Tuesday, December 6, 2011

கனிமொழிக்கு, இயக்குனர் பார்த்திபன் எழுதிய கவிதை.



மாநிலங்களவை உறுப்பினர்
கனிமொழி அவர்களுக்கு எழுதியது...

இனி மொழி எதற்கு?
இரு விழி உடைந்து ஒழுகிய போது!

ஆதித்யா வெளிவந்த போது
சூல் கொண்ட ஆனந்தத்தின்
அடர்த்தியை விட,

தாய் வெளிவந்த போது
அவரடைந்த ஆனந்தத்தின் பேரே
பேரானந்தம்!

பொன்னாடையாய்,பூங்கொத்தாய்,
poster-ராய், இன்னும்
சக்கரம் கட்டிக்கொண்டு வந்த
அத்துணை வாழ்த்துகளுக்கும். - ---பின்பொரு
அரசியல் இருக்கலாம்.
ஆனால்,

அந்த சின்னஞ்சிறு மனிதனின்
அன்பு, தாய்ப்பாலுக்கு ஈடு!

நீங்கள் நாளை
தி மு கவின் கவின்மிகு
புரட்சி தலைவியாகலாம்,
ஆதித்யா என்றுமே
அ தி மு க அமைச்சர்தான்;
எல்லாமே அவருக்கு அம்மா'தான்!

ஆரத்தழுவி அருவியாய்
அன்பை பொழிய,
ஈரக் குருவியாய்
இமைகள் சிறகடிக்க-உங்கள்
ஈரிதயம் இணைந்து
எடை கூடிய தருணத்தை
வாழ்த்தவே என்னிதயம்
இக்கடிதம் எழுதியது...

ப்ரியமுடன்,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

.