Sunday, April 3, 2011

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் குவிய ஆரம்பித்துள்ளன. கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு தலா ரூ. 1கோடி பரிசளித்துள்ளது. இதுபோல டெல்லி அரசு, உத்தரகாண்ட் அரசு ஆகியவையும் பரிசுகளை அறிவித்துள்ளன.
Indian Cricket Team
Getty Images
உலகக் கோ்பைபப் போட்டியிந் இறுதியாட்டம் முடிந்த சில விநாடிகளிலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பரிசு குறித்த அறிவிப்பை ரவி சாஸ்திரி மூலம் வெளியிட்டது. அதன்படி வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும் என வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்தார். அதேபோல அணி பயிற்சியாளர் கிர்ஸ்டன், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும். அணித் தேர்வாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

டோணிக்கு டெல்லி அரசு ரூ. 2 கோடி

அதேபோல டெல்லி அரசும் பரிசுகளை அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு ரூ. 2 கோடி பரிசாக அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அதேபோல டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக், விராத் கோலி, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும்.

டோணி, சச்சினுக்கு முசெளரியில் வீடு

உத்தரகாண்ட் மாநிலம் விருதுகளையும், பரிசையும் அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு உத்தரகாண்ட் ரத்னா விருதை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேபோல டோணிக்கும், சச்சினுக்கும் முசெளரியில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தோற்றிருந்தால் என்னை வறுத்தெடுத்திருப்பார்கள் - டோணி.

ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா மட்டும் தோற்றிருந்தால், என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.
Suresh Raina, MS Dhoni and Harbajan Singh
Getty Images
கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த கேப்டனாக உருவெடுத்து விட்டார் டோணி. கங்குலியால் வென்று தர முடியாமல் போன உலகக் கோப்பையை டோணி வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இருப்பினும் நேற்றைய போட்டியின்போது டோணியின் சில முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அத்தோடு மட்டுமல்லாமல், தப்பு செய்கிறாரே டோணி என்ற விமர்சனமும் கூட எழுந்தது. ஆனால் இந்தியா பெற்ற வெற்றியும், டோணி ஆடிய ஆட்டமும் அத்தனையையும் துடைத்துப் போட்டு விட்டது.

இருந்தாலும் தன்னை நோக்கி எழுந்த, விஸ்வரூபம் எடுக்கக் காத்திருந்த ஏவுகணைகள் குறித்து டோணியும் அறிந்தே வைத்திருந்தார் போலும். போட்டியின் முடிவில் இதுகுறித்து அவரே குறிப்பிட்டார்.

டோணி கூறுகையில், இன்றைய போட்டி எனக்கு மிகக் கடுமையான ஒன்று. போட்டித் தொடர் முழுவதும் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி வந்தார். நல்ல பார்மிலும் அவர் உள்ளார். இந்த நிலையில் அவருக்குப் பதில் நான் களம் இறங்கியது பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன்.

ஒருவேளை எனது முடிவு தவறாகப் போயிருந்தால், நான் சரியாக ஆடாமல் போயிருந்தால் நிச்சயம் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பேன்.

ஆனால் நான் எடுத்த முடிவு சரியானதே. எனது முடிவை கிர்ஸ்ட்னும் கூட ஆதரித்தார். ஒரு வேளை நான் முன்னரே பேட் செய்யாமல் போயிருந்தால் அடுத்தடுத்து இடது கை வீரர்களாக மாறியிருக்கும். கம்பீர், யுவராஜ், சுரேஷ் ரெய்னா என தொடர்ந்து இடது கை ஆட்டக்காரர்களாக களம் இறங்கியிருப்பார்கள். அது பெரிய ரிஸ்க்காகவும் மாறியிருக்கும்.

மேலும், இலங்கை அப்போது ஸ்பின்னர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும் என கருதி அந்த முடிவை எடுத்தேன். அது சரியானதாகவே இருந்தது.

அதேபோல இன்னும் கூட நிறைய கேள்விகளுடன் பலரும் காத்திருந்தனர். ஏன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஏன் ஸ்ரீசாந்த்தை சேர்த்தீர்கள் என்பது போல பல கேள்விகள் உள்ளன. ஆனால் நாம் கோப்பையை வென்று விட்டோம். எனவே இந்த கேள்விகளுக்கு இப்போது இடமில்லை என்று நான் கருதுகிறேன்.

முரளிதரனின் பந்து வீச்சை நான் வெற்றிகரமாக சந்தித்தேன். நான் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பெற்றிருந்த முரளிதரனுடன் விளையாடியது உபயோகமாக இருந்தது. அவரது தூஸ்ரா வித்தைகளை நெருக்கமாக இருந்து பார்க்க முடிந்தது. அவரது பந்து வீச்சின் ரகசியத்தையும் அறிய முடிந்தது. எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். எனவேதான் இறுதிப் போட்டியில் அவரது பந்துகளை என்னால் எளிதில் அடிக்க முடிந்தது.

