Monday, September 12, 2011

யோகமுத்ரா, பார்சுவ பத்மாசனம், மச்சாசனம்.

யோகமுத்ரா.
யோகமுத்ரா
செய்முறை:

முதலில் பத்மாசனநிலையில் அமரவும். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு போங்கள். உங்களின் வலது கை, இடது மணிக்கட்டை பிடித்திருக்கட்டும். தலையை முன்னோக்கி குனிந்து, நெற்றியால் தரையை தொடுங்கள். அப்போது இயல்பான சுவாசம், உடம்பில் இருக்கட்டும்.

பயன்கள்:

மலச்சிக்கல், பெருந்தொந்தி, சிறுநீரக கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, ஹிரண்யா, விரை வீக்கம், மாதவிடாய் பிரச்சினை ஏற்படாது.


பார்சுவ பத்மாசனம்.
பார்சுவ பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக பத்மாசனநிலையில் அமரவும். இடுப்பை பக்கவாட்டில் திருப்பி, வலப்பக்கத்தில் குனிந்து, முகத்தால், தரையை தொடுங்கள். இதுபோல் இடப்பக்கமும் பக்கம் மாற்றி செய்யுங்கள். இடுப்புக்கு மேல் உடலை சரியாக பக்கவாட்டில் திருப்பி நெஞ்சால் தரையை தொடுவது, பார்சுவ யோகமுத்ரா. இதேபோல காலை மாற்றி இடப்பக்கமும் செய்யலாம்.

பயன்கள்:

உடம்பில் பக்கவாட்டு சதைகள் குறையும். வாயு தொல்லை இராது. தொப்பையும் குறைந்துவிடும். குண்டாக இருக்கும் மாணவ- மாணவியர்களையும், அழகாக மெலியவைக்கும் ஆசனமிது!


மச்சாசனம்.
மச்சாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் பின்னால் ஊன்றி இயல்பான சுவாசத்தில், மெதுவாக அப்படியே படுங்கள். உங்களின் உச்சந்தலை, தரையில் இருக்கட்டும். முதுகுண்டு வில் போல, மேல்நோக்கி வளைந்திருக்க வேண்டும்.

முழங்கால்கள் தரையில் படிந்திருப்பதை உறுதிசெய்யவும். இரண்டு கைகளாலும் அந்தந்த பக்கத்து கால் பெருவிரலை பிடித்து இழுங்கள். இந்த நிலையில் இயல்பான சுவாசத்தில், 15 விநாடிகள் இருக்கவும். அடுத்தபடியாக, இது போல் பக்கம் மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

உடலில் ஞான இந்திரியங்களான கண், காது, மூக்கு, செவி, நாக்கு ஆகிய உறுப்புகளின் இயக்கம் சீராகும். தலை நோய்கள் வராது. கண்பார்வை ஒளிபெறும். தைராய்டு பிரச்சினை நீங்கும். ஆஸ்துமா, ஈஸ்னோ-பீலியா, மூச்சு சம்பந்தமான நோய்கள் தீரும். காது அடைப்பு சீராகும்.

விண்வெளியில் அதிகரிக்கும் செயற்கை கோள்களின் கழிவுகள் .



பூமியில் இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன.

இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண் வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன.

மேலும் அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன.

இதனால் பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது.

இது பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் டொனால்டு கெஸ்லர் என்பவர் கூறும் போது, கடந்த 2007ல் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று வானிலை செயற்கைக்கோள் ஒன்றை மோதி அழித்தது. இதனால் 1 செ.மீ. அளவுக்கு அதிகமான சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் துண்டுகள் உருவாகின.

அதே போல் 2009ல் இரு செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சுழலும் போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த இரு நிகழ்வுகளாலும் பூமியை சுற்றி கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு விண்வெளி கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.