சித்தாசனம்.

செய்முறை:

பயன்கள்:
பூரண உடல்நலம் கிட்டும். மனக்குழப்பங்கள் அகலும். புத்தர் தவம் செய்து புனிதம் பெற்ற ஆசனமிது. சிந்தனையில் தெளிவில்லாமல் உழல்பவர்கள், குழப்பத்தில் இருப்போர் அனைவரும், சித்தாசனத்தின் வாயிலாக, சிந்தனை தெளிவை பெறலாம்.
சுகாசனம்.

செய்முறை:
விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். முதலில் வலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவையுங்கள். வலது காலின் மேல் இடதுகால் இருக்கட்டும். முதுகு தண்டை நிமிர்த்தி உட்கார்ந்த நிலையில், `சின் முத்திரை'யோடு, அந்தந்த பக்கத்து முழங்காலில் உள்ளங்கை மேலே தெரியுமாறு வையுங்கள். இதில் அவரவர்களுக்கு சுமமான நேரம் வரை இருக்கலாம். அதற்கு பிறகு, பழைய நிலைக்கு வரலாம். மாற்று ஆசனமாக கால் மாற்றி செய்யவேண்டும்.
பயன்கள்:
இது தியான ஆசனங்களில் ஒன்று. முழங்கால், மூட்டு வலி குணமாகும்.
மாலாசனம்.

செய்முறை:
விரிப்பில் கிழக்கு நோக்கி குத்தவைத்து உட்காரவும். இரு முழங்காலையும் விரித்து, குனிந்து உடம்பை முன்னோக்கி கொண்டு வாருங்கள். இரண்டு கைகளும் முழங்காலுக்கு வெளிப்பக்கமாக சுற்றியநிலையில், முதுகுப் பக்கத்தோடு ஒன்றிணையட்டும்.
பயன்கள்:
உடல் எடை அளவோடு இருக்கும். கால்கள் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். மூலம், விரைவீக்கம் குணமாகும். மார்பு எலும்புகள் நன்கு விரியும். திரண்ட தோள்கள் அமையும். இடுப்பு சுருங்கும். பெண்களுக்கு பிடியிடை கிட்டும்.