Tuesday, March 29, 2011

தேமுதிக வேட்பாளரை அடித்து, உதைத்த விஜயகாந்த்.

தருமபுரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த விஜயகாந்த். கூட்டத்தில் கொடிபிடித்து நின்றிருந்த கூட்டணிக் கட்சியான விஜய் நற்பணி மன்றத்தினரை கொடியினை இறக்கச் சொல்லி கூச்சலிட்டார். பின்னர் குடிபோதையில் அருவருப்பாக பேச பெண்கள் கூட்டம் முகம் சுளித்ததை காணநேர்ந்தது.

இதனிடையே தொடர்ந்து பேசிவந்த விஜயகாந்த் வேட்பாளரின் பெயரை பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று உளறிக்கொட்டினார். திடுக்கிட்ட வேட்பாளர் அண்ணே என்பேரு பாண்டியன் இல்லைன்னே பாஸ்கர் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே சொல்லிவிட, நிதானம் இழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்து, கோபம் கொண்ட விஜயகாந்த் வேட்பாளர் பாஸ்கரனை நாகரீகமின்றி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்தார். திடீரென விஜயகாந்த் நிதானமில்லாமல் இப்படி நடந்து கொண்டது, வாக்காளப் பெருமக்களாகிய, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

மேற்கண்ட வீடியோ மக்கள் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.

கடந்த தேர்தலின் போதும் இதே மாதிரி பொதுமக்கள் முன்னிலையில் தமது கட்சிக்காரரை திருச்சியில் அடித்ததும், பின்னர் நிருபர்கள் முன்னிலையில் அவர் தமது இளமைக்கால நண்பர் என்றும், நான் இப்படித்தான் அவரோடு அடித்து விளையாடுவேன் என்று பூசிமெழுகிய சம்பவம் நினைவிற்கு வந்து செல்கிறது.

தனது கட்சியில் கருணை உள்ளத்தோடு பெரும்பாலும் ஏழைகளுக்கே வாய்பளித்திருப்பாக சில தினங்கள் முன்பு பேசியிருந்தார் விஜயகாந்த். இது முழுக்க முழுக்க உண்மை இல்லையென்றாலும் கூட, இங்கொன்றும், அங்கொன்றுமாக சில இருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவோம். தருமபுரி வேட்பாளர் அவற்றுள் ஒருவராக இருப்பின் விஜயகாந்தின் இந்த நாகரீகமற்ற செயலை எப்படி எடுத்துக்கொள்வது?எனும் கேள்வி பெரிதாக எழுகிறது.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் வேந்தாக நாம் எப்படி விஜயகாந்தை எண்ணமுடியும்? அடித்து, உதைத்து, அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தலைமைப் பண்பா என்றால், தலைமைப் பண்பு என்பது இதுவல்லவே. அப்படியாயின் வடிவேலு சொல்வது போல விஜயகாந்த் ஒரு லூசுப் பீசா?

எப்படியோ விஜயகாந்த் நிதானமற்றவர் என்று வடிவேலு மேடைதோறும் பேசிவருவது நிரூபணமாயிருக்கிறது.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ, பிற தொலைக்காட்சிகளுக்கும் சற்று நேரத்தில் கிடைத்துவிடும் என அறியப்படுகிறது. முயன்றால் பார்க்கலாம்.

விஜயகாந்துக்கு உங்களது ஓட்டா ? - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்


ராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்றி அதற்கு தப்பிப் போகும் சில ஆடுகளை குலையறுக்க இந்த சாதிகளின் தாய்மார்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்பது நாடறிந்த செய்தி. இந்த சாதியில்தான் கன்னியாக மாண்டு சிறுதெய்வமான சாமிகள் அதிகம் என்பதுவே அச்சாதியின் பெண்ணடிமைத்தனத்திற்கு தக்க சான்றாகும். தங்கள் வீட்டுக் காவலுக்கு பயன்படுத்தும் நாயைக் கூட மற்ற சாதியினர் வளர்க்கும் நாயுடன் பழக அனுமதிக்காத ஆதிக்க சாதிகளில் ஒன்றுதான் கம்பளத்தவர்.

தமிழகத்தை 14 முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆண்ட பரம்பரை இது. தெலுங்கு பேசும் வைகோ வின் கம்பா நாயக்கர்கள் அன்று அவர்களிடமும் அதற்கு முன் குப்த பேரர‍சிலும் படை வீரர்களாக இருந்தவர்கள். நாயக்க ஆட்சியில் உருவான 72 பாளையப்பட்டுகளில் கூட கம்பளத்தவர்கள்தான் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். திருடர்களாக கள்ளர் போன்ற சில சாதிகள் இருந்துவந்த காலத்தில் இத்தகைய ஆண்டைகளின் சாதி அவசியமாக இருந்தது. இன்றோ மதுரை திருமலை நாயக்கர் மகாலில் பருந்துகளின் எச்சம் வெளிப்புறமும் உட்புறமாக புறாக்களின் மாடக் கூண்டுகளும் புதிதாக முளைத்துள்ளன•

கால மாற்றத்தை கையிலெடுத்த வைகோவின் சாதி நாயக்கர்கள் பிரிட்டிஷாரின் நூற்பு ஆலைகளுக்குத் தேவையான பருத்தியை விளைவிக்க தக்காண பீடபூமியை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன்வழியாக அவர்களில் உயர்வர்க்கமாக இருந்தவர்கள் வெள்ளையனின் பாளையப்பட்டு ஒழிப்பிற்குப் பிறகு ஜமீன்தார்களாக சில இடங்களில் தங்களைத் தாங்களே அறிவித்தும் கொண்டனர். இந்த உயர்குடியாக்கத்தை நீங்கள் வரலாறு முழுதும் காண முடியும்.

ஆனால் கம்பளத்த நாயக்கர்களைக் கண்டு இன்று ஆதிக்க சாதிகளாக மதுரைப் பகுதியில் கோலோச்சும் முக்கலத்தோரே அஞ்சுகிறார்கள். கள்ளன் பெரியவனா காப்பான் பெரியவனா என்று கேட்ட மக்கள் காப்பானே பெரியவன் என்று சொல்ல வைத்த தகிடுதத்தங்களால் நிரம்பியதுதான் நாயக்கர் ஆட்சியின் சிறப்பு. அவர்களது ஏவலாட்களாக அன்று வேலை செய்தவர்கள்தான் தேவர் சாதியினர். இன்று விஜயகாந்த் ம் அவர்களது ஆண்டைகளின் பிரதிநிதிதான். பாண்டியன்கள் நாயக்கர் விஜயகாந்த் இடம் மண்டியிட்டுத்தான் பேச வேண்டியிருக்கும். அந்த சாதி திமிரின் அங்கமாகவே வைகோ வெளியேற்றப்பட்டதும் நடந்துள்ளதாக புரிந்துகொள்ளக் கூடாது. அது சமூக விடுதலையை மாத்திரம் விரும்புவோரது அரசியல்.

சாதிப் பெருமை பேசும் கம்பளத்த நாயக்கர் சமூகத்தில் பிறந்த விஜயகாந்த் தனது தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு பலவற்றை வாரி வழங்கினாலும், தனது சொந்த சாதியின் இறுக்கமான கட்டுமானத்தை நெகிழ வைக்க கூட முயல்வதாக மறந்தும் சொல்லவில்லை. அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள சிபிஎம் மதுரைப் பகுதியில்தான் அதிகமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியை கட்டியுள்ளது. அதற்காக மாற்று அணியில் திமுக ஒன்றும் குறைந்த சாதிய கூட்டணி என்று நினைத்து விடாதீர்கள். வன்னியர்களின் பாமக தான் அங்கு வட மாவட்ட ஆதரவு கூட்டணி. ஆனால் இருவருமே தங்களுக்குள் பிரச்சினை போலத்தான் தேர்தலை பார்க்கிறார்கள். ஆதிக்க சாதிகளின் இருவரது சாதிகளுமே தாழ்த்தப்பட்டவர்களை பல இடங்களில் அகமண முறையை மீறியதற்காக கொன்று போட்ட சாதிதான். அதனை விமர்சிப்பது என்பதே இருவருக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