நானும் கம்பீரும் சேர்ந்து நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து ஆடினோம், நிலைத்து ஆடினோம், சிறப்பாக ஆடினோம். ரிஸ்க்கான ஷாட்கள் வேண்டாம் என்று முடிவு செய்து அதற்கேற்ப ஆடினோம். அதற்கு நல்ல பலன் இருந்தது என்றார் டோணி.

உலகக் கோப்பையை நாட்டிற்கும், சச்சினுக்கும் அர்ப்பணித்த அணி,
கனவு மெய்ப்பட்டது.

கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதை நாட்டிற்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் அர்ப்பணி்த்தது.
Indian Players
Getty Images
கோப்பையை வென்றவுடன் இந்திய அணி வீரர்கள் சச்சினை தங்கள் தோளில் வைத்து மைதானத்தில் வலம் வந்தனர். தங்களுக்கு போராதரவு அளித்த ரசிகர்களுக்கும், சச்சினுக்கும் வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

உலகக் கோப்பை என்பது ஒரு பெரிய விஷயம், இன்று நாங்கள் வென்றுவிட்டோம். இதை சச்சினுக்கு கொடுக்கிறோம். இது நான் விளையாடிய 3-வது உலகக் கோப்பை. இறைவனுக்கு நன்றி என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார் ஹர்பஜன் சிங்.

நான் விளையாடிய முதல் உலகக் கோப்பையிலேயே வெற்றி பெற்றுவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும். இநத கோப்பையை இந்திய மக்களுக்கு அளிக்கிறோம். சச்சின் கடந்த 21 வருடங்களாக சுமையை தன் தோளில் சுமந்தார் இன்று நாங்கள் அவரை தோளில் வைத்து கொண்டாடினோம் என்றார் விராத் கோலி.

இதை நம்ப முடியவில்லை. இந்தியாவிற்காகவும், சச்சினுக்காகவும் இந்த உலகக் கோப்பையை எங்கள் அணி வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதை சொல்ல வார்த்தையே இல்லை என்றார் வெற்றி பெற்றவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்ட யுவராஜ் சிங்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 21 விக்கெட் எடுத்தவர்கள் ஜாஹிர் கானும், பாகிஸ்தான் கேப்டன் ஷஹித் அப்ரிடியும் தான். நாங்கள் இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்றிருந்தோம். நாங்கள் சச்சினுக்காக சந்தோஷப்படுகிறோம். அவர் நாட்டிற்காக எவ்வளவோ செய்திருக்கிறார். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஜாஹிர் கான்.

நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர் கௌதம் கம்பீர். எங்கள் கனவு நனவாகிவிட்டது. அனைத்து பெருமையும் சச்சினுக்கு தான். அவருக்காக நாங்கள் விளையாடினோம் என்றார் கம்பீர்.


ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்க வேண்டியுள்ளது - விஜயகாந்த்.


திமுகவினரின் வாயில் வலிய போய் விழுந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த். லேட்டஸ்டாக அவங்களுக்கு ஆப்படிக்க, ஆஃப் அடிச்சாதான் சரியா வரும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜயகாந்த்தை தனது பிரசாரக் கூட்டங்களிலெல்லாம் தாறுமாறாக விமர்சித்து வருகிறார் வடிவேலு. விஜயகாந்த்தை லூஸு, குடிகாரன் என்றெல்லாம் பேசி வருகிறார். டம்மி பீஸ் என்கிறார்,

இந்த நிலையில் விஜயகாந்த்தும் தன் பங்குக்கு திமுகவினர் மற்றும் ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாயில் வலிய வந்து சிக்கிக் கொள்கிறார். சமீபத்தில், தர்மபுரியில் நடந்த பிரசாரத்தின் போது சொந்தக் கட்சி வேட்பாளரையே போட்டுஅடித்து விட்டார் விஜயகாந்த். இதை விடிய விடிய ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் டிவிகளில் காட்டி விஜயகாந்த்தை நாறடித்து விட்டனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் அவராகவே ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாய்கள் மெல்வதற்கு அவலைக் கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தர்மத்துப்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்க வேண்டியுள்ளது - என்ன செய்வது என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் பரபரப்பிற்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது மது அருந்த வேண்டியுள்ளது. என்பதை மிக வெளிப்படையாக கூறியுள்ளார். அப்போது தான் தன்னால் பேச முடியும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்.

ஒரு தேர்தலில் வாக்கு சேகரிக்க என்ன பேசவேண்டுமோ அதை விட்டுவிட்டு தேவையற்ற வார்த்தைகளை நிதானமின்றி உளறிவருகிறார் விஜயகாந்த். என்றே எண்ணத் தோன்றுகிறது.

சின்னக் கவுண்டர் வழங்கும் ரோஷக்காரன் தா.பாண்டியன்.

