Friday, June 24, 2011

+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் !



தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்ட படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.

பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.

இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து, இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஹீரோவாக ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

அன்புடன் நான் said...

அட கடவுளே

Ponchandar said...

பேசாம இவரே ஒரு காலேஜ் தொறந்திர வேண்டியதுதானே

அமுதா கிருஷ்ணா said...

அந்த படிப்பிற்கு மார்க்கே தேவையில்லை. கிறிஸ்த்துவர்கள்,
வி.ஐ.பி குழந்தைகளுக்கு தான் அந்த கல்லூரியில் அந்த படிப்பிற்கு இடம்.மெரிட் என்பது இந்த படிப்பிற்கு கிடையாதே.