Thursday, June 23, 2011

6.7 ரிக்டர் அளவு ஜப்பானில் நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் பீதி.

6.7 ரிக்டர் அளவு ஜப்பானில் நில நடுக்கம்:வீடு-கட்டிடங்கள் குலுங்கின; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் பீதி

ஜப்பானில் சில மாதங்களுக்கு முன் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகி பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதில் இருந்து ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. அங்கு தொடர்ந்து அவ்வப்போது லேசான நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜப்பானில் இன்று காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள லரான்சு தீவில் லவாட்டில் என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானது. இதில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இது சக்தி வாய்ந்த நில நடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் உஷார்படுத்தப் பட்டனர். சேத விவரங்கள் பற்றி தகவல் வெளியாகவில்லை.

No comments: