Wednesday, October 12, 2011

ஊர்த்துவ பத்மாசனம், பர்வதாசனம், குப்த பத்மாசனம்.

ஊர்த்துவ பத்மாசனம்.
ஊர்த்துவ பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, பத்மாசன நிலையில் அமரவும். இரண்டு முழங்கால்களையும், மார்பு வரையில் தூக்குங்கள். அப்போது உங்களின் கரங்கள் கும்பிட்டநிலையில், கால் மூட்டுக்களை ஒட்டினாற்போல இருக்கட்டும். அடுத்தபடியாக, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, ஒட்டுமொத்த உடம்பையும் பத்மாசன நிலையில், அப்படியே தூக்கவும்.

பயன்கள்:

தோள்பட்டை வலுப்பெறும். உடல் எடை குறையும். கைவிரல்கள் உறுதியாகும். விரல் நடுக்க நோய் நீங்கும். எழுத்து-தட்டச்சு துறையில் இருக்கும் அத்தனை பேருக்கும், ஊர்த்துவ பத்மாசனம், மகத்தான பலன்களை அள்ளித்தரும்.


பர்வதாசனம்.
பர்வதாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் அப்படியே தலைக்கு மேல் தூக்கி, கும்பிட்டநிலையில், கால்மூட்டுகளின் பலத்தில், மெல்ல எழுந்திருக்க முயலவும். ஆழ்ந்த சுவாசத்தில் 15 விநாடி இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

நுரையீரல்-இதய நோய்கள் அணுகாது. மாரடைப்பு வராது. ரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்கலாம். ஆஸ்துமா தொந்தரவுகள் நீங்கும். தோள்பட்டைகள் வலிவும், வனப்பும் பெறும்.


குப்த பத்மாசனம்.
குப்த பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, பத்மாசனநிலையில் அமரவும். வலதுகையை முன்புறமாகவும், இடது கையை பின்புறமாகவும் ஊன்றிய நிலையில், இடுப்பை தூக்கி உடலை முன்னே கொண்டு வந்து குப்புறபடுங்கள். முகம் நேராக இருக்குமாறு செய்ய வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் கொண்டு போய் கும்பிட்ட நிலையில் கையை ஒன்றிணைக்கவும். உங்களின் மோவாய், தரையை பார்த்திருக்கட்டும். ஆசனத்தின்போது, சுவாசம் இயல்பாக இருக்கவேண்டியது முக்கியம்.

பயன்கள்:

முதுகு தண்டு வலுப்பெறும். முதுகு வலி, பிடரி வலிக்காரர்களுக்கு `கண்கண்ட' மருந்து, தொந்தியும் குறையும்.