மாறாக இவங்க போராடி மரத்த வெட்டிப் போட்டுவிட்டு இப்போ மரம் வளர்க்கிறார்களாம் என்கிறார் விஜயகாந்த். பதிலுக்கு அவர் இன்னமும் எல்கேஜியே அரசியல்ல படிக்கல என்கிறார். நான் எம்ஜிஆர் கட்சியோடதான் கூட்டணி என்கிறார் கடவுளோடும் மக்களோடும் போனமுறை கூட்டணி போட்ட விஜயகாந்த். தேர்தல் வரைதான் கூட்டணி என தெளிவுபடுத்துகிறார் ராமதாசு. செத்தாலும் வாழ்ந்தாலும் உன்னோடுதான் என்று திமுக விடம் காதலாய் கசிந்துருகிறது விடுதலைச் சிறுத்தைகள்.

அந்தப் பக்கம் தலித் மக்களுக்காக மாமியுடன் சேர்ந்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. கவுண்டர் சாதி கட்சியினர் இரண்டு அணிகளிலும் உள்ளனர். தேவர் கட்சியும் இருபுறமும் உள்ளது. வன்னியர் சங்கமும் இருபுறமும் உள்ளது. இதில் ஒருபுறம்தான் ராஜ கம்பளத்தார் மற்றும் கம்மவா நாயுடு போன்ற அடிமைகள் எல்லோரும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஐரோப்பிய பாணி நாடாளுமன்றங்களில் சித்தாந்த அல்லது வர்க்க அடிப்படையில் கட்சிகள் அமைந்திருப்பதை பார்த்த பிறகும் சூடுபோட்டுக் கொண்ட பூனை தன்னை புலி போல தின்று கொழுத்த உடம்பை தன் கண்ணாடியில் தானே பார்த்து முடிவு கட்டுவது போல ஜனநாயக நாடு பெரிய ஜனநாயகம் என்றெல்லாம் பூசை செய்யத் துவங்குகிறார்கள்.

அம்பேத்கர் இதன் மீது கல்லெறிய முயன்றார். தனது 1932 ஜனவரி 20 முதல் 26 வரையிலான உண்ணாவிரதம் மூலம் இவற்றுக்கு பாடை கட்டினான் தேசப்பிதா காந்தி. அன்று காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் துரோகம் செய்யவில்லை. இந்திய ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்தான். இதனைப் பற்றி நாளை அல்லது அதற்கடுத்த நாளில் எழுத முயல்கிறேன். இதனைக் கேட்ட பிறகு அதற்காகவும் காங்கிரசை ஒழிக்க நினைக்கிறோம் என ஈழ ஆதரவாளர்கள் சிலர் பேசக் கூடும். அந்த உங்களது விவாத முறைதான் காந்தியின் லாபம். உங்கள் வாயிலிருந்தே ஜனநாயக ஒழிப்பைத் துவக்கி வைக்க முடியும் என்பதை நீங்களே அறியாமல் பின்பற்றும் காந்தீயம் உங்களுக்குள் விதைக்கத் துவங்கியிருக்கும்.

காந்தி இந்திய அரசியல் டால்ஸ்டாய் போல சிலர் கருதும் சூழலும், காங்கிரசை ஒழிப்பது முக்கியம் என்ற கருத்தும் நிலவும் இக்காலத்தில் இவற்றை ஆராய அடுத்த சில பதிவுகளை பயன்படுத்தவுள்ளேன். அந்தப் பதிவுகளின் ஊடாக இந்திய இந்துமத ஆதிக்கசாதியில் பிறந்த விஜயகாந்த் தமிழகத்தில் நின்று கொண்டு திராவிட இயக்கம் என்ற பெயரில் நடத்தும் இந்த தேர்தல் பங்குபற்றுதலைப் புரிந்துகொள்ளவும் இயலும். இதனைத் தெரிந்துகொண்டால்தான் விஜயகாந்த் வர்ணம் பற்றி அடித்த கமாண்டையும் அவனது தற்குறித்தனத்தையும் இந்து ஆதிக்கசாதியின் தற்குறித்தனத்தையும் கொஞ்சம் சுரண்டி முகர்ந்து பார்க்க முடியும்.

நன்றி - powrnamy.blogspot.com

ஜாதி ரத்தம் குடிக்கும் ஓநாய் ராமதாஸ் - விஜயகாந்த் கடும் தாக்கு.

இரு ஜாதிகளை மோத விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய்தான் டாக்டர் ராமதாஸ் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.

தமிழக தேர்தல் பிரசாரக் களத்தில் தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. பாமக அடிக்கடி கூட்டணி மாறுவதை விமர்சித்து விஜயகாந்த் பேசி வருவதால் கடுப்பாகியுள்ளனர் அக்கட்சியினர். இதையடுத்து விஜயகாந்த்துக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸும், காடுவெட்டி குருவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் தர்மபுரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸை இன்னும் கடுமையாக தாக்கிப் பேசினார் விஜயகாந்த்.

சமூக நீதி காத்த போராளி (ராமதாஸ்) என்கிறார்களே, அவர் அப்படி எந்த சமூகத்தைக் காத்தார்?. எந்த சமூகத்தை அவர் காத்தார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நீங்கள் காத்த சமுதாயம் எது என்பது மக்களுக்குத் தெரியாதா?. அவரது கூட்டணித் தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால், இரு ஆடுகளை முட்ட விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்றவர்தான் இவர்.

இரு ஜாதிகளை மோத விட்டு, அதில் ரத்தம் குடித்தவர்தான் இவர். இவர் என்னைப் பார்த்து சிறைக்குப் போனாயா என்கிறார். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க சிறைக்குப் போனீர்களா?. பஸ்களை எரித்து சிறைக்குப் போனீர்கள். சமூகத்தை மோத விட்டு சிறைக்குப் போனீர்கள். இது பெருமையா?.

ஜாதி பேதத்தை விட்டொழியுங்கள். பணத்தில் இருக்கிறதா ஜாதி, நமது வியர்வையில் இருக்கிறதா ஜாதி. நாம் விடும் மூச்சில் இருக்கிறதா ஜாதி. பிறகெதற்கு அதைப் பிடித்துக் கொண்டு சமூகங்களை மோத விட்டு ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?.

அந்தக் கூட்டணியின் தலைவர்கள் எல்லாம் மேடையில் உட்கார்ந்து கொண்டு பார்த்தீர்களா எங்களது ஒற்றுமையை என்கிறார்கள். நான் கேட்கிறேன், தைரியம் இருந்தால் இப்படி, என்னைப் போல மக்களிடையே வந்து நில்லுங்கள் பார்க்கலாம். வர மாட்டார்கள். ஏன் என்றால் வந்தால் நீங்கள் கேள்விகேட்பீர்களே. அந்த பயத்தில் என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த் - ராமதாஸ் மோதல்.

இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான் :விஜயகாந்த்

இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான். போன தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும், இந்த தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்றும் தி.மு.க.வினர் கூறுகின்றனர். அதை ஒத்துக்கொள்கிறேன்.

‘கோடிகளை வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொண்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் கோடிகளுக்காக கூட்டணி வைக்கவில்லை. மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகதான் கூட்டணி வைத்தேன். ஆகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

நான் ஏன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன் என்று கேட்கிறார்கள். எனது மானசீக குருநாதர் எம்.ஜி.ஆர். அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கருணாநிதியை எதிர்த்து போராடுகிறேன்.

நான் சமாளித்துவிடுவேன்; நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த் பேச்சு

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.

விலைவாசி உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

விஜயகாந்த்.. அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் : ராமதாஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார்.

தமிழகத்தில் கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப் பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். என் மீது அவதூறாக ஏதேதோ பேசுகிறார். இதுநாள் வரை அவருக்கு நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். அந்த நடிகர் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அரசியலில் மழலையர் கல்வி கூட படிக்கவில்லை. அவர் என்னை பற்றி பேசுவதா?

மரங்களை வெட்டி நாசமாக்கிவிட்டு பசுமை தாயகமா?