ஐந்து வருசம் மத்தியில அன்புமணி சுகாதரத்துறை அமைச்சராக இருந்தாரே, அப்போது ஏன் வன்னியர்களுக்கு வேலை வாங்கி தரவில்லை என ராமதாசிடம் கேட்கிறார் விஜயகாந்த். என் பெயரை அவரை சொல்லச் சொல்லுங்க அவரு பேரயும் நான் சொல்றேன் என்கிறார் விஜயகாந்த். இந்த விளையாட்டு முடிவதற்கு முன்னரே நல்ல போதையில் இருந்த கேப்டன் தேமுதிக ஆள் ஒருவரை அடிக்கவும் தவறவில்லை.

என்ன போராட்டம் பண்ணி எல்லா சிறைக்கும் ராமதாசு போனார். மரம் வெட்டிப் போட்டதெல்லாம் ஒரு போராட்டமா? என்று சொன்ன கேப்டன், வட மாவட்டங்களில் வன்னியர், பறையர் மோதல்களை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்கள் (ராமதாசு, திருமா) அது வளர்க்கும் சாதி தீக்கே பலியாவார்கள் என்றும் சாபம் விடத் தொடங்கினார். ராமதாசு வந்தால் வன்னியருக்குச் செய்வார் விஜயகாந்த் வந்தால் நாயக்கருக்கு செய்வார் என்றால் என்ன ம......க்கு இவர்கள் மற்ற சாதிகளிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். மற்ற சாதிகளும் என்ன மசிருக்கு ஓட்டுப் போடப் போகிறார்கள். இதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா ?

நடிகரை நடிகர் என்று சொல்லாமல் சின்னக் கவுண்டர் சுகன்யா போல என்ன நாயக்கரே என்றா சொல்ல வேண்டும் என விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். இல்ல டைட்டில் சாங்க் போட்டு கண்ணு பட போகுதய்யா சின்ன நாயக்கரே என்று பாட வேண்டும் என எதிர்பார்க்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் ஏற்கெனவே வர்ணம் என்று சாதிய பிரிச்சுப் பேசாதீங்க என திரைப்பட விழாவில் பேசியவர் விஜயகாந்த். திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் அவரது கட்சித் தலைமையும், கூட்டணிக் கட்சித் தலைமையும் பெரியாரைத் தெரியாமல் அல்லது சாதி வரலாற்றைத் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பதால் இதுபோன்ற காமடிகளையும் தவிர்க்க இயலாதுதான்.

சின்னக்கவுண்டர் கதையை மிஞ்சி நிற்கிறது தேவர் தா.பாண்டியன் கதை. அவர்களது மாவட்ட செயலர் ஒருவரை இப்போது கட்சியை விட்டு நீக்கியது காமடியாகி விட்டது. தளி தொகுதியில் போட்டி வேட்பாளராக களமிறங்கி அதிலும் விருப்பமின்றி திமுக விற்கு தாவினார் அவர்களது முன்னாள் மா.செயலர். அவர் சும்மா போகாமல் தா.பா காசு வாங்கி வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் என்று போட்டு கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தா.பா வோட தவளை வாய் சும்மா இருக்காம நாங்க எல்லாம் போராட்டம் நடத்தித்தான் சிறைக்கு போனவர்கள். செங்கொடி இயக்கத்தில் ஊழல் பண்ணி யாரும் போனதில்லை என்று அடித்துவிட்டார். கேரளத்தின் சிபிஎம் தோழர் பிரணாய் விஜயனை அப்புறம் திருப்பூர் கோவிந்தசாமியை மனதில் வைத்துதான் வாரிவிட்டார் என்றும் தெரியவே பேச்சை கவனித்தேன்.

நான்கு ஆண்டுகளாக யாரை எதிர்த்து அரசியல் நடத்தினோமோ அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிட்ட பிறகுதான் அவரது அரசியல் கண்ணோட்டமே நமக்கு இப்போது புரிகிறது என்றார் தா.பா. ஆனாலும் பக்கத்தில் இருந்த மகேந்திரனுக்கு இதெல்லாம் சுருக்கெனக் குத்தியதாகத் தெரியவில்லை. ஆனாலும் விட்டாரா பாருங்கள். இரண்டு கட்சியும் இலவசத்தை வழங்குவதற்காக கடன் வாங்குகின்றன அதற்கு வட்டி கூட கட்டுவதில்லை என்றார். மகேந்திரன் நெற்றியை சுருக்க ஆரம்பித்தார். உடனே சுதாரித்த தா.பா ஆனாலும் ஜப்பானது அனுபவத்தை உட்செறித்துக் கொண்ட அம்மா பசுமைக்குடில்கள் போல வீடு அமைக்கப் போகிறார் என்பதை வேண்டுமானால் வரவேற்கலாம் என்றார். திமுக வில் சேர்ந்த அந்த மாவட்ட செயலர் சொல்வதற்கும் இவர் சொல்வதற்கும் உள்ள மயிரிழை வேறுபாட்டை யார் கண்டறிந்து சொல்வது எனத் தெரியவில்லை.

என்னங்க இது? விஜயகாந்த பேச ஆரம்பித்து கம்யூனிஸ்டுகள தாக்க ஆரம்பிச்சிட்டீங்க என்கிறீர்களா? வடிவேலு தாங்க நம்ம ஆஸ்தான நடிகன். சின்னக்கவுண்டர் வேடத்தில் திருட்டுப்பயலை அறிமுகம் செய்த அவர், இருந்த கட்சியில் இருந்தே இன்னொரு கட்சிக்குத் தாவுவதில் மன்னனான தா.பா வையும் கைப்புள்ள கேரக்டரில் கலாய்த்தும் இருக்கிறார். என்ன ஒரு வித்தியாசம் என்றால் தா.பாவை படத்தில் நல்லா கலாய்த்த வடிவேலு கேப்டன பார்த்த இடத்திலெல்லாம் போட்டுத் தாக்குறாரு. தா.பா இதை மட்டும் பேசவில்லை. அவர் கம்யூனிசத்தை ஏ.எம்.கே.விடம் ஜூனியராக இருந்தபோதே படித்தவர் இல்லையா ? அதனால்தான் சொன்னார், தேர்தல் ஆணையம் எடுக்கும் கெடுபிடியான முயற்சிகளை ஆதரிக்கிறேன். ஆனால் இதனை அமல் செய்பவர்கள் போன ஆட்சியால் நியமிக்கப்பட்டவர்கள்தானே !

அட, ஒரு கம்யூனிஸ்டு வாயில இருந்து இப்படி பேச வருமா என நினைக்கிறீர்களா ? தேர்தல் ஆணையத்தை கலைஞர் குறைசொல்வது அல்லது கலெக்டர் சகாயத்தை அழகிரி குறைசொல்வதை அதனுடைய அரசியலை எல்லாம் போட்டுத் தாக்குவது தேவைதான். ஆனால் 100 சதவீதம் ஓட்டுப்போட மக்களை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் மாணவர்களைப் பயன்படுத்தப் போகிறதாம். மாணவர்கள் படிப்பு கெடும் என்றெல்லாம் சிபிஎம் போல சிந்திப்பதை விட ஜனநாயக நாட்டில் ஓட்டுப் போடாமல் இருப்பது கூட ஒரு ஜனநாய உரிமைதானே என்பதும் அதனைப் பறித்து கட்டாயம் ஓட்டுப்போடணும் மறுத்துப் பேசினா உங்கள எல்லாம் சவுதிக்கு நாடு கடத்துனாத்தான் தெரியும்டா என்கிறது விஜயகாந்த் ரசிகர் பட்டாளம். அந்த அலைவரிசையில் தா.பா வும் வழக்கினை அதாங்க ஜனநாயகத்தை பிராக்டீஸ் செய்கிறார் போலும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் வேலையை விட்டுவிட்டு அடுத்த 5 ஆண்டுகளும் நாங்க சொல்ற யாரு மேலயாவது கட்டாயம் நம்பிக்கை வச்சே ஆக வேண்டும் என பிரச்சாரம் செய்வதை தடுக்க அதன் வழியாக உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். இருபுறமும் யாரும் இல்லை. ஆம் பிரச்சாரத்தை பிரச்சாரத்தாலே முறியடிப்போம்.

powrnamy.blogspot.com

ரன் வறட்சியைப் போக்கி, கோப்பைக் கனவையும் நனவாக்கிய கேப்டன் டோணி.

எல்லோரும் பேட் செய்கிறார்கள், டோணி என்ன செய்கிறார் என்று கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கு நேற்று அட்டகாசமான, ஆணித்தரமான முறையில் அருமையான பதிலளித்து விட்டார் கேப்டன் டோணி. நேற்று அவரது பேட்டிங் பிரளயத்தால்தான் இலங்கையை நசுக்கி, இந்தியா தனது 28 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்க முடிந்தது.
India won World Cup
Getty Images
இந்தத் தொடர் முழுவதுமே டோணியிடமிருந்து பெரியஅளவில் ரன்கள் வரவில்லை. மேலும், அவரது முடிவுகள் பலவும் கூட வி்மர்சிக்கப்பட்டன. குறிப்பாக நேற்றே கூட அஸ்வினுக்குப் பதில், ஸ்ரீசாந்த்தை சேர்த்தது கூட விமர்சிக்கப்பட்டது. ஆனால் தன்னை நோக்கி வீசப்பட்ட ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் தனது அசாத்தியமான பேட்டிங் மற்றும் அரிய வெற்றியின் மூலம் ஆணித்தரமாக பதிலளித்து விட்டார் டோணி.

நேற்று அவர் போட்டியை முடித்து வைத்த விதம் அட்டகாசமானது. அழகான ஒரு சூப்பர்ப் சிக்ஸரை விளாசி இந்தியாவை உற்சாகத்தின் உச்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டார் டோணி.

இந்தத் தொடர் முழுவதுமே 6வது நிலை வீரராகத்தான் களம் இறங்கினார் டோணி. அவருக்கு முன்பு யுவராஜ் சிங் வருவார். அதன் பின்னர்தான் டோணி இறங்குவார்.

ஆனால் நேற்று ஆச்சரியமளிக்கும் வகையில் 5வதாக அவர் களம் இறங்கினார். அப்போது இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. 3 முக்கிய விக்கெட்களை இழந்து 114 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா. இதனால் தானே களம் இறங்கி அணியை மீட்க முடிவு செய்து யுவராஜுக்குப் பதில் அவரை இறங்கி விட்டார் டோணி.

அதேபோல களத்தில் குதித்தது முதல் கடைசி வரை மிகுந்த மன உறுதியோடும், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறியோடும் ஆடினார் டோணி. அவரும் கம்பீருமாக சேர்ந்து போட்ட 100 ரன் பார்ட்னர்ஷிப்பிலிருந்தே டோணியின் வெற்றி தாகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ரசிகர்களால். சும்மா, சொல்லக் கூடாது, இருவரும் சேர்ந்து ஆடியது மிகப் பிரமாதமாக இருந்தது.

வெற்றி கிட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்தவர்களை ரிலாக்ஸ் ஆக்கி, சந்தோஷத்தைக் கொண்டாட தயார்படுத்தி விட்டனர் கம்பீரும், டோணியும். கம்பீர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், டோணி அதிரடிக்குத் தாவி பின்னி எடுத்து விட்டார்.

குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது கையில் சிக்கி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். திஷரா பெரைரா, மலிங்கா ஆகியோரின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

டோணியை அடக்க இலங்கை கேப்டன் சங்கக்காரா செய்த அத்தனை உத்திகளும் தவிடுபொடியாக்கி விட்டன. 2 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து நிமிர்ந்து நின்றார் டோணி, ஆட்ட முடிவில்.

யுவராஜ் சிங்குக்குப் பதில் டோணிநேற்று களம் இறங்கியதற்கு முக்கியக் காரணம், அப்போது இலங்கை இரண்டு ஆப் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவைக் கலைக்க முயற்சித்ததே. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டாம் என்று நினைத்தார் டோணி. இதனால்தான் யுவராஜுக்குப் பதில் அவரே இறங்கி விட்டார். ஆனால் அதிர்ஷ்டம் டோணியின் பக்கம் இருந்ததால் தப்பித்தார். ஒருவேளை அவரது முடிவு தப்பாகப் போயிருந்தால் விமர்சகர்களின் வாயில் சிக்கி வறுத்தெடுக்கப்பட்டிருப்பார் டோணி. போட்டியின் முடிவில் அவரே இதை சிரித்தபடி கூறினார்.

ஆரம்பத்தில் மிகவும் கவனமாகத்தான் ஆடினார் டோணி. இந்தியாவின் நிலை வலுப்பட்ட அடுத்த விநாடியே அவர் அதிரடிக்குத் தாவினார். இலங்கை பந்து வீச்சு வெளுக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவர் போட்ட இரண்டு சிக்ஸர்களும் சூப்பர்ப்.

அதிலும் முத்தையா முரளிதரனின் பந்துகளை அவர் அடித்து நொறுக்கியபோது மைதாமே குலுங்கிப் போய் விட்டது. அதுவரை நன்றாகத்தான் பந்து வீசிக் கொண்டிருந்தார் முரளி. ஆனால் டோணியிடம் சிக்கிய அவரது சுழற்பந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளிதரன் முன்பு விளையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து முரளியின் பந்து வீச்சை சிதறடித்து விட்டார் டோணி.

நேற்றைய அதிரடி ஆட்டம் மூலம் தன் மீதான விமர்சனத்தைத் துடைத்து, தனது பேட்டிங் பிரளயத்தையும் மீட்டு, இந்தியாவின் 28 ஆண்டு கால கனவையும் நனவாக்கி, ஒரே 'ஸ்டிரோக்கில்' பல சிக்ஸர்களை அடித்து விட்டார் டோணி.

நான் முதலமைச்சரா? கலைஞர் பேச்சு.




வேலூர் கோட்டை மைதானத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

வேலூர் கோட்டைவெளி மைதானத்தில், திமுக அணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி அவர் சனிக்கிழமை இரவு பேசியது:

நான்கு, ஐந்து நாள்களுக்கு முன் அரசியலை தொடங்கியவர்களையும், 75 ஆண்டுகாலம் பொதுத் தொண்டு ஆற்றி, மக்களோடு இருந்து அடக்குமுறைகளை ஏற்று இந்த சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னை போன்றவர்கள், சிறைச் சாலைகள் சித்திரவதை கூடங்களாக இருந்தாலும், சிரித்த முகத்தோடு ஏற்று இந்த சமுதாயத்துக்காக இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கும் கழகத்தினரோடு,

4, 5 நாள்களுக்கு முன்பு அரசியலை தொடங்கியவர்களோடு பொருத்திப் பார்த்து, இவர்கள் இந்த நாட்டில் அரசியல் நடத்துகிறார்களே என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் எண்ண வேண்டாமா?


