Wednesday, March 23, 2011

காங்கிரஸ் 63 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1. திருத்தணி - சதாசிவலிங்கம் 2. ஆவடி - தாமோதரன்
3. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன் 4. ராயபுரம் - ஆர்.மனோ
5. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார் 6. அண்ணா நகர்- அறிவழகன்
7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
8. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா
9. மதுராந்தகம் ஜெயக்குமார்
10. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி
11. வேலூர் - ஞானசேகரன்
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
14. ஓசூர் - கோபிநாத்
15. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத்
16. கலசப்பாக்கம் - விஜயக்குமார்
17. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை 18. ஆத்தூர் - அர்த்தநாரி
19. செய்யார் - விஷ்ணுபிரசாத் 20. ரிஷிவந்தியம் - சிவராஜ்
21. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ் 22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்
23. ஈரோடு மேற்கு - யுவராஜா 24. மொடக்குறிச்சி - பழனிசசாமி
25. காங்கேயம் - விடியல் சேகர்
26. உதகை - கணேஷ்
27. அவினாசி - நடராஜன் 28. தொண்டாமுத்தூர் - கந்தசாமி
29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
30. வால்பாறை - கோவை தங்கம்
31. நிலக்கோட்டை - ராஜாங்கம் 32. வேடசந்தூர் - தண்டபாணி
33. கரூர் - ஜோதிமணி 34. மணப்பாறை - டாக்டர் சோமு
35. முசிறி - எம்.ராஜசேகரன்
36. அரியலூர் - பாளை அமரமூர்த்தி
37. விருத்தாச்சலம் - நீதிராஜன் 38. மயிலாடுதுறை - ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை 40. பாபாபநாசம் - ராம்குமார்
41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன் 42. திருமயம் - ராம சுப்புராம்
43. பேராவூரணி - மகேந்திரன்
44. அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
45. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை - ராஜசேகரன்
47. மதுரை வடக்கு - ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு - வரதாஜன்
49. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன் 50. விருதநகர் - நவீன் ஆம்ஸிடராங்
51. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு
52. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி
53. வாசுதேவநால்லூர் - கணேசன் 54. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
55. நாங்குநேரி - வசந்தகுமார் 56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
57. ராதாபுரம் - வேல்துரை 58. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
59. விளவங்கோடு - விஜயதரணி 60. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
61. பூந்தமல்லி -காஞ்சி ஜி.வி.மதியழகன் 62. ராமநாதபுரம் - கே.என்.அசன் அலி
63. திருப்பூர் தெற்கு -கே.செந்தில்குமா

திமுகவின் கோடீஸ்வர வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ. 122 கோடி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளராக கே.சி. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அரவக்குறிச்சியில் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியலையும் சமர்பித்தார்.

அதன்படி கே.சி. பழனிசாமியின் கையிருப்பு ரூ. 24 லட்சமும், வங்கிகளில் வைப்புத் தொகை, நிலைவைப்பு, காலவைப்பு, சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட வகைகளில் ரூ. 68.40 லட்சமும், நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பங்குகள் மூலமாக ரூ. 28.53 கோடியும், மோட்டார் வாகனங்களாக ரூ. 22.59 லட்சமும், தங்க நகைகளாக ரூ. 45 ஆயிரமும் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 29 கோடியே 68 லட்சத்து 58 ஆயிரத்து 187 ஆகும்.

மேலும், வேளாண் நிலமாக ரூ 49.79 லட்சமும், வேளாண்மை அல்லாத பிற நிலங்களாக ரூ 10 கோடிக்கும், வணிகக் கட்டடங்களாக ரூ 1.62 கோடிக்கும், குடியிருப்புக் கட்டடங்களாக ரூ 21.53 கோடிக்கும் சொத்து உள்ளதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு ரூ 63.35 கோடியாகும்.

அவரது மனைவி அன்னம்மாள் பெயரில் நிறுவனங்களில் முதலீடாக ரூ. 1.20 கோடியும், தங்க நகைகளாக ரூ. 95.87 லட்சமும், குடியிருப்புக் கட்டிடங்களாக ரூ. 2.08 கோடியும் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 4.29 கோடியாகும்.

கே.சி. பழனிசாமியின் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவரது மகன் கே.சி.பி. சிவராமன் பெயரில் ரூ. 53.58 கோடிக்கு சொத்து உள்ளது.

நிறுவனங்கள், கடனீட்டுப் பத்திரங்கள், பங்குகளில் முதலீடாக ரூ. 5.48 கோடியும், மோட்டார் வாகனங்களாக ரூ. 1.14 கோடியும், வேளாண்மை அல்லாத நிலமாக ரூ. 41.64 கோடியும், வணிக கட்டிடங்களாக ரூ. 1.19 கோடியும் உள்ளது.

இவரது மனைவி எஸ். சுதாவிடம் தங்க நகைகளாக ரூ. 75 லட்சமும், பிற வகைகளையும் சேர்த்து ரூ. 85.67 லட்சம் சொத்து உள்ளது.

கே.சி. பழனிசாமியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரின் சொத்து மதிப்பு ரூ. 122 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 148 ஆகும்.

திமுகவில், அதன் தலைவர் கருணாநிதியை விட கோடீஸ்வர வேட்பாளர் கே.சி. பழனிசாமி தான்.

''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'

''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட்டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!

காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!

''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.

''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.

இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.

''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.

பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....

''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!