பா.ம.க. வினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கினார்கள். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.

சினிமாவில் கூட மரக்கன்று நடாத விஜயகாந்த்: ராமதாஸ்

சினிமாவில் நடிப்புக்காக கூட மரக்கன்று நடாத நடிகர் விஜயகாந்த், பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

என்னை அறிக்கை மன்னன், போராட்ட மன்னன் என நடிகர் ஒருவர் (விஜயகாந்த்) விமர்சனம் செய்து வருகிறார். என்னை கொச்சைப்படுத்துவதாக நினைத்து அப்படிப் பேசுகிறார். நான் அறிக்கை மன்னன்தான். சமூக விழிப்புணர்வுக்காக, அடிதட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அறிக்கை மூலம் குரல் கொடுப்பவன்.

பசுமை தாயகம் சார்பில் மழைநீர் சேகரிப்புக்காக 600 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். சினிமாவில் நடிப்புக்காக கூட அவர் மரக்கன்று நட்டதில்லை. அப்படிப்பட்டவர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாமகவுக்கு குரங்கு குணம்: விஜயகாந்த்

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விஜயகாந்த் மக்களுக்காக எந்த சிறை சென்றார்?-ராமதாஸ்


சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிட மட்டுமே போராடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்? என்று கேள்வி எழுப்பினார் ராமதாஸ்.

தனது கல்யாண மண்டபத்தை இடித்ததற்காகவும், சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிடவும் மட்டுமே போராடிய அவர், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்?

மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நூறு போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றவன். பாளையங்கோட்டை சிறையைத் தவிர பிற சிறைகளைப் பார்த்தவன். என்னை என் கட்சியினர் போராளி என்று அழைப்பதையே விரும்புபவன்.

ராமதாஸ் தனது சமூகத்துக்கு செய்தது என்ன?-விஜயகாந்த்

தன்னை நம்பிய சமுதாய மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன செய்தார்? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பெற்றிருந்தபோது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலோ, கல்லூரிகளிலோ மருத்துவம் சார்ந்த அமைப்புகளிலோ பாமக தங்களது சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை?

நான் 200 கோடி, 300 கோடி ரூபாய் வாங்கிவிட்டு கூட்டணி சேர்ந்து விட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

எங்கள் கூட்டணிக்குள் பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் சண்டை மூட்ட பார்க்கிறார். 3-வது அணி உருவாகி வருகிறது. என தவறான தகவல்களை சிலர் பரப்பினர். தி.மு.க கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறவர்களை ஒன்று சேர்த்தவன் இந்த விஜயகாந்த்.

இந்த தேர்தலில் பணம் முக்கியமல்ல. நாம் சட்டை காலரை தூக்கிவிட்டு, நிமிர்ந்து நடக்க வேண்டும். அதற்கு அனைவரும் அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை, முரசு சின்னங்களில் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க.வினர் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் உங்களை எத்தனை நாள் காப்பாற்றும் என்று பார்க்கலாம். ஆனால் விஜயகாந்தை உங்களால் பணம் கொடுத்து வாங்க முடியவில்லை. உங்களிடம் கோடி, கோடியாக பணம் இருக்கலாம். என்னிடம் கோடிக்கணக்கான மனங்கள் இருக்கிறது

டாக்டர் ராமதாஸ் சுயலாபத்துக்காக பசுமைத் தாயகம் அமைப்பை நடத்துகிறார். அவரை நம்பிய சமுதாய மக்களுக்கு என்ன செய்தார்?

மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்லி வந்த நான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் இன்றைக்கு கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என கூறுகிறார்கள்

நிதானத்துடன் பேசுங்க...!- விஜயகாந்த்துக்கு குரு எச்சரிக்கை

நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும், நிதானத்துடன் பேச வேண்டும், என்று ஜெ. குரு எச்சரித்துள்ளார்.வன்னியர் சங்கத் தலைவரும் பாமக முக்கியப் பிரமுகருமான காடுவெட்டி ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்றைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வ செயல்திறனை தனது திரைப்படத்தால் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று பாழடித்த விஜயகாந்த், பாமக இளைஞர்களையும், மக்களையும் மரம் நடச் சொல்வதை விமர்சிப்பது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. நிதானம் இல்லாத போக்கையும் காட்டுகிறது.

மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று இவர் சுயநினைவோடு பேசியிருந்தால், சட்டசபைக்கு நிதானமின்றி வருகிறார் என்று கூறிய ஒருவரோடு கூட்டு சேர்ந்திருப்பாரா? நிதானம் தவறி கூட்டு சேர்ந்த இவருக்கு, பாமக கூட்டணி சேர்ந்தது பற்றி வர்ணிக்க எந்த தகுதியும் கிடையாது.

போராட்டம், சிறைவாசம் என்று தியாக தழும்பேறிய தமிழ் சமுதாயத் தலைவர்களை, மயக்க நிலையில் நிதானமின்றி அவர் விமர்சிப்பதை தமிழ் சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

அஸ்திவாரம் இல்லாத கூட்டணி மீது நின்று கொண்டு கூக்குரலிடும் இந்த மனிதரின் வரம்பு மீறிய பேச்சு, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை கொந்தளிக்க செய்துள்ளது. தேர்தல் களத்திலே உள்ள நமது இளைஞர்களின் கவனம் தேர்தல் பரப்புரையிலும், நமது வெற்றியிலும்தான் இருக்க வேண்டும். '....... பேச்சு, விடிந்தால் போச்சு' என்ற சொல்லுக்கு உதாரணமாய் விளங்கும் இத்தகைய நபரின் பேச்சால் கவனம் திசை திரும்பிவிட வேண்டாம்
விருத்தாசலம் வாக்காளர்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். ஆனால் ரிஷிவந்தியம் மக்கள் ஏமாற மாட்டார்கள். தங்களையும், தங்களின் உரிமை போராட்டத்தையும் இழிவுப்படுத்தி பேசிய நடிகருக்கு பாடம் புகட்ட இந்த பின்தங்கிய மக்கள் தயாராகிவிட்டனர். இனியாவது நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். நிதானத்துடன் பேச வேண்டும். இதனை இந்த மக்களின் சார்பில் எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெ. குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் கருத்துக் கணிப்பு.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை கடந்த பல ஆண்டுகளாகவே துல்லியமாகச் சொல்லி வரும் இதழ் நக்கீரன்.

இந் நிலையில் 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. (இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்ததும், திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தியுள்ளனர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து சர்வே நடத்தியுள்ளனர்.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

தனது கருத்துக் கணிப்பின் முடிவுகளை கடந்த 4 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டுள்ளது. முதல் இதழில் 50 தொகுதிகளுக்கான முடிவுகளும், இரண்டாவது இதழில் 61 தொகுதிகளின் முடிவுகளும், மூன்றாவது இதழில் 57 தொகுதிகளுக்கான முடிவுகளும், 4வது இதழில் 66 தொகுதிகளின் முடிவுகளையும் நக்கீரன் வெளியிட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஆதரவு, யார் அடுத்த முதல்வர் என்று அந்தத் தொகுதி மக்கள் நினைக்கின்றனர், யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாத மக்கள் எண்ணிக்கை, முக்கிய கட்சி வேட்பாளர்களின் பலம், பலவீனம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் கிடைக்கும் லாபம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நக்கீரன் வழங்கியுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் உள்ளன.

இந்த இடத்தில் தான் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது முக்கியத்துவம் பெறுகிறது. போட்டி மிக மிகக் கடுமையான உள்ள நிலையில் மிகக் குறைவான வாக்குகள் தான் என்றாலும் வைகோவின் ஆதரவு வாக்குகள் எந்தப் பக்கம் திரும்பும் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் தலைவிதி நிர்ணயமாகவுள்ளது.

மேலும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிந்த பின்னர் தான் அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது. மேலும் திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாயின. இதனால் தேர்தல் அறிக்கைகளாலும் வைகோவின் வெளியேற்றத்தாலும் இரு கூட்டணிகள் மீதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த அலசல் விரைவில் வெளியிடப்படும் என நக்கீரன் அறிவித்துள்ளது.

வாக்காளர்களைக் கட்டிப்போடும் வடிவேலுவின் பிரச்சாரம்...

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு!

திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள்.

சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.

"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொடுத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்.

திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது.

நடிகர்களின் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், வடிவேலுவுக்குதான் முதலிடம் தருகிறது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு பேச்சை முழுவதுமாக காட்டிவிட்டுத்தான், மற்றவர்களின் பேச்சைக் காட்டுகிறார்கள்.

சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் வடிவேலு!

திமுகவுக்கே ஓட்டுப் போடுங்கள்-அதிமுக, காங் வேண்டாம்: மதிமுகவினருக்கு ரகசிய உத்தரவு!

உங்களது ஓட்டுக்களை வீணடிக்க வேண்டாம். திமுகவுக்கு மட்டும் வாக்களியுங்கள். அதிமுக, காங்கிரஸுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மதிமுகவினருக்கு உயர்மட்டத்திலிருந்து ரகசிய வாய்மொழி உத்தரவு பறந்துள்ளதாம்.

சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என்று வைகோ அறிவித்ததும் மதிமுகவினர் நிலை குலைந்து போனார்கள். வைகோ இப்படி சொல்லி விட்டாரே என்பதனால் அல்ல- அதிமுக நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதே என்ற வேதனையில்தான்.

இதுவே வேறு ஒரு இயக்கமாக இருந்திருந்தால் இன்னேரம் கட்சி கண்ணாபின்னாவென காணாமல் போயிருக்கும். ஆனால் வைகோவின் இயக்கம் என்பதால் மதிமுக இன்னும் சீர்குலையாமல், அப்படியே இருக்கிறது -ஆங்காங்கு ஒரு சில, செல்வாக்கில்லாதவர்கள் விலகியதைத் தவிர.

இந்த நிலையி்ல் மதிமுகவினருக்கு ரகசிய வாய்மொழி உத்தரவு ஒன்று சென்னையிலிருந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள மூலமாக பாஸ் ஆகியுள்ளதாம்.

அது - வருகிற தேர்தலில் உங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம். அனைவரும் திமுகவுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். மறந்தும் கூட அதிமுகவுக்கு வாக்களித்து விடக் கூடாது. அதில் மிகவும் கவனமாக இருங்கள். அதேபோல காங்கிரஸுக்கும் நமது ஒரு வாக்கு கூட போகக் கூடாது. நமது வாக்குகளை தேடித் தேடி போய் வீணடிக்க வேண்டாம் என்று கூறி, திமுகவுக்கு அதை செலுத்துவதை உறுதி செய்யுங்கள் என்று அந்த உத்தரவு கூறுகிறதாம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள மதிமுகவினர், தங்களது தாய்க் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. சில இடங்களில் மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மறைமுகமாக திமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கின்றனராம்.

தேர்தல் முடிந்த பின்னர் வைகோ மீண்டும் திமுக அணிக்குத் திரும்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பைத் தோல்வி எதிரொலி-கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பான்டிங்.

Getty Images


பான்டிங்கின் விலகல் மூலம் ஒரு அருமையான, அபாரமான, திறமையான கேப்டனின் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த மிகச் சிறப்பான கேப்டன்களில் பான்டிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து வலிமையான ஒன்றாக திகழச் செய்த பெருமை இவருக்கு உண்டு. ஆனால் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதியோடு ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவடைந்து போனது, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிலையில் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பான்டிங் அறிவித்துள்ளார்.

மேலும் தனக்குப் பின்னர் கேப்டன் பொறுப்பை வகிக்கக் கூடிய தகுதியும், திறமையும் மைக்கேல் கிளார்க்குக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிட்னியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான்கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது எனதுதனிப்பட்ட முடிவு, எந்த நிர்ப்பந்தமும் இதன் பின்னணியல் இல்லை. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், எனது சேவை தேவைப்படும் வரை தொடர்ந்து இரு போட்டிகளிலும் ஆடுவேன் என்றார் பான்டிங்.

38 வயதாகும் பான்டிங், ஸ்டீவ் வாகிடமிருந்து கேப்டன் பொறுப்பைப் பெற்று செயல்பட்டு வந்தார்.கேப்டன் பொறுப்பில் 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் 48 போட்டிகளை வென்றுள்ளார். அதேபோல228 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதில் 164 போட்டிகளை வென்றவர். எந்த ஒரு ஆஸ்திரேலிய கேப்டனும் செய்யாத சாதனை இது.

மேலும் 2003, 2007 உலகக் கோப்பைகளை பான்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. தற்போதும் வென்றிருந்தால் அது பான்டிங்குக்கு ஹாட்ரிக் சாதனையாக இருந்திருக்கும்.

அதிமுகவை ஆதரிக்க விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தை கலைத்து உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த மன்றத்தினர் விஜய்யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கலைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம் என்று கூறினார்.

செல்போன் வியாபாரிகள் ரூ.230 கோடி வரி ஏய்ப்பு.

செல்போன் இறக்குமதி செய்ததில் ரூ.230 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த சில மாதங்களாக சுங்கத் துறையினர் உதவியுடன் கரோல்பாக், காஃபர் மார்க்கெட் பகுதிகளில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

செல்போன்கள் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் தில்லியில் உள்ள 59 வியாபாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் மதிப்புக்கூட்டு வரி செலுத்தாததால், ரூ.230 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து ஒரு அதிகாரி கூறும்போது, "ஒவ்வொரு செல்போன் கருவியிலும் சர்வதேச மொபைல் அடையாள எண் இருந்தாக வேண்டும். ஆனால், 59 வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ள கருவிகளில் இந்த அடையாள எண்கள் இல்லை. இது தேசப் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாகும். இந்த வகை செல்போன்களை இறக்குமதி செய்தவர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.' என்றார்.

சர்வதேச அடையாள எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துபவர் பற்றி விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும், இது போன்ற அடையாளம் காண முடியாத கருவிகளைக் கொண்டு பயங்கரவாதிகள் தொலைவிலிருந்தே குண்டுகளை வெடிக்கச் செய்ய இயலும். எனவே இவ்வகை போன்கள் இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானதாகும். இவற்றை இறக்குமதி செய்த வியாபாரிகளின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தில்லியில் உள்ள செல்போன்களில் 30 சதவீதம் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என இந்திய செல்லுலர் சங்கம் கூறுகிறது.

இது குறித்து சங்கத்தின் தேசிய தலைவர் பங்கஜ் மஹிந்துரு கூறியது:

"சுங்கத் துறை ஆவணங்களின்படி 2009-10ம் ஆண்டில் மட்டும் 72.88 லட்சம் போன்கள் தில்லி விமான நிலையத்தின் வழி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,380.56 கோடியாகும்.

விமானங்கள் மூலம் தருவிக்கப்பட்டு, சுங்க வரி மட்டும் கட்டி இவை இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் கறுப்புச் சந்தையில் விற்பனைக்குச் செல்கின்றன. இது போன்ற விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், சந்தையில் லட்சக்கணக்கில் உள்ள செல்போன் கருவிகள் அனைத்திலும் அடையாள எண் உள்ளதா என சோதனை செய்வது நடக்காத காரியம். சிலர் போலி எண்களும் வைத்துள்ளனர்.

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், தாங்கள் இறக்குமதி செய்யும் கருவிகளை சில்லறை வியாபாரிகளிடம் தருகின்றனர். சில்லறை வியாபாரிகள் தாங்கள் விற்கும் எல்லா போன்களுக்கும் பில் தருவதில்லை.

ரூ.10,000க்கு மேல் விலையுள்ள போன்களில் நான்கில் ஒன்று மட்டும் தில்லியில் விற்பனையாவதாக பில் செய்யப்படும். மற்றவை தில்லிக்கு வெளியே விற்பனை செய்வதாக காட்டப்படும். இவ்வாறு செய்வதால் மதிப்பு கூட்டு வரி கட்டாமல் வரி ஏய்ப்பு நடக்கிறது,' என்று அவர் கூறினார்.