எனக்கு ஒன்று, இரண்டல்ல 87 முடிந்து 88 வயது நடக்கிறது. 75 ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். நான் சந்தித்து உறவாடிய, நட்பு கொண்டிருந்த நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்களில் சிலர் பிரிந்து விட்டார்கள். பிரிந்து விட்டார்கள் என்றால் என்னை விட்டு அல்ல. உலகை விட்டு பிரிந்து விட்டனர். இயற்கை எய்திவிட்டனர்.

கழகத்தில் இருந்து பிரிந்தவர்கள், வேறு கட்சியில் உள்ள அவர்களுக்கும் புகழஞ்சலி செலுத்துகிறேன் என்றால் அதுதான் தமிழ் பண்பாடு என்பதால் கூறுகின்றேன்.

உள்ளத்திலே எதற்கும் அஞ்சாமல் பாடுபடுகின்ற என்னை யார் யாரோ தூசாக கருதி பொடி, பொடியாக்கி விடுவோம் என்று கூறுகின்றனர்.

அழகிரியை கைது செய்யுங்கள் என போலீஸ் அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதை இன்றைய மாலை பத்திரிகையில் பார்த்தேன். எப்படி அவர் உத்தரவிடுகிறார்? யாருக்கு யார் உத்தரவிடுவது?.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் என்ற பெயரால் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. வெளியே போவதற்கும், வருவதற்கும் அனுமதி வாங்க வேண்டும். எனக்கே சந்தேகம் வருகிறது. இதை இங்குள்ள வேட்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தில் தேர்தல் ஆணையம் என்ற பெயரில் ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது. நண்பர் ஞானசேகரன் (காங்கிரஸ்) போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்களெல்லாம் புரிந்துகொண்டால்தான் என்னுடைய வேதனை, என்னுடைய கவலை போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரும்.

மக்களாகிய நீங்கள் என்னை தேர்ந்தெடுத்து முதல்வராக அமர வைத்திருக்கிறீர்கள். எனக்கு இப்போது ஏற்பட்ட சந்தேகம் இதுதான். இப்போது நான் முதலமைச்சரா? தமிழ்நாட்டை என் தலைமையில் உள்ள திமுக ஆள்கிறதா? தேர்தல் ஆணையம் ஆள்கிறதா? என்பதுதான்.


எனக்கே சந்தேகம். என்னை தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கியது நீங்கள், நான் முதலமைச்சரா? தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டு இருக்கிறதா? அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறதா? என்று சந்தேகம் எழுகிறது.


தேர்தல் ஆணையத்தை நான் பகைத்துக்கொள்ள மாட்டேன். அதனுடன் நான் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டால் அதை யாரும் குறை கூற மாட்டார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அணிகளையெல்லாம் ஒன்று திரட்டி அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலர் - மன்னிக்க வேண்டும் இங்கு யாராவது இருந்தால் - பூணூலை உருவிக்கொண்டு பாடுபடுகிறார்கள்.

தி.மு.க. தேசிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளோடு போட்டியிடுகிறது. நான் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். நான் பெரியாரின் பரம்பரை, அண்ணாவின் வழி வந்தவன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சுயமரியாதை உணர்வு, திராவிட உணர்ச்சியை, என் இதயத்தில் இருந்து யாரும் அழிக்க முடியாது. அந்த உள்ள உணர்வை தான் நாங்கள் வெளிபடுத்துவோம்.

இது வேட்பாளர்களுக்கு தெரியும். தோழமை கட்சியினர் அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தலில் போட்டுயிடுகிறவர்கள் எதை சொல்லி ஓட்டு கேட்கின்றனர்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதியை கூறி ஓட்டு கேட்கிறோம். நல்லாட்சியை தொடருவோம் என்று கேட்கிறோம். நாங்கள் 6-வது முறையாக தொடர்வோம். ஏழை, எளிய மக்களுக்கு நல்ல திட்டங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்கிறோம்.

அந்த அம்மையார் ஆட்சியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இரவு, பகல் பாராமல் கைது செய்யப்பட்டனர். போலீசார் இரவில் படுக்கை அறையில் இருந்த என்னை கைது செய்து சென்னை சிறையில் அடைத்தனர். அந்த ஆட்சி தொடர வேண்டுமா? என்னால் நியமிக்கப்பட்ட சாலை பணியாளர்கள் 12 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார்.

என்னுடைய பல்வேறு திட்டங்களை சிதைத்து, உடைத்து ரத்து செய்தார். அந்த கட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் இந்த திட்டம் தேவை இல்லை என்று நீங்களே வழிமொழிகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

நீங்கள் என்னை மறந்தாலும், துரத்தி விட்டாலும் நாங்கள், உங்களை மறக்க மாட்டோம், உங்களை விடமாட்டோம். உங்களை சிம்மாசனத்தில் உட்கார வைப்போம். எனவே உங்கள் நண்பர்கள், வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி நிச்சயம் பெற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.


குடும்ப ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகம் செழிக்கும்: ஜெயலலிதா.




திருநெல்வேலி நகரம் வாகையடி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வீ. பழனி, நான்குனேரி தொகுதி சமக வேட்பாளர் நாராயணன், ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் எஸ். ராயப்பன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு வேனில் இருந்தபடி ஜெயலலிதா பேசியதாவது:

இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் நடைபெறும் தேர்தல் அல்ல. நாட்டு மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதற்கான தேர்தல். அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்கான தேர்தல்.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவசி உயர்ந்துள்ளது. அதை குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் விலை ஒரு ஆண்டில் மட்டும் 9 முறை ஏற்றப்பட்டு லிட்டருக்கு ரூ. 15 வரை உயர்ந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை மூலம் ரூ. 50 ஆயிரம் கோடியையும், கிரானைட் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடியும் சம்பாதித்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு லோடு ரூ. 2,500 ஆக இருந்த மணல் விலை இப்போது ரூ. 13 ஆயிரமாக உள்ளது. சிமெண்ட் விலை மூட்டை ரூ. 150ல் இருந்து ரூ. 280 ஆக உயர்ந்துள்ளது.

ரூ. 3 ஆக இருந்த செங்கல் இப்போது ரூ. 6 ஆக உயர்ந்துள்ளது. இனிமேல் கனவில்தான் வீடு கட்ட முடியும். மின் உற்பத்தியைப் பெருக்கவில்லை. மின்சாரம் உபரியாக இருந்த நிலை மாறி இப்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. மின்வெட்டால் தொழில்கள், விவசாயம், ஜவுளி உற்பத்தி ஆகியன முடங்கி நலிவடைந்து வருகின்றன.

சட்டம், ஒழுங்கு என்பதே இல்லை. தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல. மக்களை அடக்கி ஆளுகிறது கருணாநிதியின் குடும்பம்.

தமிழ்நாட்டின் மொத்தக் கடனை ரூ. 1 லட்சம் கோடியாகப் பெருக்கிவிட்டார் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ. 1.80 லட்சம் கோடி ஊழல் செய்து சுரண்டப்பட்டுவிட்டது. அது யாருடைய பணம்? நாட்டு மக்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் செலவிடப்பட வேண்டிய பணம். அந்தப் பணம் அரசுக்கு வந்திருந்தால் நாடு வளர்ச்சி பெற்றிருக்கும், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பொருளாதாரம் மேம்பட்டிருக்கும். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை.

கருணாநிதி 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தும் நாட்டு மக்களுக்குப் பயன் இல்லை. அவரது குடும்பத்தினர்தான் பயனடைந்துள்ளனர். தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, பத்திரிகைகள், திரைப்படம் தயாரிப்பு, விமானங்கள், எஸ்டேட்டுகள் என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உள்ள அவரது குடும்பத்தார் உலகில் முதலாவது பணக்காரராக வர வேண்டும் என்பதே அவரது இலக்கு. ஆனால் உங்கள் நிலை என்ன? மக்கள் ஏழ்மையில் தத்தளிக்கின்றனர். விலைவாசி, மின்வெட்டால் நிம்மதி இழந்துள்ளனர்.

நிலங்களைத் திமுகவினர் ஆக்கிரமித்து வருகின்றனர். ரியல் எஸ்டே, திரைப்படத்துறையை கபளீகரம் செய்து வருகின்றனர். ஒரு குடும்பம் வாழ்வதற்காக 7 கோடி மக்கள் துன்பப்படுவதா? கருணாநிதியை இப்படியே விட்டால் தமிழ்நாடே அவரது குடும்ப வசமாகி விடும். உங்களை விரட்டப் பார்க்கும் அவரை நீங்கள் விரட்ட வேண்டும். கருணாநிதியின் குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் ஆட்சி மலர்ந்து குடும்ப ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகம் செழிப்பாக இருக்கும். அதற்கு ஜனநாயகத்தில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

மதுரையில் தேர்தல் அதிகாரிகளும், ஊழியர்களும் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் பணிநிரவல் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். சிறுபான்மை மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வித்திட்டது எனது தலைமையிலான ஆட்சியில்தான்.

கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு அவர்களுக்கு உரிய பலனை அளிக்காததால் அவர்கள் அதைத் திரும்ப ஒப்படைத்து விட்டனர். இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்தவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம். இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்போம். வஃக்பு வாரிய சொத்துகள் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

ஸ்ரீரங்கத்தில் வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த இலவச அறிவிப்புகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் இக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆ.ராசா உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் - வருவாய் இழப்பு 30,984 கோடி மட்டுமே .

குற்றப்பத்திரிகை ஆவணத்தை செய்தியாளர்களிடம் சனிக்கிழமை காட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள்.




2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், "முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத்தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 9 பேர் மீது மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்த நடவடிக்கை யால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 30,984 கோடி ரூபாய் மட்டுமே என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு ருக்கிறது.

சிறப்பு நீதிமன்றம்: தில்லியில் இதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் சனிக்கிழமை இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

80,000 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் குலாம் இ வாஹன்வதி, அதிகாரத் தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மாத இறுதியில் கூடுதல் குற்றப்பத்திரிகை: இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. அமைப்பு இந்த மாத இறுதிக்குள் கூடுதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதாகவும் மே 31-ம் தேதிக்குள் இந்த வழக்கில் விசாரணையை முடித்து விடுவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தது.

நீதிபதி திருப்தி: இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இதர ஆதாரங்கள் ஆகியவற்றை படித்துப் பார்த்ததாகவும் இந்த வழக்கைத் தொடர போதிய காரணங்களும் ஆதாரங்களும் இருப்பதாகத் தமக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் இனி வழக்கு விசாரணையைத் தொடரலாம் என்றும் நீதிபதி ஓ.பி. சைனி குறிப்பிட்டார்.

9 பேர் மீது குற்றப்பத்திரிகை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, அத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யூனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் ஆகியவை அந்த 3 நிறுவனங்கள்.

ஏமாற்றுதல், கையெழுத்து மோசடி, கிரிமினல் சதித்திட்டம், ஊழல் ஆகிய குற்றங்களைச் செய்திருப்பதாக ஆ. ராசா, அவருடைய தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா, பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருக்கிறது.

ஐக்கியப்படுத்தப்பட்ட தொடர்பு சேவைக்கான உரிமங்களும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தால் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் பிரிவுகளின்படி குற்றங்கள் நடந்திருப்பது புலனாகிறது என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டுகிறது.

மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் வினோத் கோயங்கா, குடுகாமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் யூனிடெக், தமிழ்நாட்டில் உள்ள யூனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் கெüதம் தோஷி, 2 மூத்த துணைத் தலைவர்கள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

ஏப்ரல் 13-ல் ஆஜராக சம்மன்: இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டு ஆனால் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளவர்கள் இம் மாதம் (ஏப்ரல்) 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

மிக அதிகப் பயன் அடைந்த நிறுவனம்: இந்த முறைகேடு காரணமாக மிக அதிக அளவுக்குப்பணப் பயன் அடைந்த நிறுவனம் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும்தான் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளைப் பெறும் தகுதி (திறன், அனுபவம் போன்றவை) இல்லாதவை என்றும் குற்றப்பத்திரிகைத் தெரிவிக்கிறது.

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் களப்பணிகளைச் செய்தது என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

கலைஞர் டி.வி. கண்காணிக்கப்படுகிறது: கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ், கிரீன் அவுஸ் பிரைவேட் லிமிடெட், குசேகாவோன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களால் கண்காணிக்கப்படுவதாக நீதிபதியிடம் சி.பி.ஐ. தெரிவித்தது.

கனிமொழி, தயாளு அம்மாள் பங்குதாரர்: கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முறையே 20, 60, 20 சதவீதப் பங்குகள் இருப்பது நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் தொடர்புள்ள சட்டவிரோதப் பணம் பல்வாவின் நிறுவனத்திலிருந்து சினியுக் பிலிம்ஸ், குசேகாவோன் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்குக் கிடைத்தது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டுகிறது.

குசேகாவோன் புரூட்ஸ், வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் மார்ச் 29-ம் தேதி கைது செய்யப்பட்டனர். சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.200 கோடியை கலைஞர் டி.வி.க்கு அனுப்பிவைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

சாதிக் பாட்சா மர்ம மரணம்: கிரீன் அவுஸ் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ஆ. ராசாவின் நண்பருமான சாதிக் பாட்சாவிடம் சி.பி.ஐ. போலீஸôர் சென்னையில் விசாரணை நடத்தினர். அவர் கடந்த மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் கிரீன் அவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த மர்மமமான பணப்பரிமாற்றத்துக்கும் பாட்சா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருத்து தெரிவித்தது.

2009-ல் வழக்குப்பதிவு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 2009 அக்டோபர் 21-ம் தேதி சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. தொலைத் தொடர்புத் துறையின் பெயர் தெரியாத அதிகாரிகள், தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை எதிரிகளாகக் குறிப்பிட்டு அந்த அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. ஆனால் விசாரணை வேகமாக நடைபெறவில்லை. பொதுநலன் கோரி சிலர் தாக்கல்செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீவிரம் காட்டத் தொடங்கியதால் இந்த விசாரணை வேகம் பிடித்தது.

சி.ஏ.ஜி. கணிப்பு: ஏல முறையில் அல்லாமல் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருந்தார். இதனால்தான் இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத வீரர்கள்.

உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்
Indian Cricket Team
Getty Images
மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.

யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.

பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின்-கிர்ஸ்டன்

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.

அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.