
உலகையே அச்சுறுத்திய அல்- கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் நேற்று பாகிஸ்தானில் அமெரிக்க கமாண்டோ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படையின் சீல் என்ற கமாண்டோ படை பிரிவு இந்த தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியபோது பின்லேடன் ஆப்கானிஸ் தானில் இருந்தார்.
அமெரிக்கா தேடுதல் வேட்டையைத் தொடங்கியதும் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைக்காடுக்கு சென்று குகைக்குள் அவர் பதுங்கி இருந்தார். சாட்டிலைட் உள்பட பல நவீன கருவிகளை பயன்படுத்தி பார்த்த பிறகும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. 10 ஆண்டுகால இடைவிடாத தேடுதல் வேட்டை காரணமாக அமெரிக்க ராணுவம் சோர்ந்து போய் இருந்தது.
இந்த நிலையில் பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு உளவுத்துறையும் எல்லாவகை உதவிகளையும் செய்து வருவதை அமெரிக்கா கண்டுபிடித்தது. பின்லேடனுக்கு வந்த ரகசிய கூரியர் மூலம் பாகிஸ்தா னுக்குள் தான் பின்லேடன் இருக்கிறார் என்பதை உறுதியானது. இதையடுத்து பாகிஸ்தானிடம் சொல்லாமலே அமெரிக்கா தன்னிச்சையாக தேடுதல் வேட்டை நடத்தியது.
பின்லேடன் அபோதாபாத் நகரில் தனி பங்களாவில் தங்கி இருப்பதை கடந்த மாதம் அமெரிக்க உளவுப் பிரிவு கண்டுபிடித்தது. இதையடுத்து அமெரிக்காவின் அதிநவீன சீல் படை சிறப்பு பயிற்சிகள் எடுத்து பின்லேடனை கச்சிதமாக தீர்த்து கட்டிட்டது. பின்லேடன் திடீரென கொல்லப்பட்ட சம்பவம் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்லேடன் கொல்லப் பட்டால் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் முன்பு கூறி இருந்தனர். ஆனால் அத்தகைய தாக்குதல் எதையும் தலிபான்கள் நடத்தவில்லை. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதால் தலிபான் கள் ஆவேசம் அடைந்துள்ளனர். தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அசனுல்லா அசன் நேற்று பாகிஸ்தான் பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:- பின்லேடன் மரணத்துக்கு நிச்சயம் நாங்கள் பழிக்குப்பழி வாங்குவோம். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம். பாகிஸ்தான் இனி எங்களின் முதல் எதிரி நாடாகும். அமெரிக்கா இரண்டாவது எதிரி நாடாகும். இரு நாடுகளுக்கும் பாடம் புகட்டுவோம். பாகிஸ்தான் தலைவர்களும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் எங்கள் கொலைப்பட்டியலில் உள் ளனர். அதில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி முதல் இடத்தில் உள்ளார்.
விரைவில் அவரை கொல்வோம். 2007-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை கொல்ல திட்டமிட்டோம். தற்கொலை படையை அனுப்பி மூன்றே மாதத்தில் அவரை கொலை செய்தோம். ஆனால் அமெரிக்காவால் 10 ஆண்டுகள் போராடிய பிறகுதான் எங்கள் தலை வரை கொல்ல முடிந்தது. எனவே இதை கொண்டாட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.