Friday, June 24, 2011

பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு - திருச்சி மாணவி திவ்யா முதலிடம், 18 பேர் 200-க்கு 200 எடுத்து சாதனை.


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது.

திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தையும்,

ராசிபுரம் மாணவர் யோக பரசுகன் 2வது இடத்தையும்,


சென்னை மாணவர் சுரேஷ் பால்ராஜ் 3வது இடத்தையும் பெற்றனர்.


பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்காக மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 355 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றில் சரிவர நிரப்பப்படாத 5246 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 109 பேருக்கு தரவரிசை இன்று வெளியிடப்பட்டது.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பொது “கவுன்சிலிங்” சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

ஒரே மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான “ரேண்டம்” எண் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டது. இன்று தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேங்க் பட்டியல் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.

பின்னர் அமைச்சர் பழனியப்பன், ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்த மாணவ- மாணவிகளின் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேருவதற்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், 3,492 பேர் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.

விண்ணப்பித்தவர்களில் “கட்-ஆப்” மார்க் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ் நகர் மாணவி திவ்யா முதல் இடம் பிடித்துள்ளார். ராசிபுரம் யோகபரசுகன் 2-வது இடம் பிடித்திருக்கிறார். பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த சுரேஷ்பால்ராஜ் 3-வது இடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஒதுக்கீட்டில் இவருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

சின்னசேலம் ஹரிநிவாஸ் 4-வது இடமும்,
ஈரோடு பவானி அகிலா 5-வது இடமும்,
நாமக்கல் ஜீவிதா 6-வது இடமும்,
அரூர் விக்னேஷ் 7-வது இடமும்,
சென்னை மடிப்பாக்கம் மகாலெட்சுமி 8-வது இடமும்,
சிவகாசி ஆகாஷ் 9-வது இடமும்,
நாமக்கல் அபிநயா 10-வது இடமும்,
கோவை கள்ளப்பாளையம் கவுதம் பிரகாஷ் 11-வது இடமும்,
பெருந்துறை சபீதா 12-வது இடமும்,
நாமக்கல் அருண்பிரசாத் 13-வது இடமும்,
சிவகங்கை கல்லல் சிதம்பரம் 14-வது இடமும்,
கோவை கே.கே.புதூர் அர்ச்சனா 15-வது இடமும்,
மோகனூர் பூவிழி 16-வது இடமும், பெற்றுள்ளனர்.

இதுதவிர ஈரோடு விக்னேஷ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முதல் இடமும், ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 29-வது இடமும் பிடித்திருக்கிறார்.

ஈரோடு ஷானாபீர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் முதல் இடமும் ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 44-வது இடத்தை யும் பிடித்துள்ளார்.

மொத்தம் 18 பேர் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரம்பலூர் செல்வபிரபாத் 199.75 “கட்-ஆப்” மதிப்பெண்கள் பெற்று அந்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவில் திருச்செங்கோடு நவீனா 199.50 எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

பழங்குடியினர் பிரிவில் நாமக்கல் கொல்லிமலை வேலவன் 197.75 “கட்-ஆப்” மார்க் வாங்கி அந்த பிரிவில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.

No comments: