Tuesday, May 3, 2011

அப்சல்குருவை இந்தியா தூக்கில் போடாதது ஏன்?


டெல்லியில் சில வருடங்களுக்கு முன் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் முக்கிய குற்றவாளியான அப்சல்குருவுக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து உள்ளது.

தீர்ப்பு வெளியாகி பல வருடங்கள் ஆன பின்பும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தற்போது நியூயார்க் தாக்குதலில் தொடர்புடைய பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்ட நிலையில் அப்சல்குருவை தூக்கிலிட இந்தியா தயங்குவது ஏன்? என்று பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்கரி கேள்வி விடுத்துள்ளார்.

இது பற்றி ஜெய்ப்பூரில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் நிதின் கட்கரி,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை 10 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கா மறக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பின்லேடனை அமெரிக்கா தேடிப்பிடித்து கொன்று பழிவாங்கிவிட்டது.

ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன? நமது பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய தீவிரவாதி அப்சல் குருவுக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்த பின்பும் கூட இந்திய அரசு தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் போன்றவர்கள் பிரதமராக வர கனவுகாண்கிறார்கள்.

ஆனால் அவர்களால் காங்கிரசுக்கு தலைவராக கூட வரமுடியாது. இப்போது நாட்டின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அரசுக்கு தொலைநோக்கு பார்வையில் ஊழலாக இருந்தாலும், விலைவாசி உயர்வாக இருந்தாலும், தீவிரவாதமாக இருந்தாலும் அரசு நிலைமையை சமாளிக்க தவறி விட்டது. பாரதீய ஜனதா ஒரு ஜனநாயக கட்சி, அது தொழிலாளர்கள் மீது அக்கறையும், அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கி வருகிறது.

நாங்கள் கூட்டாக முடிவெடுக்கிறோம். ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் ஆனால் இதற்கு மாறாக காங்கிரசோ காந்தி குடும்பத்தால் நடத்தப்பட்டு வருகிறது. காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ஊழலில் சம்பந்தப்பட்டவரை ஊழல் கண்காணிப்பு கமிஷனின் தலைவராக நியமித்தது என அனைத்தும் காங்கிரசின் கோர முகத்தை காட்டிவிட்டது.

பிரதமரும், அவரது மந்திரி சபையும் தான் சுரேஷ் கல்மாடியின் அனைத்து முடிவுகளுக்கும் ஒப்புதல் அளித்து உள்ளனர். இதுவே ஊழலுக்கு காரணமாக அமைந்து விட்டது. கல்மாடி மட்டும் அல்லாமல் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என்று கூறினார்.

No comments: