Friday, June 24, 2011

லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ளத் தயார் : அன்னா ஹசாரே.

லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயார்: அன்னா ஹசாரே

கடுமையான விதிகளுடன் கூடிய லோக்பால் சட்டத்துக்காக துப்பாக்கிக் குண்டுகளை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே உறுதிபட தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமத்துக்கு செல்லும் வழியில் புனே நகரில் அவர் பேட்டியளித்தார். அப்போது, ஹசாரே கூறுகையில், சாவைக் கண்டு அன்னா ஹசாரே பயப்படவில்லை. எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்காக தடியடி மட்டுமல்ல துப்பாக்கிக் குண்டுகளையும் பயன்படுத்தட்டும். அதை நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஆனால், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி தேவையா? சர்வாதிகார ஆட்சி தேவையா? என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

No comments: