Sunday, May 1, 2011

சைவ கலாசாரம் அழிந்து விடும் அபாயம் - அசைவமாகும் மரபணு காய்கறி , பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை.

விலங்கு மரபணு சேர்ப்பதால் அசைவமாகும் மரபணு காய்கறி - பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை

சர்வதேச விதை நிறுவனங்கள் இயற்கையான காய்கறி - பழ விதைகளில் விலங்குகளின் உயிரணு மற்றும் சில வைரஸ் கிருமிகளை சேர்த்து மரபணு காய்கறி - பழங்களை உருவாக்குகிறார்கள். மரபணு காய்கறி - பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்வதால் அவை அசைவமாகி விடுகின்றன.

பெரும்பாலான மரபணு காய்கறி - பழங்களில் தவளை, எலி, கரப்பான் பூச்சி, பூனை, முயல் போன்ற விலங்குகளின் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன.

காய்கறி - பழங்களை எலி, கரப்பான் பூச்சி போன்றவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த மரபணுக்களை சேர்க்கிறோம் என்று அமெரிக்க மரபணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த வகை காய்கறி - பழங்கள் சீக்கிரம் கெடாது. மாதக்கணக்கில் புத்தம் புதிதாக காய்த்த காய்கறி - பழுத்த பழம்போல் தோன்றும். இந்த வகை காய்கறி - பழங்களை சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை பழங்களில் வாஷிங்டன், பிஜி, ஆஸ்திரேலியா என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்கப்படும் இப்பழங்கள் பற்றி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கிருஷ்ணா மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மரபணு மாற்று தரக்கட்டுப் பாட்டு குழு விஞ்ஞானிகள் பலர் மரபணு கத்திரிக்காயை பாதி அளவு பயிரிட அனுமதிக்கலாம். மேலும் இதுபற்றி சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு மரபணு கத்திரிக்காய் மட்டும் அல்ல, மரபணு காய்கறி - பழங்கள் அனைத்துக்கும் திடீர் தடை விதித்துள்ளது. இதுபற்றி மாநில விவசாய மந்திரி ராம்கிருஷ்ணா குஷ் மரியா, ட்மோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரபணு காய்கறி- பழங்களில் பல்வேறு விலங்கு களின் மரபணு சேர்க்கப்படுவதால் அவை அசைவமாகி விடுகிறது. நம் நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த மரபணு காய்கறி - பழங்களை அனுமதித்தால் நம் நாட்டில் உள்ள சைவ கலாசாரம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் மரபணு காய்கறி - பழங்கள் பயிரிடுவதற்கும் விற்பதற்கும் தடை விதித் துள்ளோம். மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு பயிர்கள் பற்றி மேலும் பரிசோதனை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நாங்கள் இதையும் எதிர்க்கிறோம். எங்களது மாநிலத்தில் மரபணு பயிர்களை பரிசோதனை செய்வதற்கு கூட அனுமதி தர மாட்டோம். இப்பயிர்களை பரிசோதனை செய்தால் நம் நாட்டில் இயற்கையான பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மரபணு பயிர் விளைவித்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாது. இதனால் நான் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமே சுக்கு சமீபத்தில் அனுப் பிய கடிதத்தில் எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் மரபணு பயிர்களை பயிரிட தயாராக இல்லை.

அதை எங்கள் மாநிலத்தில் பயிரிட வைக்கும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். நாங்கள் மக்கள் நலனுக்கு உகந்த இயற் கையான காய்கறி - பழங் களை மட்டுமே பயிரிடுவோம்!! என்று குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: