Sunday, May 1, 2011

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி ; டிராவல்ஸ் நிறுவனம் மீது போலீசில் புகார்.

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி;    நாகர். டிராவல்ஸ் நிறுவனம் மீது போலீசில் புகார்

நாகர்கோவில் பகுதியில் செயல்படும் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து அரபு நாடு களுக்கும், இந்தோ னேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்து அனுப்பப்படுவர் என்று அந்த நிறுவனத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் இந்த நிறுவனத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் இங்கு வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இன்று காலையில் இந்த டிராவல்ஸ் நிறுவனம் முன்பு ஏராளமானோர் கூடி நின் றனர். அவர்கள் நிறுவனத்தின் கதவுகளை உடைக்க முயன்றதோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் நேசமணி நகர் போலீசார் அங்கு விரைந்துச் சென்றனர். அவர்களிடம் அங்கிருந்தவர்கள் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தியவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினர்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வள்ளி யூரைச் சேர்ந்த இசக்கித்துரை என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் பார்வதி புரத்தில் இயங்கி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் அரபு நாட்டில் கட்டிட வேலைக்கு சென்றேன். மாதம் ரூ. 18 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியிருந்தனர். அங்கு சென்ற பின்பு எனக்கு ரூ. 7 ஆயிரம் மட்டுமே சம்பளம் தரப்பட்டது. இதனால் நான் அங்கிருந்து திரும்பி வந்து விட்டேன். இதற்காக நான் பெரிதும் கஷ்டப்பட்டேன். என்னை ஏமாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி விட்ட டிராவல்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக டிராவல்ஸ் நிறுவனம் வாங்கிய பணத்தை திருப்பி தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது போல அங்கு திரண்டு நின்ற பலரும் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கும் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை எங்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. சிலருக்கு போலி விசா கொடுத்தும் ஏமாற்றி இருக்கிறார்கள். தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக் கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் பலரது பள்ளி மற்றும் கல்லூரி ஒரிஜினல் சான்றிதழ்களையும், ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ், ஒரிஜினல் பாஸ்போர்ட் ஆகியவற்றையும் டிராவல்ஸ் நிறுவனத்தார் வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால் எங்களுக்கு வேறு கம்பெனிகள் மூலமும் வேலைக்கு செல்ல இயல வில்லை. கடந்த சில நாட்களாக நிறுவனம் திறக்கப்பட வில்லை.

அதன் நிர்வாகிகளையும் காணவில்லை. எனவே தான் போலீசில் புகார் கொடுக்க வந்தோம். இனி போலீசார் தான் டிராவல்ஸ் நிர்வாகிகளை கண்டு பிடித்து எங்களது பணம் மற்றும் சான்றிதழ்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் போலீ சாரிடம் புகார் கூறினர்.

போலி பாஸ்போர்ட்: ஹசன் அலியை விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி.

போலி பாஸ்போர்ட்: ஹசன் அலியை விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி

பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த புனே குதிரை பன்ணை அதிபர் ஹசன் அலி போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கியுள்ளார். இவ் வழக்கு சம்பந்தமாக அமலாக்க பிரிவினர் ஹசன் அலியை விசாரிக்க அனுமதி கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட மும்பை சிறப்பு நீதிமன்றம் ஹசன் அலியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி கூட்டம் அலை மோதல் : திருப்பதியில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

கோடை விடுமுறையையொட்டி கூட்டம் அலை மோதல்: திருப்பதியில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

தற்போது மே மாத கோடை விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுறைவிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் திருப்பதியில் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளிக்கிறார்கள்.

பக்தர்கள் கூட்டத்தையொட்டி வைகுண்டம் காம்ப்ளக்ஸ்சில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது. 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். ரூ.300 டிக்கெட் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

நேற்று லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தங்குவதற்கு அறை இல்லாமல் கோவில் வளாகம், மரத்தடியில் பக்தர்கள் தங்கியுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.

150 ரூபாய்க்கு துப்பாக்கியை விற்ற சிறுவன்.

150 ரூபாய்க்கு துப்பாக்கியை விற்ற சிறுவன்

அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த 8 வயது சிறுவன் பள்ளிக்கு புறப்பட்டான். அப்போது வீட்டில் அவனது தந்தை மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை தனது பேக்கில் எடுத்து வந்தான். அந்த துப்பாக்கியில் 3 குண்டுகள் இருந்தன. அது சட்டவிரோதமான 9 எம்.எம். ரக துப்பாக்கியாகும்.

துப்பாக்கியை எடுத்து வந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனிடம் 150 ரூபாய்க்கு விற்றான். துப்பாக்கியை வாங்கிய மாணவன் பேக்கில் வைத்து தனது வீட்டுக்கு எடுத்து சென்றான்.

அதை பார்த்த அவனது தாயார் இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் புகார் கூறினார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம்.

மேஜிக்' நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம்

வள்ளி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானவர் அலெக்ஸ் (வயது 52). மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்பட ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர், மேஜிக் நிபுணர் ஆவார். 24 மணி நேரம் தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை புரிந்தவர். நடிகர் அலெக்ஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். இன்று அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 4.25 மணிக்கு அலெக்ஸ் மரணம் அடைந்தார்.

அவரது சொந்த ஊரான திருச்சியில் நாளை (திங்கட்கிழமை) அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அமெரிக்க விமானங்களை கடத்தி ஆசியாவில் தாக்குதல் நடத்த பின்லேடன் திட்டம் ; விக்கி லீக் திடுக்கிடும் தகவல்.

அமெரிக்க விமானங்களை கடத்தி ஆசியாவில் தாக்குதல் நடத்த    பின்லேடன் திட்டம்;    விக்கி லீக் திடுக்கிடும் தகவல்

அமெரிக்க விமானங்களை கடத்தி ஆசியாவில் தாக்குதல் நடத்த பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக விக்கி லீக் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மற்றும் ராணுவ தலைமையகம் மீது விமானங்களால் மோதி பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் பலர் உயிர் இழந்தனர்.

இதை தொடர்ந்து பின்லேடனை அமெரிக்கா வேட்டையாட தொடங்கியது. ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஏமனை சேர்ந்த அப்தால்- மாலிக் அப்தால் வகாகப் உள்ளிட்ட 31 அல்கொய்தா தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். அவனிடம் நடத்திய விசாரணையில் அங்குள்ள தோரா போரா மலைப்பகுதியில் பின்லேடன் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அங்கு அமெரிக்க ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து பின்லேடன் தப்பி விட்டான். பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அப்தால்-மாலிக் உள்ளிட்ட 31 பேரும் அமெரிக்க உளவுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

அதாவது அமெரிக்க பயணிகள் விமானத்தை கடத்தி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்களின் மீது மோத செய்து அழிவை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருந்தான். அமெரிக்க கட்டிடங்களில் விமானங்களை மோதி தாக்கியது போன்று இங்கும் நடத்த திட்டமிட்டிருந்தான். அதற்காக இவர்கள் அனை வரும் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக பயிற்சி பெற்று இருந்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பின்லேடனின் அந்த திட்டம் முறியடிக்கப் பட்டது. இந்த தகவல்கள் விக்கி லீக் இணைய தளம் வெளியிட்ட அமெரிக்க தூதரகங்களின் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோன்று பின்லேடனின் ஒரு மகன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாகிஸ்தானின் கராச்சி நகரில், கடந்த 2002-ம் ஆண்டு பாதுகாப்பாக தங்கியிருந்தான். அதற்காக அவனிடம் 20 பாஸ்போர்ட்டுக்கள் இருந்தன.

இந்த தகவலையும் விக்கி லீக் இணைய தளம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் : ஐ.நா.வுக்கு திருமா கோரிக்கை.


இலங்கையில் ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்டது இனப்படுகொலைச் சம்பவம் என அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரியும், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன்,

இலங்கையில் படுகொலை நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தாமதமாக அறிக்கை வெளியிட்டாலும், உண்மையான அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.சபை முடிவை வரவேற்கிறோம். வெறும் போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல், இனபடுகொலை என்று அறிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளைம் அவசரமாக கூட்டி, ஐ.நா. சபை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை இந்தியாவும் ஆதரிக்கக் கூடாது.

இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக கூட்டம் நடத்தப்படும் என்றும், ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றார் திருமாவளவன்.

ஐ.டி. சேவை துறைகளில் 2.50 லட்சம் பேருக்கு வேலை: நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு.


நடப்பு நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் புதிதாக 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ள நிலையில் பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்காக செலவிடும் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் ஐ.டி. மற்றும் அது சார்ந்த துறைகளில் புதிய பணியாளர்களுக்கான தேவைப்பாடும் உயரத் தொடங்கியுள்ளது. டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் முழு வீச்சில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இத்துறையில் முன்னணியில் உள்ள நான்கு நிறுவனங்கள் மட்டும், நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த உள்ளன என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 60,000 புதியவர்களை பணியில் அமர்த்தப் போவதாக கூறியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம் 18,000 பேரை சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஐ.டி. சேவை துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பூனா ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், கடந்த 2010-11ஆம் நிதி ஆண்டில் ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகள் 19 சதவீதம் வளர்ச்சி கண்டு, ஒட்டுமொத்த அளவில் 7,600 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளன. நடப்பு நிதி ஆண்டிலும் சிறப்பான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அண்மைக் காலத்தில் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உலக பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வந்தாலும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன என நாஸ்காம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக செக்ஸ் போலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள் ! கதறும் பெண் காவலர்கள் .

ஒரு காலத்தில் லண்டனின் ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸுக்கு நிகராக பேசப்பட்ட தமிழ்நாடு போலிஸ் தற்போது செக்ஸ் போலிஸாக மாறிக் கொண்டிருக்கிறது...

போலிஸ் நிலையங்களில் மேலதிகாரிகளாலும் சக ஆண் போலிஸ்காரர்களி னாலும் இழைக்கப்படும் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் துணிச்சலுடன் நீதிமன்றம் வரை வந்துவிட்டார் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் நகரப் பகுதி போலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் போலிஸான வள்ளி...

தமிழக காவல் துறையில் பெண்கள் எவ்வளவு கீழ்மைப் படுத்தப் பட்டுள்ளார்கள் என்பதை பெண் காவலர் வள்ளி சொல்லும் அதிர்ச்சியான வியங்கள் அப்படியே உங்களுக்காக,

முன்னாடி எல்லாம் போலிஸ் ஆடையை அணிந்ததும் எவ்வளவு பெருமையாக இருந்தது.. ஆனால் இப்போ ஏன்டா இந்த வேலைக்கு வந்தேன் என்று தினமும் மனதுக்குள் அழுகிறேன்...

அதிகாரிகளின் காம லீலைகளுக்கு நான் உடன்படாததால் வேலை நேரத்தைக் கூட்டியே முறித்து எடுத்து விடுவார்கள்..

போன முறை எனக்கு பீரியட்ஸ் ரைம்.. இருந்தும் ஆறு மணி நேரம் தொடர்ந்து என்னை நிற்க வைத்தார்கள்.. எவ்வளவு நரக வேதனை தெரியுமா..



அது போதாதென்று மறுநாள் காலை 2 நிமிடங்கள் லேட்டாக வந்ததற்கு மைதானத்தில் பத்து ரவுண்டு ஓட விட்டு தண்டனை கொடுத்தாங்க..

என்னோடு வேலை செய்யும் அக்கா ஒருவரின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்த அக்கா மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை ஒட்டிக் கொண்டு இருந்த நேரம் ஒரு நாள் அவங்களுக்கு காய்ச்சல் அதால லீவு கேட்டாங்க..

அப்பொழுது உடம்பு சூடா இருக்குதான்னு நான் செக் பன்னுகிறேன் என்று சொன்ன இன்ஸ்பெக்டர்.. அவங்க மேல கண்ட இடத்தில கையை வைத்து துணை இல்லாமல் இருந்தா உடம்பு சூடாத் தான் இருக்கும்..

நீ மட்டும் சரின்னு சொல்லு சூட்டைத் தணிச்சிரலாம் என்று ரொம்ப கொச்சையாகப் பேசினார். அந்த அக்கா லீவே வேண்டாம் என்று தப்பி ஓடி வந்து விட்டாங்க..

ஒரு ஊருக்கு புதுசாக இன்ஸ்பெக்டர் வருகிறார் என்றால் அவரோடு இரவு 2 பெண் போலிஸ் ஆவது தங்க வேண்டும். ஒருவர் உடல் தேவைக்கு மற்றையவர் உணவுத் தேவைக்கு அதாவது சமைத்துப் பரிமாற...

வரும் இன்ஸ்பெக்டர் 50 வயதுகளைக் கடந்தாலும் அவர்கள் அழைப்பது 25, 30 வயதுக்கு உட்பட்ட வாளிப்பான பெண் காவலர்களைத் தான்...

இந்த உபசரிப்புக்கள் தமிழ்நாட்டின் பல போலிஸ் நிலையங்களிலும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படித்தான் ஒருநாள் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஒழுங்கு படுத்தும் பணிக்காக 4 பெண் போலிஸ் காவலர்களை அழைத்துக் கொண்டு போனார் ஒரு இன்ஸ்பெக்டர்.

அங்கே திடீரென 2 பெண் போலிஸ் காவலர்களையும் இன்ஸ்பெக்டரையும் காணவில்லை.. திருவிழா முடிந்ததும் மற்ற காவலர்களுடன் அவரது வீட்டுக்குப் போய் பார்த்த போது ஒரு பெண் காவலர் சமையல் செய்து கொண்டிருந்தார்.

லேசாகத் திறந்திருந்த இன்னொரு அறையில் இன்னொரு பெண் காவலர்களிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருந்தார் காம வெறி பிடித்த அந்த இன்ஸ்பெக்டர்.

இப்படியாக தமிழ்நாடு போலிஸின் காம லீலைகள் உச்சத்தைத் தொடுகின்றன..

தமிழக பெண் காவலர்கள் மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தம் காவல் நிலையத்துக்கு வரும் பெண்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்...

இது மட்டுமல்ல லஞ்சம் ஊழலும் இங்கு தலை விரித்தாடுகிறது..

போலிஸ் பதிவுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் பணத்தைக் கறந்து அவர்களை ஓட்டாண்டியாக தெருவில் அலைய விடுகிறது இந்தக் கேவலம் கெட்ட காவல் துறை..

பெண்களை இப்படி கேவலமாக போகப்பொருளாக நினைத்து வல்லுறவு புரியும் காமப் பிசாசுகளை சம்பவம் நடந்த இடத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட வேண்டும்..

அவ்வளவு இறுக்கமாக சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்..

இப்போது இவ்வளவு தகவல்களையும் வெளியில் கொண்டு வந்த வள்ளியின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது ..

இன்னமும் கூட அவரால் குற்றம் சாட்டப்பட்ட எந்த ஒரு போலிஸ் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.. தண்டிக்கப்படவில்லை.. குறைந்தது போலிஸ் சேவையிலிருந்தாவது இடை நிறுத்தப்படவில்லை..

தமிழீழத்திலும் ஒரு காவல் துறை இருந்தது..

உறுதியாகச் சொல்வேன் உலகிலேயே அவர்களுக்கு நிகர் எவருமில்லை..



அவர்களைக் கண்டால் காலில் விழுந்து கும்பிடலாம்..

அப்படி இருக்கும் அவர்களின் மனிதநேயப் பண்புகளும் செயற்பாடுகளும்..

அவர்களிடம் லஞ்சமோ ஊழலோ இப்படியான காம வெறியாட்டமோ கிடையாது.. ஒரு பெண் நள்ளிரவிலும் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வீதிகளில் வலம் வர முடிந்தது..

தமிழீழ காவல் துறையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக மிகவும் கௌரவமாக மதிக்கப்பட்டார்கள்..

அப்படியான தமிழீழ காவல் துறையைப் பார்த்தாவது திருந்த வேணும் இந்த தரம் கெட்ட தமிழக காவல் துறை...

தமிழக காவல் துறையின் தரம் கெட்ட காமப் பிசாசு அதிகாரிகள் களை எடுக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றால் ஒழிய ஒரு நாளும் முடிவுக்கு வரப் போவதில்லை இவர்களின் காம வெறியாட்டம்..

00tamilcnn.com

பாலசந்தருக்கு முதல்வர் வாழ்த்து.


சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் பாலசந்தருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளி வீசி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தயாரித்தவர் பாலசந்தர்.

பல படங்களுக்கு ஏற்கெனவே தேசிய விருதுகளும், பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தமிழ் திரையுலகில் பழுத்த அனுபவம் பெற்றவர் அவர், திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக மத்திய அரசு 2010-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதினை அவருக்கு அறிவித்திருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாகும்.

அந்த விருதைப் பெறும் முதல் தமிழ் இயக்குநர் என்பதும் கூடுதல் சிறப்பாகும். புதிய சிந்தனைகளை பாய்ச்சி திருப்பு முனையை ஏற்படுத்தியவர். நம் சினிமாவில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை மறுத்திட இயலாது.

இந்த விருதின் மூலம் இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு என் உள்ளம் பேருவகை கொள்கிறது. பாலசந்தருக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நேரில் சந்திப்பு: இதனிடையே, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் இயக்குநர் பாலசந்தர். அப்போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் பாலசந்தரை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

காங்கிரஸ் வாழ்த்து: இயக்குநர் பாலசந்தருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு வாழ்த்துத் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்தியில்,""45 ஆண்டுகால அவரது திரைப்படத் துறை சாதனைகள் அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளன. தமிழ் மொழியில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட அவர் இயக்கிய திரைப்படங்கள் சமூகச் சிந்தனையோடு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை.

தாதா சாகேப் பால்கே விருது அவரது திரைப்பட ஆற்றலுக்குக் கிடைத்த மகத்தான விருது என்றாலும் அது தமிழகத்துக்கே கிடைத்த பெருமை'' என்று கூறியுள்ளார்.

"நிறைய படங்களை இயக்க ஆர்வம்'

பால்கே விருது அறிவிப்பு இன்னும் நிறைய படங்களை இயக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் பாலசந்தர் தெரிவித்தார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றதையடுத்து முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற பின், செய்தியாளர்களிடம் இயக்குநர் பாலசந்தர் கூறியது:

பெரும்பாலும் வட பகுதிகளில் உள்ளவர்களுக்கே இந்த விருது கிடைத்து வந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது.

ஒரு இயக்குநராக எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த விருது மேலும் உற்சாகத்தையும், இன்னும் நிறைய படங்களை இயக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விருது எனக்குக் கிடைத்தமைக்காக, தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன், அனைத்து தமிழர்களுக்கும் என நன்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்றார்.

12 லட்சம் மாணவர்கள் எழுதும் பொறியியல் நுழைவுத்தேர்வு வினாத்தாள் 'அவுட்' : 3 மணி நேரம் தேர்வு தாமதம்.


அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இன்று நடைபெறவிருந்த தேர்வு 3 மணி நேரம் தாமதமானது.

இன்று காலை 9.30க்கு தேர்வு தொடங்குவதாக இருந்தது. லக்னெளவில் வெளிமார்க்கெட்டுகளில் வினாத்தாள்கள் விற்கப்படுவதாத கிடைத்த தகவலால் நண்பகல் 12 மணிக்கு தேர்வு தொடங்கியது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதாக இருந்த இரண்டாவது தேர்வு மாலை 4 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை நடைபெற உள்ளது.

80-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1600 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 12 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

இந்த வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஒருவரை உத்தரப்பிரதேச சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வினாத்தாளை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். நேற்று நள்ளிரவு அந்த வினாத்தாள் எங்களுக்குக் கிடைத்தது என லக்னெள சிறப்புப் பிரிவு போலீசார் விஜய் பிரகாஷ் தெரிவித்தார்.

ஐ.நா. அறிக்கை : இலங்கைக்கு சீனா ஆதரவு.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றமே என்ற ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் மே மத்தியில் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், திடீரென சீனா அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்சயை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இப் பிரச்னையை இலங்கையிடமே விட்டுவிடுங்கள், பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு அரசே குழு ஒன்றை அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ சனிக்கிழமை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை, உலக நாடுகள் வெளியில் இருந்து செய்தால் போதும் என்றும் ஹாங் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகப்டருடன் மாயமான முதல் மந்திரி ! செயற்கை கோள் உதவியுடன் தேடும் பணி தீவிரம் .


அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி டோர்ஜி காண்டு நேற்று காலை தபாங் என்ற இடத்தில் இருந்து தலைநகரம் இட்டா நகரு்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

ஹெலிகாப்டரில் முதல் - மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி, எம்.எல்.ஏ. ஒருவரின் சகோதரி மற்றும் பைலட்டுகள் 2 பேர் இருந்தனர்.

ஹெலிகாப்டர் பறந்து சென்ற 20-வது நிமிடத்தில் ஹெலிகாப்டரின் தரை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஹெலிகாப்டருடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எனவே ஹெலிகாப்டர் மாயமாகி விட்டதாக கருதப்பட்டது.

இதனால் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் பூடான் நாட்டில் பத்திரமாக இறங்கி விட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் அது உறுதியான தகவல் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

இதனால் மீண்டும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்திய விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நேற்று மதியத்தில் இருந்து மாலை வரை தொடர்ந்து தேடிவந்தன. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது.

ஹெலிகாப்டர்களில் தாழ்வாக பறந்து ஒவ்வொரு இடமாக தேடிவருகின்றன. இத்துடன் ராணுவ வீரர்களும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அவர்கள் காட்டுப் பகுதிக்குள் இறங்கி தேடுகின்றனர். ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் உதவி வருகிறது. இந்திய விண்ணில் செலுத்தியுள்ள செயற்கை கோள்கள் 24 மணி நேரமும் பூமியை சுற்றி வந்து படம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

இந்த படத்தின் உதவியுடன் ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் மாயமானதற்கு பிறகு நேற்று 2 தடவை இந்திய செயற்கை கோள்கள் அந்த பகுதியை கடந்து சென்று படம் பிடித்து உள்ளன. ஆனால் அந்த படத்தை ஆராய்ந்த போது ஹெலிகாப்டர் விழுந்து கிடந்தது போன்ற எந்த காட்சியும் இல்லை.

இன்றும் அதே போல பகலில் செயற்கை கோள்கள் அந்த பகுதியில் வரும். அப்போது எடுக்கும் படத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். மேலும் செயற்கைகோள்கள் ஹெலிகாப்டரில் சிக்னல்களையும் கிரகிக்கும் சக்தி கொண்டவை அதன் மூலமும் கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

ஒரு வேளை பூட்டான் நாட்டு எல்லைக்குள் ஹெலிகாப்டர் விழுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பூட்டான் அரசும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஹெலிகாப்டர் வந்த பாதையை ஒட்டி சீனாவின் செலபாஸ் எல்லை பகுதி உள்ளது.

அங்கே விழுந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் சீனாவுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மாயமானதும் அது காட்டுப் பகுதியில் எங்காவது தரை இறங்கி இருக்க வேண்டும் என்றே கருதினார்கள்.

ஆனால் மாயமாகி 24 மணி ஆகியும் எந்த தொடர்பும் இல்லாததால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும். அதில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. மாயமான ஹெலிகாப்டர் “பவான் ஹன்ஸ்” என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் அருணாச்சலபிரதேச அரசு நடத்துகிறது. வட கிழக்கு மாநிலங்களில் போதுமான சாலை வசதி இல்லாததால் இந்த நிறுவனம் ஹெலிகாப்டர் போக்குவரத்தை நடத்தி வருகிறது.

கடந்த 19-ந்தேதி இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்தான் இதே பகுதியில் விழுந்து நொறுங்கி 17 பேர் உயிர் இழந்தனர். இப்போது இந்த ஹெலிகாப்டர் மாயமாகிவிட்டது. இது “ஏ.எஸ்.350-பி-3 என்ற வகையை சேர்ந்த குட்டி ஹெலிகாப்டர் ஆகும்.

வானிலை மோசமாக இருக்கும் நேரத்தில் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்வது ஆபத்தானது. நேற்று முதல்- மந்திரி பயணம் செய்தபோதும் வானிலை மோசமாக இருந்துள்ளது. எனவே அதை தாக்கு பிடிக்க முடியாமல் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

பவான் ஹன்ஸ் நிறுவன விமானங்கள் தொடர்ந்து விபத்தை சந்திப்பதை அடுத்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா மாநிலங்கள் இந்த நிறுவன ஹெலிகாப்டர் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்துள்ளன.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேர் விவரம். 1. டோர்ஜி காண்டு முதல்- மந்திரி 2. யேஷி ஜோட்டக், முதல்- மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி. 3. யேஷி லாமு, இவர் அருணாசல பிரதேச எம்.எல்.ஏ. டெஸ் வாஸ்கினின் சகோதரி. 4. ஜே.எஸ்.பாப்பர், ஹெலிகாப்டர் பைலட். 5. கே.எஸ்.மாலிக், துணை பைலட்.

மாப்பசானின் சிறுகதை - Le Gueux : பிச்சைக்காரன். தமிழில் : மா. புகழேந்தி.


Le Gueux : பிச்சைக்காரன்

Guy de Maupassant


மூலம் : கய் தே மாப்பசான்

தமிழில் : மா. புகழேந்தி.


தற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான்.

அவனின் பதினைந்தாவது வயதில் வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று கோல்களுடன் நடப்பான், அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள் காது வரை வந்துவிட்டன. அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில் சிக்கிய பாறைபோல் தெரிந்தது.

சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த போது பாதிரியார் ஒருவரால் ஆல் செயின்ட்ஸ் டே அன்று கண்டெடுக்கப்பட்டு ஞானஸ்நானம் செய்யப்பட்டான், அதனால் நிக்கோலஸ் டூஸ்சைன்ட் என்று பெயரிடப்பட்டு அறக்கட்டளைப் பணத்தால் வளர்க்கப் பட்டான், எந்தக் கல்வியும் அளிக்கப்படாமல் வளர்ந்தான், கடைக்காரன் ஒருவனால் வழங்கப்பட்ட பல கோப்பை பிராண்டி குடித்து முடமானான் (அது தனிக்கதை), அதன் பிறகு யாராலும் வரவேற்கப்படாத அகதியானான், அவனுக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று பிச்சை எடுக்கக் கையேந்துவது தான்.

ஒரு முறை த'அவாரி அம்மையார் தனது அரண்மனைக்கு அருகிலுள்ள கோழிப்பண்ணையின் பக்கத்தில் அவனுக்கு இடம் கொடுத்தாள், வைக்கோலால் செய்யப்பட பாயில் அவன் உறங்கினான். அவனுக்கு உணவு கிடைத்தே ஆக வேண்டுமென்ற போது அரண்மனையின் சமையலறையிலிருந்து அவனுக்கு சிறிது பழச்சாறும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளும் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அம்மையார் அவனுக்கு தன் ஜன்னல் வழியே கொஞ்சம் காசையும் வீசுவாள். ஆனால் அவள் இப்போது இறந்துவிட்டாள்.

கிராமத்து மக்கள் எப்போதாவது கொஞ்சமாகக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் அவனை நன்கு தெரிந்திருந்தது. ஒவ்வொருவரும் நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அவன் தனது ஊன்று கோல்களால் இழுத்து இழுத்து நடந்து போவதைப் பார்த்துப் பார்த்துச் சலித்திருந்தார்கள். ஆனாலும் அவன் அங்கிருந்து வேறு ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் அவனுக்கு இந்த உலகத்தில் இதை விட்டால் வேறு ஓர் இடம் தெரியாது. இந்த மூன்று அல்லது நான்கு கிராமங்களைத் தவிர அவன் தனது துயரமான வாழ்வில் வேறு எங்கும் சென்றதில்லை. தனக்குப் பழக்கப்பட்ட இந்த எல்லைக்குள் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை செய்து வந்தான்.

பார்வையை மறைத்து நிற்கும் மரக்கூட்டங்களுக்குப் பின்னரும் உலகம் இருக்கிறதா என்பதைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவன் அந்தக் கேள்வியைத் தன்னிடம் கூடக் கேட்டிருக்கவில்லை. வயலிலே வேலை செய்பவர்கள் தொடர்ந்து இவனைப் பார்த்து வெறுப்படைந்து வியந்து கேட்பதுண்டு, "ஏன் நீ இங்கேயே பிச்சைஎடுத்துக் கொண்டிருக்கிறாய்? வேறு எங்காவது போவது தானே?" என்று. ஆனால் அவன் நழுவி விடுவான். உலக அறிவே இல்லாத அவன் ஆயிரம் ஆயிரம் காரணங்களுக்காக அஞ்சினான், புது முகங்கள், தன்னைப்பற்றித் தெரியாதவர்கள், அவமானங்கள் செய்வோர் , கேலிகள் செய்வோர் , கிண்டல்கள் பேசுவோர் , சாலையைக் கடக்கும் காவலர்கள், எல்லாரையும் கண்டு அஞ்சினான். இவை எல்லாவற்றையும் அவன் காணக் கூசினான், தவிர்த்தான், காவலர்களைக் காணும் போதெல்லாம் அவன் தேவையில்லாமல் உள்ளுணர்வு ஏற்படுத்தும் அச்சத்தால் புதர்மரைவிலோ தூண்களின் பின்னோ ஒளிந்து கொள்வான்.

தூரத்தில் காவலர்கள் வருவதை அவன் அறிந்தால், பகல் வெளிச்சத்தில் சீருடையில் அவர்களைப்பார்த்தால் தேவையற்ற அச்சத்தால் வளைக்குள் பதுங்கும் சிறு விலங்குபோல் நடுங்குவான். தனது ஊன்று கோல்களை வீசிவிட்டுத் தரையில் சுருண்டு படுத்துக் கொள்வான், எவ்வளவு சிறிதாகச் சுருங்க முடியுமோ அவ்வாறு, அவனது கந்தல் துணியோ தரையோடு சேர்ந்து அவனை மூடியிருக்கும்.

அவன் காவலர்களுடன் எந்த பிரச்சனையையும் செய்ததில்லை. ஆனால் அவனது பயந்துகொள்ளும் உணர்வு அவனது ரத்தத்தில் ஊறியே இருந்தது. அதை அவன் அனேகமாக அவனது பெற்றோரிடத்திலிருந்து பரம்பரை நோயாகப் பெற்றிருக்க வேண்டும்.

அவனுக்கு வேறு புகலிடம் இல்லை, தலைக்குமேல் கூரை இல்லை, எந்த உறைவிடமும் இல்லை. கோடையில் அவன் வெட்டவெளியில் தூங்கினான், குளிர்காலத்தில் பண்ணைகளில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொள்ளும் அற்புதத் திறமை கொண்டிருப்பான். அவன் தனது இடத்தை பிறர் அறியும் முன்னர் மாற்றிக்கொள்வான். அவனுக்கு பண்ணை வீடுகளில் உள்ள சந்து பொந்துகள் எல்லாம் அத்துபடி, ஊன்று கோல்களைப் பற்றிப் பற்றி நடந்து அவனது கைகள் பலம் கொண்டிருந்தன. தனது கைகளின் பலத்தால் தனது உடலை உயரத்தில் தூக்கி மாடங்களில் ஏற்றிக்கொள்வான் . அங்கே அவன் நான்கு ஐந்து நாட்கள் ஒளிந்து கொள்வான். அதற்கும் முன் போதுமான உணவைச் சேர்த்துக் கொள்வான்.

அவன் வயல்வெளியின் விலங்கினைப் போல வாழ்ந்தான். அவன் மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்து வந்தான், ஆனால் ஒருவரையும் தெரிந்திருக்கவில்லை, யாரையும் விரும்பியிருக்கவில்லை, விவசாயக் கூலிகள் எல்லாம் இவனைப் பார்க்கும் போதெல்லாம் தங்களது நெஞ்சத்தில் வெறுப்பை உமிழ்ந்தார்கள். அவனை அவர்கள் 'ஆலயமணி' என்று அழைத்தார்கள். அவன் ஊன்று கோல்களால் நிற்பது சர்ச்சில் மணி இரு தூண்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும்.

கடந்த இரண்டு நாட்களாக அவன் எதையும் உண்டிருக்கவில்லை. ஒருவரும் அவனுக்கு எதையும் கொடுத்திருக்கவில்லை. ஒவ்வொருவரின் பொறுமையும் தீர்ந்து விட்டிருந்தது. பெண்கள் அவனைத் தங்களது கதவருகே பார்த்தபோதெல்லாம் சத்தமிட்டு விரட்டினர்: "போ போ, அகதியே, நீ எதற்கும் லாயக்கில்லை, ஏன் மூணு நாளைக்கு முன்னால் தானே உனக்கு ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்தேன், இப்போ மறுபடியும் வருகிறாய்"

அவன் தனது ஊன்று கோள்களுடன் வேறு வீட்டுக்குத் திரும்பினாலும் அங்கேயும் இதே மாதிரி வரவேற்பையே பெற்றான்.

பெண்கள் எல்லோரும் தங்கள் வீட்டருகே நின்று கொண்டு தீர்மான மாக முழங்கினார்கள்: "வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி நாய்க்கு சோறு போட முடியாது!"

ஆனால் அந்தச் சோம்பேறி நாய்க்கு ஒவ்வொரு நாள்ளும் உணவு தேவையாக இருந்ததே.

அவன் சோர்ந்து போனான், செயின்ட்-ஹிலேயிர், வார்வில்லி, லெஸ் பில்லீட்ஸ் ஆகிய எல்லா இடங்களிலும் அலைந்தாலும் ஒற்றைக் காசைக் கூடக் காண முடியவில்லை. அவனது ஒரே நம்பிக்கை டூர்நோலேஸ், ஆனால் அங்கே போக அவன் நெடுஞ்சாலையில் ஐந்து மைல்கல் நடக்க வேண்டும், ஆனால் இன்னொரு அடிக்கு நகரக் கூட முடியாமல் இருந்தான். அவனது வயிறும் சட்டைப்பையும் காலியாகவே இருந்தது, ஆனாலும் அவன் தனது பயணத்தைத் தொடங்கினான்.

அது டிசம்பர் மாதம், குளிர் காற்று வயல்களிலும், இலைகளற்ற கிளைகளிலும் வீசி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அச்சமூட்டும் கார்முகில்கள் இருண்ட வானில் திரண்டிருந்தன. பிச்சைக்காரன் வலியுடன் ஒவ்வொரு ஊன்று கோலாய் வைத்து நகர்ந்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்கு ஒருமுறை சாக்கடையின் ஓரத்தில் அமர்ந்து ஒய்வு எடுத்தான். பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது, அவனது குழப்பமுற்ற மெல்லச் செயல்படும் மனம் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் கொண்டிருந்தது, சாப்பிடவேண்டும், ஆனால் எப்படி அவனுக்கு ஒன்றும் தெளிவாகவில்லை. மூன்று மணி நேரமாக அவன் வலிகொண்ட தனது பயணத்தைத் தொடர்ந்தான். கடைசியாக ஒரு கிராமத்தின் வெளியே வளர்ந்திருந்த மரங்களைக் கண்ணுற்றான், அது அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியது.

அவன் அங்கு சந்தித்த முதல் மனிதனிடம் பிச்சை கேட்டான் அதற்கு அம்மனிதன் சொன்னான் :

"ஒ நீ தானா மறுபடியும், கிழட்டு நாயே? உன்னை நாங்க தொலைக்கவே முடியாதா?"

அப்புறம் 'ஆலயமணி' தன்வழியே நடந்தான்.

ஒவ்வொரு கதவின் முன்னே அவன் நின்றபோதும் இதைப் போலவும் இதைவிடக் கடுமையாகவும் வசவுகளை கேட்க வேண்டியிருந்தது. ஊர்முழுக்க சுற்றி வந்த பின்னரும் அரைக்காசு கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் அவன் அருகிலுள்ள பண்ணைகளுக்குச் சென்றான், சேறான பாதைகளில் வருந்திக்கொண்டு முன்னேறினான், சோர்ந்து போனதால் தன்னுடைய ஊன்று கோல்களை அவனால் நகர்த்தக் கூட முடியவில்லை. ஒரே மாதிரியான வரவேற்பையே அவன் எங்கும் கண்டான். அது ஒரு கொடுமையான காலம், குளிர் வாட்டிஎடுத்தது, கடுங்குளிரில் அவனது இதயமே உறைந்து விடும்படி இருந்தது. எந்தக் கைகளும் அவனுக்கு பணமோ உணவோ கொடுக்க முன்வரவில்லை.

தனக்குத் தெரிந்து அனைத்து வீடுகளிலும் கையேந்தி விட்டான், ஒன்றும் கிடைக்கவில்லை, கடைசியாக சிக்கேவின் பண்ணைக்கு அருகே செல்லும் சாக்கடைக்கருகில் நின்றான். அவனது ஊன்றுகோல்கள் அவனிடமிருந்து நழுவி விழுந்தன, அவன் அசைவற்று நின்றான், பசிக் கொடுமை அவனை வாட்டியது, தனது கொடுமையான வாழ்க்கையை பிறர் உணரும் அளவுக்குச் சொல்ல அவன் புத்திக் கூர்மை அற்றவனாக இருந்தான்.

மனித மனத்துக்கே உண்டான வெற்று நம்பிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட இதயத்துடன் அவன் காத்திருந்தான். பண்ணையின் ஓரத்தில் அவன் டிசம்பர்க் குளிரில் காத்திருந்தான். ஏதாவது அற்புத உதவிகள் மனிதர்களிடமிருந்தோ சொர்க்கத்திளிருந்தோ தனக்குக் கிடைக்கும் என்று காத்திருந்தான், அது எப்போது கிடைக்கும் என்று அறிவே இல்லாமல் காத்திருந்தான். அங்கே, சில கறுப்புக் கோழிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு உணவு தேடிக் கொண்டிருந்தன, இந்த பூமியின் மேல் எல்லா உயிரினங்களும் வாழ்வது போல. சிறிது நேரத்துக்கொருமுறை தங்களது அலகால் புழுவையோ ஏதேனும் ஒரு விதையையோ கொத்தி எடுத்துக் கொண்டிருந்தன. பிறகு தங்களது வேலையை அவைகள் தொடர்ந்தன, தேடினால் உணவு நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியில்.

'ஆலயமணி' முதலில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவைகளைக் கவனித்தான். அவனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, மனதில் அல்லாமல் வயிற்றில். ஏதேனும் ஒரு கோழியை அடித்து அங்கே கிடக்கும் சுள்ளி விறகுகளைக் கொண்டு வாட்டி சாப்பிட்டால் என்ன என்று.

அவனுக்கு உறைக்கவில்லை தான் ஒரு திருட்டைச் செய்யப் போகிறோம் என்று. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். குறி தவறாமல் தனக்கு அருகில் திரிந்த ஒரு கோழியை அடித்தான். பறவை சிறகுகளை அடித்தபடி சுருண்டு விழுந்தது. மற்ற பறவைகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. ஆலயமணி தனது ஊன்று கோல்களைப் பற்றிக் கொண்டு தன்னால் வேட்டையாடப்பட்ட பறவை விழுந்த இடத்துக்கு முன்னேறினான்.

அவன் அந்தப் பறவை விழுந்த இடத்துக்கு முன்னேறிய போது அவனது முதுகில் பயங்கரமான ஓர் அடி விழுந்தது, அவன் ஊன்றுகோல்களை தவறவிட்டான், பத்தடி தூரத்துக்குப் பறந்து போய் விழுந்தான். அங்கே அவனருகில் ஆத்திரத்தில் விவசாயி சிக்கே, வளைத்துப் பிடித்து உதைத்துக் கொண்டிருந்தான், அநாதரவாக 'ஆலயமணி' அவனிடத்தில் கெஞ்சினான்.

வயலிலே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தங்களது முதலாளியுடன் சேர்ந்து முடப் பிச்சைக்காரனைப் புரட்டிப் புரட்டி நையப்புடைத்தனர். அடித்து அடித்துச் சலித்த பின்னர் அவனை ஒரு மரக்குடிசையில் வைத்து அடைத்தனர், சிலர் காவலர்களை அழைக்கச் சென்றனர்.

'ஆலயமணி' பாதி இறந்து விட்டான், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, பசியாலும் வலியாலும் தரையில் கிடந்து துடித்தான். மாலை வந்தது, பிறகு இரவு, பிறகு மறுநாள் காலையும். இப்போதும் அவன் ஒன்றும் உண்டிருக்கவில்லை.

நண்பகல் வாக்கில் காவலர்கள் வந்தார்கள். பிச்சைக்காரனின் தரப்பிலிருந்து ஏதேனும் தாக்குதல் வருமோ என்று, மிகுந்த எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தார்கள். சிக்கே சொன்னான், தன்னை அவன் கடுமையாகத் தாக்கினான், தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகுந்த சிரமப் பட்டேன் என்று.

காவலர் கத்தினார்:

"வா வா, எழுந்திரு!"

ஆனால் 'ஆலயமணி'யால் நகர முடியவில்லை. தன்னால் ஆன மட்டும் எழுந்திருக்க மிகுந்த முயற்சி செய்தான், முடியவில்லை. அவனது இயலாமையை காவலர்கள் நடிப்பு என்று கருதினார்கள், அவனை வலுக்கட்டாயமாக எழுப்பி ஊன்று கோல்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

அச்சம் அவனை ஆட்கொண்டது-- காவலர் சீருடையைக் கண்டதும் அவனது ரத்தத்தில் ஊறிய அச்சம், விளையாட்டு வீரன் ஆட்டம் தொடங்கையில் கொள்ளும் அச்சம், பூனையைப் பார்த்ததும் எலிக்கு வரும் அச்சம்--- இருந்தாலும் அவனது மனித முயற்சிக்கும் அப்பாலிருந்து வலிமை கொண்டு வெற்றிகரமாக நின்றான்.

"நட!" காவலர் சொன்னார். அவன் நடந்தான். அந்த வயலில் வேலை செய்தவர்கள் எல்லாம் அவன் செல்வதைக் கண்டார்கள். பெண்கள் அவனை வைதார்கள் ஆண்கள் அவனைத் திட்டினார்கள் அவமானப் படுத்தினார்கள். கடைசியாக அவன் பிடிபட்டான்! சனியன் தொலைந்தது! அவன் இரண்டு காவலர்களுக்கு நடுவே சென்றான். அவன் போதுமான வலிமையைத் திரட்டிக்கொண்டான்-- இயலாமையால் திரட்டப் பட்ட வலிமை-- மாலை வரை அவனை இழுத்துக் கொண்டு செல்லத் தேவையான அளவிற்கு. தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் அச்சமுற்றிருந்தான்.

சாலையைக் கடக்கும் பொது எதிர்ப்பட்ட மக்கள் தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்:

"இது அவனா வேறு ஒரு திருடனா?"

மாலையில் அருகிலிருந்த நகரத்திற்கு ஓட்டிக்கொண்டு செல்லப்பட்டான். அவன் இவ்வளவு தூரம் முன்னர் எப்போதும் பயணம் செய்ததில்லை. எதற்கு அங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்றோ என்ன நடக்கப் போகிறது என்றோ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக நடந்த எதிர்பாராத கொடுமைகள் எல்லாமும், முன்பின் அறிமுகமில்லா முகங்களும் வீடுகளும் அவனது நம்பிக்கையைத் தகர்த்து விட்டிருந்தன.

அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஏனெனில் என்ன நடக்கிறது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதோடல்லாமல், அவன் கடந்த பல ஆண்டுகளாக யாரிடமும் பேசியிருக்கவில்லை, நாக்கின் பயன்பாட்டையே அவன் தவிர்த்திருந்தான். அவனது சிந்திக்கும் திறனோ வார்த்தைகளைக் கூட்டிப் பேசுவதற்கு முடியாமல் இருந்தது.

அவன் நகரத்துச் சிறையில் அடைக்கப் பட்டான். காவலர்களுக்கு உறைக்காமல் போனது அவனுக்கும் பசிக்கும் என்று. அவன் அங்கேயே தனிமையில் விடப்பட்டான், அடுத்த நாள் வரை. ஆனால் அதி காலையில் அவர்கள் வந்து அவனைச் சோதித்துப் பார்த்த போது அவன் இறந்து விட்டதை அறிந்தார்கள்.

என்ன ஓர் ஆச்சரியம்!

எழுச்சி பெறுகிறது ஏற்றுமதி !


சென்ற நிதி ஆண்டில் (2010-11) இந்தியாவின் ஏற்றுமதி 37 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 24,600 கோடி டாலர் ஆகும். இது ஒரு சாதனை எனலாம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ஏற்றுமதி 49.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மதிப்பு, 2,900 கோடி டாலர்.

மத்திய அரசு, 2010-11-ம் ஆண்டுக்கு நிர்ணயித்த இலக்கே 22,000 கோடி டாலர்தான். இந்த இலக்கையே எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கு இருந்தது. காரணம், இதற்கு முந்தைய ஆண்டு, 2009-10 நிதி ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதி 17,800 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருந்ததால், மத்திய அரசு பல ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதன் பயனாகவே அது சாத்தியமானது.

ஆக, வரலாற்றில் முதன்முறையாக, ஏற்றுமதி 20,000 கோடி டாலரைத் தாண்டியது மட்டுமல்ல; 24,600 கோடி டாலர் அளவையும் எட்டியுள்ளது.

அதிக அளவில் ஏற்றுமதியான பொருள்கள் பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்து வகை, மின்னணுப் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எனலாம்.

அண்மைக்காலமாக, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அரசின் ஊக்குவிப்பு, சலுகைகள் தவிர, வேறு சில முக்கியக் காரணங்களும் உள்ளன.

உதாரணமாக, மருந்துகள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களின் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய மதிப்பீடு உலக அளவில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவில் பல்வேறு பொருள்களின் உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை என்ற உண்மை, வெளிநாட்டு இறக்குமதியாளர்களை உரிய முறையில் சென்றடைந்துள்ளது. இது ஒரு நல்ல திருப்பம்.

மூன்றாவது, காஷ்மீர் மற்றும் லக்னௌ போன்ற வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரைவிரிப்புகள் (கார்பெட்) ஆகியவை ஏற்கெனவே இருந்தவைதான். ஆனால், அவை வெறும் நுகர்பொருள்களாக, பயன்பாட்டுப் பொருள்களாக அறியப்பட்டிருந்தன. இவற்றை இப்போது கலைபொருள்களாக வெளிநாட்டுச் சந்தைகளில் அறிமுகம் செய்த பெருமை புதிய தலைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு உண்டு.

இவையெல்லாமாகச் சேர்ந்து, கடந்த காலங்களைவிட இப்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதுள்ள நன்மதிப்பு, நல்லெண்ணம் உலக அரங்கில் உயர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சர்வதேசப் பொருளாதார மந்த நிலையிலிருந்து, மெல்ல மெல்ல மீட்சி அடைந்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவை ஓரளவு மட்டுமே அதிகரித்து வருகிறது. எனவே, இவ்விரு சந்தைகளை மட்டுமே நம்பியிராமல், இந்திய ஏற்றுமதியாளர்களின் பார்வை ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம்.

வேளாண் சார்ந்த பொருள்களான தேயிலை, காப்பிக்கொட்டை, புகையிலை, மசாலாப் பொருள்கள், முந்திரிப் பருப்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மதிப்பு முதல்முறையாக, 1,200 கோடி டாலரைக் கடந்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் அம்சம் என்னவெனில், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதுதான்.

புதிதாகப் பொருளாதார வளர்ச்சியும், வாங்கும் சக்தியும் பெற்றுவரும் நாடுகளான கஸக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் பல்வேறு பொருள்களின் தேவை முதல்முறையாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் முனைப்புக் காட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு சலுகைகளையும், ஊக்குவிப்புகளையும் வழங்கி வருவது வரவேற்கத்தக்க விஷயம். அதேநேரம், இப்போது ஒரு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வரிச்சலுகைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது, வரிச்சலுகை "பாஸ்' புத்தகத்திட்டம். இத்திட்டம் நடப்பாண்டு ஜுன் மாதம் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. நீண்டகாலமாக, சிறிய சிறிய மாற்றங்களுடன் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு உறுதுணையாக உள்ள இத்திட்டத்தை, உலக வர்த்தக நிறுவனம் கடுமையாக எதிர்க்கிறது. இது சம வாய்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் வாதம்.

இந்நிலையில், இந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில், இத்திட்டத்துக்கு மாற்றாக, வேறு சலுகை அளிப்பது அவசியமாகும். இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம் விரைந்து செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் நலனைக் காத்திட வேண்டும்.

மொத்த ஏற்றுமதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. மூலதனம் குறைவாக உள்ள இந்த நிறுவனங்களால், தங்களது தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக போதிய நிதி ஆதாரத்தைத் திரட்டுவது மிகவும் கடினம். அதேநேரம், இந்நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில், போட்டிகளைச் சமாளித்து, விற்பனை செய்ய வேண்டுமானால், தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்.

இதைக் கருத்தில்கொண்டு, இப்போது ஜவுளித்துறையினருக்குத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்ற நிதி உதவித் திட்டத்தை, ஜவுளி அல்லாத பிற துறைகளைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் அறிமுகம் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்திட, முதல்கட்டமாக ரூ. 2,500 கோடி ஒதுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டுக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும், உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக அமையும்.

இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் தரத்தை உயர்த்தும் வகையில் நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றைச் செய்துகொள்ளத் தேவையான நிதியைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கடன் தொகையில் 5 சதவீதம் அரசு மானியமாகவும் வழங்கப்படும். ஜவுளித்துறையில், நல்ல பலனை அளித்துள்ள இத்திட்டம், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நாட்டின் மொத்தத் தொழில் உற்பத்தியில் 45 சதவீதம் இந்த வகை நிறுவனங்களின் மூலம் தான் கிடைக்கிறது என்பது கவனத்துக்குரியது.

இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 60 லட்சம் ஆகும். இவை உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கை 6,000-க்கும் மேல். இப்பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு உத்தேசத் திட்டம் உறுதுணையாக அமையும் என நம்பலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அதிகரித்தவண்ணம் உள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய லாபம் குறைகிறது. எப்படியென்றால், நாம் ஏற்றுமதி செய்திடும் பொருள்களுக்கு விலை வெளிநாடுகளிலிருந்து நமக்கு டாலரில்தான் வருகிறது. டாலர் மதிப்பு குறைவதால், நமக்குக் குறைந்த அளவிலான ரூபாய்தானே கிடைக்கும்? மாறாக, டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது, நமக்கு ரூபாய் தொகை கூடுதலாகக் கிடைக்கும்.

பொதுவாக, டாலர் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் குறைந்தால், பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.

அதாவது, பணச் சந்தையிலிருந்து, ரிசர்வ் வங்கி கணிசமான அளவில் டாலரை கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப் பிடிக்கும். இதனால், டாலருக்குச் சந்தையில் கிராக்கி ஏற்படும்; மதிப்பு உயரும். இது காலங்காலமாக நடைபெற்று வருவதுதான். ஆனால், கடந்த பல மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கி, ஏனோ அப்படிச் செய்வதைத் தவிர்த்து வருகிறது.

அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகள் அதிக அளவில் நாட்டுக்குள் வருவதுதான் டாலர் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம். பிரேசில் போன்ற சில நாடுகள், தங்கள் நாட்டு ஏற்றுமதியைக் காப்பாற்றுவதற்காக, அன்னிய முதலீடுகள் தேவைக்குமேல் வருவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ""பிரிக்ஸ்'' எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதுசமயம், மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முடிவு சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

மேற்கூறிய 5 நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், கடன், மானியம் போன்ற நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் டாலருக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அந்தந்த நாட்டு நாணயத்திலேயே பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என்பதே அது. கருத்தளவில் உருவாகியுள்ள இந்த முடிவில், முழு விவரங்கள் இன்னும் தீர்மானமாகவில்லை.

குறிப்பாக, இதில் ஏற்றுமதியின் நிலை என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. இத்திட்டத்தின் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை என்றாலும், அவற்றை வரையும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும்.

உதாரணமாக, இந்த 5 நாடுகளில் ஒன்றான சீனா, தனது நாணயமான யூவான் டாலருக்கு மாற்று நாணயமாக உருவாக்கப்பட வேண்டும் என்று அண்மைக்காலமாக முயன்று வருகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும், வெளியிடப்படாத ரகசிய நோக்கம் இருந்தால் வியப்பில்லை. எனவே, சில நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும்கூட, அது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் நன்மை பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்

சைவ கலாசாரம் அழிந்து விடும் அபாயம் - அசைவமாகும் மரபணு காய்கறி , பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை.

விலங்கு மரபணு சேர்ப்பதால் அசைவமாகும் மரபணு காய்கறி - பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை

சர்வதேச விதை நிறுவனங்கள் இயற்கையான காய்கறி - பழ விதைகளில் விலங்குகளின் உயிரணு மற்றும் சில வைரஸ் கிருமிகளை சேர்த்து மரபணு காய்கறி - பழங்களை உருவாக்குகிறார்கள். மரபணு காய்கறி - பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்வதால் அவை அசைவமாகி விடுகின்றன.

பெரும்பாலான மரபணு காய்கறி - பழங்களில் தவளை, எலி, கரப்பான் பூச்சி, பூனை, முயல் போன்ற விலங்குகளின் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன.

காய்கறி - பழங்களை எலி, கரப்பான் பூச்சி போன்றவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த மரபணுக்களை சேர்க்கிறோம் என்று அமெரிக்க மரபணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த வகை காய்கறி - பழங்கள் சீக்கிரம் கெடாது. மாதக்கணக்கில் புத்தம் புதிதாக காய்த்த காய்கறி - பழுத்த பழம்போல் தோன்றும். இந்த வகை காய்கறி - பழங்களை சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை பழங்களில் வாஷிங்டன், பிஜி, ஆஸ்திரேலியா என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்கப்படும் இப்பழங்கள் பற்றி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கிருஷ்ணா மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மரபணு மாற்று தரக்கட்டுப் பாட்டு குழு விஞ்ஞானிகள் பலர் மரபணு கத்திரிக்காயை பாதி அளவு பயிரிட அனுமதிக்கலாம். மேலும் இதுபற்றி சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு மரபணு கத்திரிக்காய் மட்டும் அல்ல, மரபணு காய்கறி - பழங்கள் அனைத்துக்கும் திடீர் தடை விதித்துள்ளது. இதுபற்றி மாநில விவசாய மந்திரி ராம்கிருஷ்ணா குஷ் மரியா, ட்மோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரபணு காய்கறி- பழங்களில் பல்வேறு விலங்கு களின் மரபணு சேர்க்கப்படுவதால் அவை அசைவமாகி விடுகிறது. நம் நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த மரபணு காய்கறி - பழங்களை அனுமதித்தால் நம் நாட்டில் உள்ள சைவ கலாசாரம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் மரபணு காய்கறி - பழங்கள் பயிரிடுவதற்கும் விற்பதற்கும் தடை விதித் துள்ளோம். மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு பயிர்கள் பற்றி மேலும் பரிசோதனை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நாங்கள் இதையும் எதிர்க்கிறோம். எங்களது மாநிலத்தில் மரபணு பயிர்களை பரிசோதனை செய்வதற்கு கூட அனுமதி தர மாட்டோம். இப்பயிர்களை பரிசோதனை செய்தால் நம் நாட்டில் இயற்கையான பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மரபணு பயிர் விளைவித்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாது. இதனால் நான் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமே சுக்கு சமீபத்தில் அனுப் பிய கடிதத்தில் எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் மரபணு பயிர்களை பயிரிட தயாராக இல்லை.

அதை எங்கள் மாநிலத்தில் பயிரிட வைக்கும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். நாங்கள் மக்கள் நலனுக்கு உகந்த இயற் கையான காய்கறி - பழங் களை மட்டுமே பயிரிடுவோம்!! என்று குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வு : 70 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.



மின்சாரத் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் திருத்தணி பகுதியில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருத்தணி பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம், அத்திமஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, மத்தூர், புச்சிரெட்டிப்பள்ளி, வீரமங்களம், சுற்றுப்புற கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

இத் தொழிலை நம்பி 70 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதி விசைத்தறிகளில் காட்டன் ரக வேட்டிகள், புட்டா, கோர்வை, கட்டம், பிளைன் ரக காட்டன் சேலைகள் மற்றும் லுங்கிகள், தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி-சேலை திட்டத்துக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையும், மின்வெட்டு காரணமாகவும் விசைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டியால், நூல் விலை உயர்வை காட்டி உற்பத்தியான ஜவுளிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்க முடியவில்லை.

தினசரி 12 மணி நேர சுழற்சி முறையில் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. ஒரு விசைத்தறியில் 12 முதல் 15 மீட்டர் வரை நெசவு செய்யப்படுகிறது. ஒரு தறி இயக்கினால் ரூ. 75 முதல் ரூ. 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அறிவிக்கப்பட்ட மின் தடை 3 மணி நேரம், அறிவிக்கப்படாத மின் தடை 6 மணி நேரம்.

இதனால் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கஞ்சி தொட்டி திறக்கும் நிலை: தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடால் 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. மின் வெட்டால் 70 ஆயிரம் விசைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருமானம் இழப்பு ஏற்ப்பட்டு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை ஏற்படும் என நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெசவாளர் ஒருவர் கூறும்போது: நூல் ஏற்றுமதி செய்யப்படுவதால் நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், லுங்கிகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மின்வெட்டு காரணமாக தறி ஒன்றுக்கு 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. விசைத்தறி உபத் தொழிலான பாவு ஓட்டுவதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. டப்பா மிஷினில் நூல் சுற்றுவோர் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏற்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு ரூ. 40 கூட வருமானம் வருவதில்லை.

நூல் விலையை குறைக்க வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். மத்திய, மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஐ.ஜி.


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கடலோர காவல் படையின் (கிழக்கு மண்டல) கமாண்டர் ஐ.ஜி. எஸ்.பி. சர்மா தெரிவித்தார்.

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் ரகசிய கண்காணிப்பு- பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும்போது நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவளத் துறையினர் மூலம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தவறுதலாக நமது கடல் எல்லையைத் தாண்டி மீன்வளம் செறிந்த பகுதிகளைத் தேடி செல்லும் நமது மீனவர்களை கடலோர காவல் படையினர் எச்சரித்தும் வருகின்றனர்.

இதே போல நமது கடற்பகுதிக்குள் ஊடுருவும் இலங்கை மீனவர்கள் மீதும் கடலோர காவல் படை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாள்களில் மட்டும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை- தமிழகம் இடையே கடலோரப் பகுதியில் நமது மீனவர்களை காக்கும் வகையில் கடலோர காவல் படையின் கப்பல்கள், ரோந்து படகுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரகசிய கண்காணிப்பும் முக்கிய அம்சமாகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை, வருமுன் காக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவே மிகவும் அவசியமாகிறது. புலனாய்வு தகவல்களைப் பெறுவதற்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. கடல்சார் துறை, கடலோர பாதுகாப்பிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.

இது நாட்டின் 7,500 கிலோ மீட்டர் தூர கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை கண்காணிக்கவும் உதவுகிறது. நாட்டின் வணிகப் போக்குவரத்தில் 90 சதவீதம் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது.

கடல்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க... லட்சத்தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரித்தது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து, இப்போது சோமாலியா கரையோரம், அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதிகளிலும் கடல் சார் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்திய கப்பல்களை சுற்றி வளைப்பதோடு ஊழியர்களை பிணையக் கைதிகளாக பிடிப்பதிலும் கடற்கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடற்கொள்ளையர்களுக்கும், சில தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. சாதாரண வள்ளங்கள் முதல் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் வரை நமது கடற்பகுதியில் ஏராளமான மீன்பிடி கலன்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், நமது கடற்பகுதியில் ஊடுருவும், சந்தேகத்துக்கு இடமான அன்னிய மீன்பிடி கப்பல்கள், படகுகளைக் கண்டவுடன் தகவல் கொடுக்குமாறு ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் மீனவ மக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பு: இதுதவிர செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய நீண்ட தூர தடம் அறியும் சாதனங்கள் (எல்.ஆர்.ஐ.டி.), சென்சார் கருவிகள், ஏரேஸ்டட்ஸ் சாதனங்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் நவீன ரேடார்கள் உதவியுடன் ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர்போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கடலோர காவல் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஐ.ஜி. எஸ்.பி.சர்மா.

இதில், மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என். விட்டல், சென்னை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கான பயிற்சி அகாதமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் கவுதம் பானர்ஜி, இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் (தென் மண்டலம்) தலைவர் பிரதிப்தா கே. மொஹபத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரூ. 214 கோடி கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது ? ஜெயலலிதா.


மும்பையைச் சேர்ந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.214 கோடி கடனைவட்டியுடன் உடனடியாகத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சிபிஐ-யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதல் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில்தான் இது முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது.

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவுக்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை அலைக்கற்றை ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக திமுக முக்கிய பங்காற்றுகின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில்தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின் ஆவணங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் இப்போது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?

20 சதவீத பங்குளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?

கலைஞர் டிவியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தராததையடுத்தே கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

புதிதாக தொடங்கப்பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

அலைக்கற்றை வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியுடன் டிபி ரியாலிட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உத்தரவாதமற்ற கடனாக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

திடீரென இந்தக் கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

எனவே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. முன்னாள் அமைச்சர் ராசாவும் கருணாநிதி குடும்பத்தினரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

எனவே கனிமொழியை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சிபிஐ தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை. நீதியை நிலைநாட்ட வேண்டுமானால் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

கல்பாக்கத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு.


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இயக்குநர் பல்தேவ்ராஜ். இவர் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த அணுமின்நிலையத்தில் புதிய இயக்குநராக சுபாஸ் சந்திரசேதல் பொறுப்பேற்கிறார்.

இவர்கள் இருவரும் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கல்பாக்கத்தில் பாவினி அதிவேக ஈனுலை ரூ.5,627 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிந்து 2012-ல் இந்த ஈனுலை மின் உற்பத்தியை தொடங்கும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ரூ.4.45-க்கு எங்களால் வழங்க முடியும். இவையல்லாமல் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் இங்கு அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்தை தொடர்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு அதுபோல் ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

கல்பாக்கம் அணுமின்நிலையம் கடல் மட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளது. அதிவேக ஈனுலை(பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கடல் நீர் உள்ளே சென்று இப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

இங்கு மின்சாரத் தடை ஏற்பட்டால் மொபைல் ஜெனரேட்டர்கள் உள்ளன. மின்தடை ஏற்படும் பகுதியில் மொபைல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் கொடுக்க முடியும். இங்குள்ள சென்னை அணுமின் நிலையத்துக்கும் இந்த மொபைல் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இப்பேட்டியின்போது பாவினி அணுமின்திட்ட இயக்குநர் பிரபாத்குமார், சென்னை அணுமின்நிலைய இயக்குநர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


பிளஸ் - 2 மாணவி கற்பழிப்பு : தனியார் கம்பெனி ஊழியர் சிக்கினார்.

பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: மர்ம சாவு; தனியார் கம்பெனி ஊழியர் சிக்கினார்

கோவையை அடுத்துள்ள துடியலூர் நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் தீபிகா (வயது 16). பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஆர்.வி. நகர், கூடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்காக ஆர்.வி.நகரில் வசிக்கும் தனது பாட்டி கனகலதா வீட்டில் தீபிகா தங்கி இருந்தார். தீபிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான சதீஷ் குமாருக்கும் (24) கடந்த சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்தது.

முதலில் அத்தை மகன் என்ற உறவு இருப்பதாக நினைத்து சதீஷ்குமாருடன் தீபிகா பழகியுள்ளார். கனகலதா வீட்டுக்கு சதீஷ்குமார் அடிக்கடி வந்து தீபிகாவை சந்தித்து பேசி வந்தார். இதனை கனகலதா கண்டித்தார். மேலும் உறவு முறையில் சதீஷ்குமார் அத்தை மகன் அல்ல என்றும் அண்ணன்-தங்கை உறவுதான் வரும் என்றும் தீபிகாவிடம் கனகலதா கூறி எச்சரித்திருந்தார்.

இருந்த போதிலும் தீபிகாவும், சதீஷ்குமாரும் நெருங்கி பழகி வந்தனர். நேற்று இரவு ஒரு அறையில் கனகலதாவும் மற்றொரு அறையில் தீபிகாவும் இருந்தனர். இன்று அதிகாலை தீபிகாவின் பாட்டி கனகலதா அந்த அறைக்கு சென்றார். அங்கு தீபிகா பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த நேரத்தில் சதீஷ்குமார் கனகலதாவை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதை பார்த்த கனகலதா சத்த மிட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் இது தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் டி.எஸ்.பி. மாடசாமி, இன்ஸ் பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வில்லியம்ஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தீபிகா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை உறுதி செய்ய சதீஷ்குமாரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

சதீஷ்குமாரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சதீஷ்குமாரை மேட்டுப் பாளையம், கோவில் பாளையம், கோவை பகுதியில் தேடி வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் கோவில் பாளையத்தில் தனது நண்பர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரது நண்பர் உதவியுடன் பெரியநாயக்கன் பாளையத்துக்கு போலீசார் வரவழைத்தனர். அங்கு அவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது போலீசாரிடம் சதீஷ்குமார் கூறியதாவது:-

நேற்று இரவு நான் தீபிகாவின் பாட்டி கனகலதாவுக்கு தெரியாமல் தீபிகா அறைக்கு சென்றேன். அங்கு தீபிகாவுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் பேசினார். இது தீபிகாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னைவிட்டு வேறு பெண்ணிடமும் பழகுகிறாயா? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். அவரை சமாதானம் செய்த நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்.

நடுஇரவில் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தீபிகா வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்தேன். நீ உடனே வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தீபிகா கூறினார். இதனால் பயந்து போன நான் சற்று நேரம் கழித்து தீபிகா வீட்டுக்கு சென்றேன். அங்கு தீபிகா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் தீபிகா தூக்கில் தொங்கிய கயிற்றை அறுத்து கீழே இறக்க முயன்றேன். அந்த நேரத்தில் தீபிகாவின் பாட்டி அங்கு வந்ததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் தீபிகாவின் சாவில் மர்மம் நீடிக்கிறது. உண்மையில் தீபிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தீபிகா கொலை செய்யப்பட்டார? அல்லது தற்கொலை செய்து கொண்டாராப என்பது தெரிய வரும் என்று கூறினார். தீபிகாவுக்கு 16 வயதே ஆவதால் அவரை கற்பழித்ததாக சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.