள்ளோம் என்கிற உண்மையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

எது தேசபக்தி என்ற கேள்வி பிறக்கிறது. நம் மண்ணின் விவசாயம் நசுக்கப் பட்டுள்ளது; இயற்கை அழிக்கப்பட்டுள்ளது; நமக்கான உணவு விளைச்சல் நிலங்கள் ஒழிக்கப்பட்டு உள்ளன; விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து விரட்டப் பட்டுள்ளனர். விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு சீரழிகிறது. எது தேசபக்தி என்ற கேள்வி மீண்டும் பிறக்கிறது! ஒரத்துப்பாளையம் அணை விவசாயிகளின் தேவைக்காக காமராசர் ஆட்சிக்குப் பின் கட்டப்பட்ட ஒரே அணை. அதுவும் இராசயன நீர்ச் சேர்க்கையால் ஒரு நீர் குண்டாக மாறி நிற்கிறது. அது கட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமலே வீணாக்கப்பட்டுவிட்டது. சரி எல்லோருமே குற்றம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டி ருந்தால் தீர்வு என்ன?

அமெரிக்கா & அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு நதிகளோ விவசாயமோ நாசமாகக் கூடாது என்பதில் தேசபக்தியோடு இருந்துகொண்டு, நீரை & மண்ணை நாசமாக்கி தயாராக்கும் பொருட்களை மற்றநாடுகளைச் செய்யச்சொல்லி வாங்கி
பயன்படுத்துகிறார்கள்..அந்தவகையில் மேலை நாட்டுக்காரன் எந்தக் கலரில் தான் பின்னலாடைகளை அணிய விரும்புகிறானோ அந்த வண்ண ஆடைகளை திருப்பூருக்கு ஆர்டர் கொடுக்கிறான். உனக்கு என்ன கலரில் பின்னலாடை தேவையோ அந்தக் கலரில் தயாரித்துக் கொடுக்க நான் தயாராக உள்ளேன். அதனால் என் தாய்நாட்டின் நதியோ விவசாயமோ நாசமாவது பற்றி எனக்கு கவலையில்லை என்கிற நமது பின்னலாடை & சாய ஆலை முதலாளிகளின் போக்கு மாறவேண்டும். தூங்கிக் கொண்டோ அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டோ நதிகளும் விவசாயமும் நாசமாவதை வேடிக்கை பார்க்கும் தற்போதைய மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு, குறைந்தபட்சம் விவசாய நலன் பற்றி சிந்திக்கிற மனிதர்களை நியமித்து, திருப்பூரின் சாய‌மிடும் தொழில் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

இன்றைய நிலையில் திருப்பூர் சாய ஆலைகள் செயல்படா விட்டாலும் திருப்பூருக்கான சாயமிடும் பணியானது லாரி மூலம் துணிகளை எடுத்துச்சென்று ஈரோடு, பவானி, திண்டுக்கல், கோவை போன்ற ஊர்களில் நடந்துகொண்டுதான் உள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு இது தெரியாதா?. மாசுகட்டுப்பாட்டு வாரியம் என்பது லஞ்சம் தலைவிரித்தாடும் அரசுத் துறை ஆகிவிட்டதோ என்று நம்ப வேண்டி உள்ளது.

நொய்யல் நதி, ஜம்மனை நதி, நல்லாறு என்ற மூன்று நதிகளையும் அவை சார்ந்த 90 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களையும் நாசப்படுத்திய பின்னலாடைக்கான சாய ஆலைகள் காவிரியையோ அல்லது இதர நதிகளையோ விவசாய நிலங்களையோ நாசப்படுத்தாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்துமா?

சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி நீதிமன்றம் அறிவித்து நான்கு நாட்கள் ஆன பின்பும் நொய்யலில் 4100 அளவு உப்பு நீர் சாயக்கழிவுநீருடன் செல்வது என்பது, சாயப்பட்டறை உரிமையாளர்களில் சிலரோ பலரோ நீதிமன்ற உத்தரவை
மதிக்கத் தயாரில்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அதோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்பது லஞ்சம் தலைவிரித்தாடும் அரசுத் துறை ஆகிவிட்டதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.

04.02.2011 வெள்ளியன்று நடந்த வேலை நிறுத்தத்தில் பல பனியன் கம்பனிகள் கலந்துகொள்ளாமல் வேலை செய்தன. ஏன் இப்படி என்ற விசாரணையில் கேள்விப்பட்டது, 2005 க்கு முன்பாகவே விவசாயிகளுக்கு நட்ட ஈடு & தண்ணீர் சுத்தகரிப்பு நிலைய பணிக்கான செலவு என்ற வகையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஒருகிலோ துணி சாயமிட ஏற்கனவே உள்ள கூலியுடன் ரூபாய் 25 வரை சேர்த்து வாங்கிவிட்டு எந்தச் செல‌வினங்களுக்காக வாங்கினார்களோ அதை முறையாகச் செய்யாமல், பல சாயப்பட்டறை முதலாளிகள் தங்கள் அல்லது உறவினர்களின் பெயரில் வீடு, காடுகளை வாங்கிப் போட்டுள்ளார்கள். வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதைச் சுத்தகரிப்பு நிலைய கணக்குகளும் வருமான வரித்துறையும் விவசாயிகளும்தான் கூறவேண்டும்.

க‌ருப்பு, பாட்டில்கிரீன், பிள‌வ‌ர்சென்ட் ம‌ற்றும் அட‌ர்த்தி அதிக‌ம் (FAST COLOUR) கொள்ளும் க‌ல‌ர்க‌ளுக்கு அர‌சு த‌டை விதிக்க‌ வேண்டும். முத‌லாளிக‌ளும் தேச‌ பாதுகாப்பிலும் சுற்றுச்சூழலிலும் த‌ங்க‌ளுக்கும் ப‌ங்கு உண்டு என்ப‌தை உண‌ர்ந்து இதைக் க‌டைப்பிடிக்க‌ முன் வ‌ர‌வேண்டும். (அடர்த்தி மிகு கலர்கள் (FAST COLOUR) சாயமிடும்போது, அந்த வேலை செய்பவர்கள் தங்கள் உடல்மீது இராசயன பொருட்கள் பட்டுவிடாமல் இருக்க பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொள்கிறார்கள். மேலும் சில இராசயன பொருட்கள் கையில் பட்டால் துளையிட்டுவிடும் அபாயமும் உண்டு. மனிதனையே துளைக்கும் சாயமிடும் தொழிலின் மூலப்பொருட்களின் கழிவுகள் நிலத்தில் தேங்கி நிலத்தடிநீரில் இணைந்தால் விவசாயம் என்ன ஆகும்?).

அமெரிக்காவிலிருந்து வரும் கோக்கோகோலா என்ற பானத்தின் தயாரிப்பிடம் அமெரிக்காவில் இல்லை. கோக்கோகோலா தயாரிப்பு என்பது இராசயனம் சம்பந்தப்பட்ட மாசுவை வெளியேற்றும் தொழில் என்பதால், அது விவசாயத்தை நாசப்படுத்தும் என்பதால், அந்தத் தொழிற்சாலையைத் தேசபக்தி கொண்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டிற்குள் நடத்தவில்லை என்பதைச் சாய ஆலை, பின்னலாடை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். மேலை நாடுகளின் தேவைக்காக இந்தியாவை விவசாயம் அழிந்த ஒரு குப்பைக்கூடையாக மாற்றலாமா?

முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இயற்கையை நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லவேண்டாமா?

பனியன் உற்பத்திக்காக பலப் பல இயந்திரங்களை தயாரிக்கும் மேற்குலக நாடுகள் ஏன் பனியனைத் தயாரிக்க முன்வருவதில்லை? பின்னலாடை சாயஆலை உரிமையாளர்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.

செயற்கை ரசாயன சாயங்களை தவிர்ப்பதன் மூலமும் கலர் பருத்தி விளைவிப்பதன் மூலமும் சாயப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளும் சாயப்பட்டறை உரிமையாளர்களும் இதை ஏற்றுக்கொண்டு நாட்டின் நலனே முக்கியம் என்று ஒப்புக்கொள்வார்களா? கேள்விக்குறிதான்! சாய ஆலை கழிவுநீரை குழாய்மூலம் கடலுக்குக் கொண்டு செல்வதில் உள்ள இடையூறுகள், பாதிக்கப்படும் விவசாயம், மீன்பிடி தொழில் பற்றி தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும்! எனவே இதுவும் சாத்தியமில்லா ஒன்றுதான்.

சாய‌ ஆலைகளிலிருந்து வெளியேறும் க‌ழிவு நீரில் உப்பின் த‌ன்மை விவ‌சாய‌ நில‌ங்க‌ள் ஏற்றுக்கொள்ளும் 2100 அள‌வைவிட‌ குறைவாக‌ இருப்ப‌தை விவ‌சாயிக‌ள் மூல‌ம் அடிக்க‌டி நீதிம‌ன்ற‌ம் உறுதிசெய்துகொள்ள‌ வேண்டும்.

இது ஒன்றுதான் சாய ஆலைகளின் பிரச்சனைக்குத் தீர்வு! மற்றவை அனைத்தும் தேவையில்லாமல் பேசப்படும் வீண் விவாதங்கள்தான்.!

இது தவிர சாய ஆலைக்கழிவுகள் மூலமாக வந்துள்ள, மூட்டை மூட்டையாக கட்டிப் போடப்பட்டுள்ள காற்றின் மூலமாக மனிதனை முடமாக்க காத்திருக்கும் திடக் கழிவுகளுக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும்.

நீதிமன்றமோ மாசுக் கட்டுப்பாட்டுத் துறையோ சாய ஆலை முதலாளிகளோ மக்களோ பத்திரிக்கைகளோ இந்தத் திடக் கழிவு பற்றி வாய்பேசாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. பாதிப்பு வந்தபின்புதான் அது பற்றி பேசுவார்களோ என்னவோ.?

பணம் மட்டுமே குறியாக இருந்து அதை சம்பாதித்து அடுத்த தலைமுறைக்கு வைத்துவிட்டுச் செல்லும் முதலாளிகள் தங்கள் வாரிசுகளுக்கு இயற்கையை நல்ல முறையில் விட்டுச்சென்றால் தானே அவர்கள் பசி, நோய், நொடி இன்றிவாழ முடியும்?? பசிக்காக பணக்கட்டுகளையும் தாகத்திற்காக சாயக்கழிவு நீரையுமா பயன் படுத்த முடியும்.?

ஒருநாட்டின் சுயமுன்னேற்றம் என்பது விவசாயத்தை அழிக்கும் தொழில் வளர்ச்சியா?

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?... சீரழிப்பார்களா?...

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

- கதிர்.

.inneram.com

புற்று நோயை உண்டாக்கும் அணு உலைகள.

ஜப்பானைத் தாக்கிய சுனாமி அந்நாட்டை பேயாட்டம் ஆடித் தீர்த்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கி விட்டது. அது ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி அகில உலக பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது.

ஜப்பானின் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பூகோஷிமா, டோகாய், ஒனகாவ அணுமின் நிலையங்கள் வெடித்து சிதறியதும் அதனால் ஏற்பட்ட கதிர்வீச்சும்தான் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதி நவீன தொழில்நுட்பத்துக்கு பெயர் போன ஜப்பானிலேயே இந்த விபத்து நடந்திருப்பது ஒட்டு மொத்த உலகத்தையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.

அணு மின்சாரம் அணுஉலையில் யுரேனியம் என்ற கதிரியக்க பொருளிலிருந்து வெளிப்படும் நியூட்ரானை திரும்ப யூரேனியத்தின் மேல் செலுத்தும்போது மூன்று மடங்கு நியூட்ரான் கிடைப்பதோடு 220 மெகாவாட் வெப்ப ஆற்றலும் கிடைக்கிறது. மூன்று மடங்கு நியூட்ரான் தொடர் இயக்கமாக பல்கி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த ஆற்றல் அணு உலைகளில் காரியத்தகடு மற்றும் கரிக்கட்டைகளால் மட்டுப்படுத்தப்படுகிறது.

அணு உலையில் கிடைக்கும் வெப்பம் கனநீரால் நீராவியாக்கப்பட்டு மின்சார ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானதா? இந்தியாவில் கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் மகாராஷ்டிராவிலும் அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. ஜப்பானில் 40-க்கும் மேற்பட்ட அணுஉலைகள் உள்ளவை குறிப்பிடத்தக்கது.

ஆனால் நமது நாட்டில் உள்ள அணுஉலைகள் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டவை. திடீரென இணைப்பு துண்டித்தாலும் தானாகவே குளிரூட்டி இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 31 மீட்டர் உயரமான சுவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.யுரேனியத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கத்தை திடீரென செயலிழக்கச் செய்ய முடியும். அப்படி யுரேனியத்தின் கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்ய போரிக் அமிலம் பயன்படுகிறது.

போரிக் அமிலம் நியூட்ரான் பாய்சன் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு அணுஉலைகளுக்கான குளிரூட்டி செயல் படாத நிலை ஏற்படுமானால் தானியங்கியாக இந்த போரிக் அமிலம் அணுஉலைகளுக்கு சென்று சேரும் வண்ணம் போரிக் அமிலம் குளம் தயாராக அணுஉலைக்கும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எந்த ஒரு சமயத்திலும் எந்த ஒரு சூழ்நிலை யையும் பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது என்கிறார் துளிகள் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் திருத்தணிகாசலம்.

ரஷ்யாவில் உள்ள உக்ரைனில் செர்னோவில் என்ற இடத்தில் அணுஉலை விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த கதிர்வீச்சின் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, மூளை புற்று நோய், ரத்த புற்றுநோய், தைராய்டு பாதிப்பு உணரப்பட்டது. பொதுவாக கதிர்வீச்சு ஏற்பட்டால் ஆல்பா, பிட்டா, காமா கதிர் வீச்சாக வெளிப்படுகிறது.காமா கதிர்வீச்சால் மனித உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகிறது.

பின்னர் இது புற்றுநோயாக மாறும். இந்நோய் அடுத்த தலை முறையைக் கூட பாதிக்கும் ஆபத்து உள்ளது.ஜப்பானில் சுனாமி காரணமாக நடந்த உணு உலை வெடிப்பால் உலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. அணு கதிர்வீச்சு அமெரிக்கா, கொரியா நாடுகள் வரை பரவியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்கிறார் டி.எம்.ஜே.ஏ.டி. அறக்கட்டளை தலைவரும் சமூக ஆராய்ச்சியாளருமான மாதா மலை திருமேனி.

இவர் நம்நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அணு உலைகள் அமைப்பதற்கு எதிராக போராடி வருகிறார். அவர் கூறியதாவது:-

கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் மக்கள் வசிக்காத தீவு பகுதிகளில் அமைத்து, அங்கிருந்து கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு வரலாம். தற்போது இயங்கிவரும் அணுமின் நிலையங்களை படிப்படியாக செயல் இழக்கச் செய்வது நல்லது. புதிய அணுமின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மனித உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அணுமின் நிலையங்களை அமைக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? மின்சார பற்றாக்குறையை சமாளிக்க காற்றாடி ஆலைகள், சூரிய மின்சாரம், அனல் மின்நிலையங்கள், இயற்கை எரிவாயு மின்திட்டங்கள் அதிக அளவில் அமைக்கலாம்.

இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நீர்வளம் நன்றாகவே உள்ளது. இதற்காக நதிநீர் இணைப்பு திட்டத்தை அவசர கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டும். இதன்மூலம் பல இடங்களில் நீர் மின்சக்தி திட்டங்களை உருவாக்கலாம். தற்போது அணுமின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் நீர் மின்சக்தி நிலையங்களில் பணி அமர்த்திடலாம்.

நீர் மின்சக்தி திட்டங்களால் மின்சாரம் கிடைப்பதுடன், விவசாயம், தொழில் வளம், நிலத்தடி நீர், குடிநீர் போன்றவை பல மடங்கு பெருகும். மற்ற நாடுகளைவிட நம் நாட்டில்தான் சூரிய ஒளி அதிகம் கிடைக்கிறது. எனவே சூரிய ஒளி மின்சக்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடிக்கணக் கான மக்களின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அணு உலைகளை அமைக்க நம் நாட்டு தலைவர்கள் எதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

உயிருக்கு வேட்டு வைக்கும் அணுமின் நிலையங்களை அப்புறப்படுத்தி, மற்ற மின் திட்டங்களை அவசரகால அடிப்படையில் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்னொரு சுனாமியோ அல்லது பூகம்பமோ ஏற்பட்டால் அணு உலைகள் வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகும் அபாயம் உள்ளது.

இதனால் நாம் அணு உலைகளுக்கு விடை கொடுப்போம். மனித உயிர்கள் அழியாமல் பாதுகாப்போம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த சமூக ஆராய்ச்சியாளர் மாதாமலை திருமேனி. `துளிகள்' சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, டி.எம்.ஜே.ஏ.டி. அறக்கட்டளை அமைப்பு உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அணு உலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவில் உள்ள அணுமின் உலைகள் பூகம்பம் சுனாமி பெரிய அளவில் தாக்கப்படும்போதும் பாதிக்காத தொழில் நுட்பம் உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால் இத்தகைய எந்தவொரு தொழில்நுட்பமும் திடீரென நிகழும் இயற்கை சீற்றங்களை தாக்குபிடிக்குமா? என்பது சந்தேகமே. என்னதான் தானியங்கி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்களில் இவை செயலற்று போனது என்பதே உண்மை. எனவே இதனை மேலும் செம்மைப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்போது உள்ள அணுமின் நிலையங்கள் முழுக்க முழுக்க பாதுகாப்பானவை. மிக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் விபத்தே நடக்காது என்றும் அமெரிக்கா, ரஷியா கூறுவதை நமது விஞ்ஞானிகளும் வழிமொழிகிறார்கள் என்றாலும் ஒரு சந்தேகம்.

நவீன தொழில் நுட்பம் விபத்தே நடக்காது என்றால் அணுசக்தி மசோதாவில் அணுஉலை விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கும் மேல் தர வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற சொல்லி அமெரிக்கா மற்றும் சர்வதேச அணுசக்தி கமிஷன் இந்தியாவுக்கு ஏன் நெருக்கடி தரவேண்டும். எனவே நமது விஞ்ஞானிகள் அமெரிக்க, ரஷ்யா விஞ்ஞானிகள் சொல்வதை அப்படியே நம்பாமல் பாதுகாப்பு முறைகளில் மேலும் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தல்: 11 லட்சம் புதிய வாக்காளர்கள்.


தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓட்டுப் போடச் செல்லும் வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்பும் வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் படி மொத்தம் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 3 லட்சம் பேர் ஆண்கள். 2 கோடியே 28 லட்சம் பேர் பெண்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.

11 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். திருவள்ளூரில் 1 லட்சம் புதிய வாக்காளர்களும், காஞ்சீபுரத்தில் 91 ஆயிரம் புதிய வாக்காளர்களும், மதுரையில் 65 ஆயிரம் புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.