Tuesday, May 3, 2011

இந்தியா முழுவதும் 2.7 கோடி பேருக்கு ஆஸ்துமா நோய் : சுற்றுச்சூழல் மாசுபடுவதால் 10 ஆண்டில் இரட்டிப்பாக உயர்வு.


உலக முழுவதும் ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஆஸ்துமா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சுழல் மாசுபடுவதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் தாக்கி இறக்கிறார்கள். இதையொட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதற்காக ஆஸ்துமா நோய் பாதிப்பு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. ஆஸ்துமா நோய் நம் நாட்டிற்கே பெரிய சவாலாக அமைந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது.

இந்தியாவில் மட்டும் 2.7 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2026-ம் ஆண்டில் 3.5 கோடியாக உயரும் நிலை உள்ளது.

சுற்றுச்சுழல் மாசுபடுதல், உணவு பழக்கவழக்கங்கள், செல்லப் பிராணிகளின் ரோமம், ரசாயணம், பரம்பரைக் காரணங்களால் ஆஸ்துமா ஏற்படுகிறது. உரிய சிகிச்சை எடுத்தால் ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்துமா தினமான இன்று மாசில்லா சுற்றுப்புறச்சூழல் அமைவதே நமது பிரதான இலக்காக இருக்க வேண்டும்.

No comments: