Friday, November 4, 2011

அர்த்த மச்சேந்திராசனம், அர்த்த மாலாசனம், அர்த்த தனுராசனம்.

அர்த்த மச்சேந்திராசனம்.
அர்த்த மச்சேந்திராசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது முழங்காலை மெதுவாக தூக்கி, இடதுதொடைக்கு பக்கத்தில் நிலைநிறுத்துங்கள். அப்போது உங்களின் வலதுகை, முதுகை சுற்றிக்கொண்டுபோய், வலது கணுக்காலை தொடட்டும். இடது கை விரகள், மடிந்திருக்கும் இடதுகால் மூட்டில் இருக்கவேண்டும். இந்த நிலையில் முகம் வலப்பக்கமாக திரும்பியிருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடி இருந்தபின் இதேபோல் பக்கம் மாற்றிசெய்யுங்கள்.

பயன்கள்:

இடுப்பு- தோள்பட்டை வரையிலான நாளமில்லா சுரப்பிகள் மற்றும் கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவை நன்கு இயங்கும். நீரிழிவு குணமாகும். மூட்டுப்பிடிப்பு, செரிமான கோளாறு ஏற்படாது. உடல்எடை குறைந்து அழகிய தோற்றம் கிட்டும். இளமையும் சுறுசுறுப்பும் நீடிக்கும்.


அர்த்த மாலாசனம்.
அர்த்த மாலாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது பாதத்தை மட்டும் செங்குத்தாக தூக்கி, தரையில் ஊன்றுங்கள். அப்போது உங்களின் வலதுகை, இடதுகை மணிக்கட்டையை பிடித்தநிலையில் இருக்கட்டும். இடுப்புக்கு மேல் உறுப்புகளை திருப்பி பின்புறமாக பார்க்கவும். இது மாதிரி இடப் பக்கமாக மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

வயிற்று கோளாறு, மலச்சிக்கல், மூலநோய், சளி சம்பந்தமான நோய்கள் நீங்கும். அடிவயிற்று தசைகள் வலுப்பெறும். முதுகு தண்டுக்கு நல்ல பயிற்சி. சளி, இதய கோளாறு உள்ளளோருக்கு ஏற்றது. மார்பு விரியவும், இடுப்பு குறையவும் வழிவகுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!


அர்த்த தனுராசனம்.
அர்த்த தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலை வைத்து குப்புறப்படுங்கள். வலது காலை முழங்கால் அளவு பின்னால் மடக்கவும். வலதுகையை பின்னால் கொண்டு சென்று, வலது கணுக்காலை பிடித்து சற்று உள்நோக்கி இழுக்கவும். தலை-வலது முழங்காலை சற்று மேல் நோக்கி தூக்குங்கள். இயல்பான சுவாசத்தில் செய்யவும்.

அதற்கு பிறகு கால்களை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து, சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். வலது காலை தரையில் வைத்து, இடது காலை முழங்கால்வரை மடக்குங்கள். இடதுகையால் இடது கணுக்காலை பிடித்து, முன்புபோல மேலே தூக்க முயற்சிக்கவும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். வயிற்றுப்பகுதி களர்ச்சி அடையும். மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள், வாயு கோளாறுகள், முதுகு தண்டுவலி ஆகிய நோய்கள் நீங்கும்.

No comments: