Friday, November 4, 2011

அர்த்த மச்சேந்திராசனம், அர்த்த மாலாசனம், அர்த்த தனுராசனம்.

அர்த்த மச்சேந்திராசனம்.
அர்த்த மச்சேந்திராசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது முழங்காலை மெதுவாக தூக்கி, இடதுதொடைக்கு பக்கத்தில் நிலைநிறுத்துங்கள். அப்போது உங்களின் வலதுகை, முதுகை சுற்றிக்கொண்டுபோய், வலது கணுக்காலை தொடட்டும். இடது கை விரகள், மடிந்திருக்கும் இடதுகால் மூட்டில் இருக்கவேண்டும். இந்த நிலையில் முகம் வலப்பக்கமாக திரும்பியிருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடி இருந்தபின் இதேபோல் பக்கம் மாற்றிசெய்யுங்கள்.

பயன்கள்:

இடுப்பு- தோள்பட்டை வரையிலான நாளமில்லா சுரப்பிகள் மற்றும் கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவை நன்கு இயங்கும். நீரிழிவு குணமாகும். மூட்டுப்பிடிப்பு, செரிமான கோளாறு ஏற்படாது. உடல்எடை குறைந்து அழகிய தோற்றம் கிட்டும். இளமையும் சுறுசுறுப்பும் நீடிக்கும்.


அர்த்த மாலாசனம்.
அர்த்த மாலாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது பாதத்தை மட்டும் செங்குத்தாக தூக்கி, தரையில் ஊன்றுங்கள். அப்போது உங்களின் வலதுகை, இடதுகை மணிக்கட்டையை பிடித்தநிலையில் இருக்கட்டும். இடுப்புக்கு மேல் உறுப்புகளை திருப்பி பின்புறமாக பார்க்கவும். இது மாதிரி இடப் பக்கமாக மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

வயிற்று கோளாறு, மலச்சிக்கல், மூலநோய், சளி சம்பந்தமான நோய்கள் நீங்கும். அடிவயிற்று தசைகள் வலுப்பெறும். முதுகு தண்டுக்கு நல்ல பயிற்சி. சளி, இதய கோளாறு உள்ளளோருக்கு ஏற்றது. மார்பு விரியவும், இடுப்பு குறையவும் வழிவகுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!


அர்த்த தனுராசனம்.
அர்த்த தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலை வைத்து குப்புறப்படுங்கள். வலது காலை முழங்கால் அளவு பின்னால் மடக்கவும். வலதுகையை பின்னால் கொண்டு சென்று, வலது கணுக்காலை பிடித்து சற்று உள்நோக்கி இழுக்கவும். தலை-வலது முழங்காலை சற்று மேல் நோக்கி தூக்குங்கள். இயல்பான சுவாசத்தில் செய்யவும்.

அதற்கு பிறகு கால்களை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து, சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். வலது காலை தரையில் வைத்து, இடது காலை முழங்கால்வரை மடக்குங்கள். இடதுகையால் இடது கணுக்காலை பிடித்து, முன்புபோல மேலே தூக்க முயற்சிக்கவும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். வயிற்றுப்பகுதி களர்ச்சி அடையும். மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள், வாயு கோளாறுகள், முதுகு தண்டுவலி ஆகிய நோய்கள் நீங்கும்.

600 அறைகள், நவீன வசதிகளுடன் கிண்டியில் உருவாகும் பிரமாண்ட ஓட்டல்.



சென்னை கிண்டியில் ஸ்பிக் பில்டிங் அருகே ஐ.டி.சி. நிறுவனம் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலை கட்டி வருகிறது. 8 ஏக்கர் பரபரப்பளவில் தரை தளம் மற்றும் 10 மாடி கொண்டதாக கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டலில் 600 அறைகள் நவீன வசதிகளுடன் உள்ளன.

இந்த ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகியோரிடம் ஓட்டல் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

ஆனால் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி. ஏ.வும் தீயணைப்பு துறையும் ஹெலிகாப்டர் தளத்துக்கு அனுமதி தரமுடியாது என்று கூறி தடையில்லா சான்று (என்.ஓ.சி.) கொடுக்க மறுத்து விட்டது.

ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும்போது பக்கத்து கட்டிடங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் ஐ.டி.சி. அதிகாரிகள் கூறுகையில் நாங்கள் கட்டி வரும் கிராண்ட் சோழா ஓட்டலில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரில் உள்ள ஐ.டி.சி. குரூப் ஓட்டலான கார்டினியாவில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி இருப்பதால் அதேபோல் இங்கும் ஹெலிகாப்டர் இறங்க வசதி ஏற்படுத்துகிறோம். ஆரம்பத்தில் ஹெலிபேட் இல்லாத வகையில் பிளான் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

இதனால் திருத்திய பிளான் வடிவமைப்பை சி.எம்.டி.ஏ.வில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை. இந்த ஓட்டலை மார்ச் மாதத்திற்குள் திறக்க முடிவு செய்திருப்பதால் ஹெலிபேட் வசதி இன்றி திறக்க முடிவு செய்துள்ளோம்.

ஆனால் விரைவில் ஓட்டல் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்க அனுமதி வாங்கி விடுவோம் என்றனர். சென்னையில் உள்ள ஓட்டல்களில் இதுவரை ஹெலிகாப்டர் வந்திறங்கும் வசதி எந்த ஓட்டலிலும் கிடையாது.

கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிராண்ட் சோழா ஓட்டலில்தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த ஓட்டலை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.