Thursday, January 5, 2012

நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு.

தூத்துக்குடியில் நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு

தூத்துக்குடியில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு கிழக்கே மெயின் ரோட்டில் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் மது அருந்தி விட்டு, ரோட்டில் நடனம் ஆடினர். போதை தலைக்கு ஏறியதும் அவர் 3 பேரும் அந்த வழியே நடந்து சென்ற பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கை கொடுத்தும், அவர்களுக்கு முத்தம் கொடுத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து கேட்டால் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறினர். அவர்களின் இந்த முறையற்ற செயலினால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், அந்த 3 பேரையும் தாக்கினர். தர்ம அடிவிழ தொடங்கியதும், 3 வெளிநாட்டினரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிஸ்லாஷ் பாண்டி, வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்கள் பிடியில் இருந்த வெளிநாட்டினர் 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஞான் டக்ளஸ் மகன்கள் ரோஸ் பிராஞ்சிஸ் (வயது 48), ஜான் பிராஞ்சிஸ் (47) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பொது இடத்தில் அசிங்கமாக பேசி அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக அவர்கள் இருவர் மீதும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். வெளிநாட்டினர் 2 பேருக்கும் தலா ரூ.1500 அபராதம், கட்ட தவறினால் ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆனால் அவர்கள் இருவரும் அபராதத்தை முழுமையாக செலுத்தாததால் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட மயக்க மருந்து டாக்டர் சேதுலட்சுமி, ஆபரேஷன் செய்தது சரியா ?


மகேஷ், மனைவி நித்யா. ------------------------- டாக்டர் சேதுலட்சுமி.

ஆட்டோ டிரைவரால் வெட்டிக் கொல்லப்பட்ட பெண் டாக்டர் சேதுலட்சுமி வெறும் மயக்க மருந்து நிபுணர் தான்.

ஆனால் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேஷின் மனைவி நித்யா (26). 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீர் என்று வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை டாக்டர் சேதுலட்சுமியின் சுபம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நித்யாவை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாகவும் அதை உடனே அபரேஷன் செய்து வெளியே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி ஆபரேஷனும் செய்து குழந்தையை எடு்ததுள்ளார்.

அப்போது நித்யாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து மகேஷ் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நித்யா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷே டாக்டர் சேதுலட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட டாக்டர் வெறும் மயக்க மருந்து நிபுணர் என்றும், ஆபரேஷன் செய்யும் அதிகாரம் இல்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் மகப்பேறு டாக்டரும் கிடையாது, அறுவை சிகிச்சை செய்யும் அதிகாரமும் கிடையாது இருப்பினும் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார் என்று ஒரு பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டாக்டர் சேதுலட்சுமியின் கவனக் குறைவு மற்றும் பணத்தாசையால் தான் நித்யா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து நித்யாவின் மாமியார் கனகலட்சுமி கூறுகையில், ரூ.10,000 டெபாசிட் தொகை கட்டினால் மட்டுமே நித்யாவைப் பார்ப்பேன் என்று சேதுலட்சுமி பிடிவாதமாகத் தெரிவித்தார். சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் காக்க வைத்தார். மகேஷ் வந்து பணத்தை கட்டிய பிறகே சிகிச்சை அளித்தார் என்றார்.

இது குறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், 25 வாரமேயான குழந்தையை வெளியே எடுக்கும் ஆபரேஷனை ஐசியுவில் வைத்து செய்திருக்க வேண்டும். ஒரு மகப்பேறு மருத்துவர் தான் அந்த ஆபரேஷனை செய்திருக்க வேண்டும் தவிர ஒரு மயக்க மருந்து நிபுணர் செய்திருக்கக் கூடாது என்றார்.

சேதுலட்சுமி அந்த நோயாளியை உடனே வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியிருக்க வேண்டுமே தவிர அவராக ஆபரேஷன் செய்திருக்கக் கூடாது என்று மற்றொரு மருத்துவர் தெரிவித்தார்.