Saturday, August 20, 2011

ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம் .



குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது.

மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான்.

பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள் ? சீமான் கேள்வி !



நாம்தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச் சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...!

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

மேற்குவங்க மாநிலம் பாஷிம்பங்காவாக பெயர் மாற்றம்.

மேற்குவங்க மாநிலம் பாஷிம்பங்காவாக பெயர் மாற்றம்

மேற்கு வங்கம் என பெயர் இருப்பதால் மத்திய அரசின் விவாதங்கள் உரிமைகளில் கடைசி நிலையில் வருகிறது.

எனவே மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என மம்தா தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இது குறித்து இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்கம் என்ற பெயரை பாஷிம்பங்கவாக மாற்ற தீர்மானம் செய்யப்பட்டது. இந்த பெயர் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

2-வது நாளாக லாரி ஸ்டிரைக் : நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்.

2-வது நாளாக லாரி ஸ்டிரைக்:   நாமக்கல்லில் 10 கோடி  முட்டைகள் தேக்கம்

தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக ரிக் உரிமையாளர்கள் சங்கம், கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

தென் மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து முடங்கியது. போராட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நேற்றும், இன்றும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். இதனால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக சுமார் 10 கோடி முட்டைகள் நாமக்கல்லில் தேங்கி உள்ளன. இவை ஆங்காங்கே குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் கரையாம்புதூர் நல்லதம்பி கூறியதாவது:-

முட்டைகளை பாதுகாத்து வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் முட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்காத பட்சத்தில் கலெக்டரை சந்தித்து முட்டை லாரிகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க கேட்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு திட்டத்துக்கு தேவையான முட்டை கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடிப்பதால் சேலம், நாமக்கல் பகுதியில் காய்கறி விலையும் உயர தொடங்கியிருக்கிறது. நேற்றை விட இன்று விலை சற்று அதிகமாக இருந்தது. வாழைக்காய், வாழை இலை, தக்காளி, கத்திரிக்காய், இங்கிலீஷ் காய்கறிகள் விலையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

லாரி ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது. லாரி தொழில் மூலம் அரசு மற்றும் லாரி உரிமை யாளர்களுக்கு தினமும் ரூ. 3500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இன்றுடன் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ. 2ஆயிரம் கோடிக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக ஈரோட்டில் மஞ்சள் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மஞ்சள் மண்டிகளில் தினசரி ஏலம் விடப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இந்த ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது லாரி ஸ்டிரைக் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது.

நேற்று முதல் மஞ்சள் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் முடிந்ததும் மஞ்சள் ஏலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது போல ஜவுளி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான்- ஓணம் பண்டிகையை யொட்டி வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு வந்து ஜவுளிகளை வாங்கி செல்வார்கள். இப்போது இதன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ஜவுளிகளும் வரவில்லை.

இன்டர்நெட்டில் போலியாக விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரியை, அதன் உரிமையாளரிடமே விற்க முயற்சி .

இன்டர்நெட்டில் போலியாக விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரியை, அதன் உரிமையாளரிடமே விற்க முயற்சி

கரூரை அடுத்த காருடையாம்பாளையம் அருகே வி.எஸ்.பி. என்ற பெயரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி செயலாளர் விஜய், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகராஜனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இணையதளம் ஒன்றில் எங்கள் கல்லூரி பெயர் குறிப்பிடாமல், கல்லூரி தொடங்கப்பட்ட வருடம், பஸ் எண்ணிக்கை, கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் வசதிகள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு, கரூரில் உள்ள கல்லூரி விற்பனைக்கு உள்ளதாகவும் விலை விவரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணுடன் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்தவுடன், எங்கள் கல்லூரிதான் விற்கப்படுகிறது என புரிந்து கொள்ளும் அளவுவுக்கு அந்த விளம்பரம் அமைந்துள்ளது. கடந்த 2007, 2008-ம் வருடங்களில் இருந்தே சிலர் இதே போன்று கல்லூரியை பற்றி வதந்தியை பரப்பியும், விற்கவும் முயன்று வருகின்றனர். தற்போது நாகராஜ்(விருத்தாச்சலம்), காமராஜ்(நாமக்கல்), மணிகண்டன், ரகுபதி ஆகியோர் இன்னும் சிலருடன் சேர்ந்து இந்த விளம்பரத்தை கொடுத்து உள்ளனர்.

அவர்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, எங்கள் கல்லூரி சம்பந்தமான போலி ஆவணம் தயார் செய்து கல்லூரி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. அத்துடன் எங்கள் கல்லூரியை விற்பதற்காக எங்களிடமே அவர்கள் விலை பேசினார்கள்.

இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் செல்போன் நம்பரில் காமராஜ் மற்றும் மணிகண்டனுடன் தொடர்பு கொண்டு பேசியதன் விவரம் அடங்கிய சி.டி. ஆகியவற்றையும் இணைத்து இருக்கிறோம். . இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி : அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் மத்திய அரசு அச்சம்.

ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுவதால் மத்திய அரசு அச்சம்

ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. பொது மக்கள், குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மத்தியில் புதிய விடியலுக்கான புரட்சிகரமான எழுச்சி ஏற்பட்டு உள்ளது.

போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய அரசு, நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் ஆதரவால், அச்சம் அடைந்துள்ளது. மேலும் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்பே அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலுக்கு அனுப்பியது, மத்திய அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது.

சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு, டெல்லி போலீசார் எடுத்த நிர்வாக நடவடிக்கை என்று அரசு தரப்பில் மூத்த மந்திரிகள் கைது பற்றி விளக்கம் அளித்து இருந்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அன்னாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் நடவடிக்கை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில், அவர் விடுதலையாக மறுத்தது, மத்திய அரசுக்கு விழுந்த அடுத்த பலத்த அடியாகும். அவரை விடுதலையாகி சிறையை விட்டு வெளியே செல்வதற்காக பகீரத பிரயத்தன முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது ராம்லீலா மைதானத்தில் ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியதும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுவிட்டது.

பெருகிவரும் மக்கள் உணர்வலைகளுக்கு எதிராக போராட முடியாது என்பதையும் தெளிவாக புரிந்துகொண்டு விட்டது. இதன் காரணமாக, இந்த உண்ணாவிரதத்தில் வெளிப்படையாக தலையிட முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. எனவே, புதிய முயற்சிகள் மூலம் அவருடைய உண்ணாவிரத போராட்டத்தை முன்கூட்டிய முடிவுக்கு கொண்டுவரும் புதிய முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, ஹசாரே குழுவில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய, குறிப்பாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அன்னா குழுவினரின் மக்கள் லோக்பால் சட்ட மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புவது அல்லது நிலைக்குழுவின் முன்பு தனது மசோதா பற்றி எடுத்துக்கூற அன்னாவுக்கு அழைப்பு விடுப்பது போன்ற யோசனைகள் பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

மத்திய அரசின் புதிய சமரச திட்டம் குறித்து தங்களிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று, அன்னா குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், மற்றொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே இந்த முயற்சியை சூசகமாக ஒப்புக்கொண்டார்.

பிரதமர், உயர் நீதிபதிகளை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதில் இரு தரப்பிலும் உள்ள பிடிவாதத்தை தளர்த்த தனது குழுவினரிடம் பேசுவதாகவும், அதே நேரத்தில், எங்களுக்கு உடன்பாடு இல்லாத மற்ற 8 அம்சங்களில் அரசு தரப்பில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார். சி.பி.ஐ. மற்றும் அதிகாரிகள் அல்லாத அரசு ஊழியர்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டு உள்ளது.

நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம் கலைஞர்.



திமுக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் சென்னை மயிலாப்பூரில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற பதிலுக்காகக் காத்திருந்தேன். கடைசியில் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதில் கிடைத்துள்ளது.

மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை: இதற்கும் நானே வழி காட்டியிருக்கிறேன். என் ஆயுள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

அதேசமயம் 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள். இவ்வாறு கலைஞர் பேசினார்.

புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை ! - கருணாநிதி .



புதிய தலைமைச் செயலகம் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை ஆவதை நான் எதிர்க்கவில்லை, என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம், சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகையில், "புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். நான் கூட என்ன செய்யப் போகிறார்களோ என்று நினைத்தேன்.

அதற்கு பதில் கிடைத்தது. மக்களுக்கு பயன்படுவதற்காக மருத்துவமனையாக ஆக்கப்போகிறார்கள். மருத்துவமனையாக ஒரு வீட்டை, ஒரு கட்டிடத்தை ஆக்குவதில் தவறில்லை.

நானே இதற்கு வழிக் காட்டியிருக்கிறேன். எனது கோபாலபுர இல்லத்தை எனக்கு பிறகு மருத்துவமனையாக மாற்ற எழுதி கொடுத்துள்ளேன்.

அதனால் புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதில் அதிருப்தி எதுவும் இல்லை. தாராளமாகச் செய்யட்டும். எப்படியோ நான் தொட்டுப் பார்த்து கட்டிய ஒரு கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாக கட்டப்பட்ட கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது. கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள்," என்றார்.

அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம், சுப்த வஜ்ராசனம், கோமுக ஆசனம்.

அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்.

அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்

செய்முறை:

இரண்டு காலையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். வலது காலை மடக்கி, இடது அடித்தொடையில் வைக்கவும். வலது கையை பின்னால் வீசி கொண்டு வந்து, வலதுகால் கட்டை விரலை பிடியுங்கள்.

முன்னோக்கி நீட்டிய இடது காலின் கட்டை விரலை, இடது கையால் பிடிக்கவும். அடுத்தபடியாக உடலை முன்னோக்கி குனிந்து கொண்டுவந்து, இடதுமுழங்காலை தொடவும். கடைசியில் ஆசனத்தை கலைத்து, இதேபோல பக்கம் மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

சிறுநீரக கோளாறு, மாத விடாய் பிரச்சினை, வாயு தொல்லை, குடலிறக்கம் நீங்கும். மாணவ-மாணவியர் செய்துவந்தால் இளம்பருவவளர்ச்சி இயல்பானதாக-சரியாக வந்து அமையும்.


சுப்த வஜ்ராசனம்.
சுப்த வஜ்ராசனம்

செய்முறை:

முழங்கால்கள் மடிந்தநிலையில் அமருங்கள். அப்படியே மெதுவாக பின்னால் சாய்ந்து, இரண்டு முழங்கைகளின் மேல் படுக்கவும். உங்களின் உள்ளங்கைகள், தோள் பட்டையை தொட்டு முதுகுதண்டில் படுமாறு இருக்கட்டும்.

அடுத்தபடியாக - இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, பக்கம் மாற்றி செய்ய வேண்டும்.

பயன்கள்:

முடக்குவாதம், பக்கவாதம், இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூலநோய், வாயு தொல்லை, அடிவயிறு பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு தொடையின் எடை குறையும்.ஆடவர்களுக்கு, விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் ஆண்மை குறைவு மறைந்து புதிய இன்பம் காணுவீர்கள்.


கோமுக ஆசனம்.
கோமுக ஆசனம்

செய்முறை:

கால்களை முன்னோக்கி நீட்டி அமரவும். வலதுமுழங்காலை மடக்கி, இடதுதொடை மீது வையுங்கள். இதுபோலவே, இடதுமுழங்காலை மடக்கி, வலது தொடை மீது போடவும். இரண்டு கை விரல்களையும் படத்தில் காட்டியபடி முதுகுக்கு பின்பாக, கால் மூட்டை கோர்த்தநிலையில் ஒன்றிணையுங்கள். இரண்டு கரங்களையும் அந்தந்த கால் பாதங்களில் ஒன்றிணைத்து, அப்படியே முன்புறமாக குனியவும்.

பயன்கள்:

மூலநோய், வாயு தொல்லை, ஆண்மைகுறைவு, மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். உயர்ரத்த அழுத்தம் சீராகும். கர்ப்பப்பை இயக்கம் நன்றாக இருக்கும். மகப்பேறுக்கு பின்வரும், வயிற்றுபெருக்கம் குறையும். மனநிலை கோளாறு, கோபக்காரர்களுக்கு உகந்த ஆசனமிது. "தேசத்தந்தை காந்தியடிகள் கோமுகாசனத்தை செய்துதான், `மகாத்மா'வாக புகழ்பெற்றார்'' என்பது வரலாறு!