Wednesday, November 16, 2011

சித்தாசனம், சுகாசனம், மாலாசனம்.

சித்தாசனம்.
சித்தாசனம்

செய்முறை:Justify Fullவலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவைத்து, குதிகால் அடிவயிற்றில் படுவதுபோல் நிலைநிறுத்துங்கள். அதன்மேல் இடதுகால், மடிந்திருக்கட்டும். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். உங்களின் இடது உள்ளங்கையின் மேல், வலது புறங்கை (பைரவி முத்திரை) இருக்கட்டும். கண் பார்வையை கூர்மையாக்கி, அப்படியே மூக்கு நுனியை பாருங்கள்.

பயன்கள்:

பூரண உடல்நலம் கிட்டும். மனக்குழப்பங்கள் அகலும். புத்தர் தவம் செய்து புனிதம் பெற்ற ஆசனமிது. சிந்தனையில் தெளிவில்லாமல் உழல்பவர்கள், குழப்பத்தில் இருப்போர் அனைவரும், சித்தாசனத்தின் வாயிலாக, சிந்தனை தெளிவை பெறலாம்.


சுகாசனம்.
சுகாசனம்

செய்முறை:

விரிப்பில் இரண்டு கால்களையும் நீட்டி உட்காரவும். முதலில் வலதுகாலை மடக்கி உடலோடு ஒட்டிவையுங்கள். வலது காலின் மேல் இடதுகால் இருக்கட்டும். முதுகு தண்டை நிமிர்த்தி உட்கார்ந்த நிலையில், `சின் முத்திரை'யோடு, அந்தந்த பக்கத்து முழங்காலில் உள்ளங்கை மேலே தெரியுமாறு வையுங்கள். இதில் அவரவர்களுக்கு சுமமான நேரம் வரை இருக்கலாம். அதற்கு பிறகு, பழைய நிலைக்கு வரலாம். மாற்று ஆசனமாக கால் மாற்றி செய்யவேண்டும்.

பயன்கள்:

இது தியான ஆசனங்களில் ஒன்று. முழங்கால், மூட்டு வலி குணமாகும்.


மாலாசனம்.
மாலாசனம்

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி குத்தவைத்து உட்காரவும். இரு முழங்காலையும் விரித்து, குனிந்து உடம்பை முன்னோக்கி கொண்டு வாருங்கள். இரண்டு கைகளும் முழங்காலுக்கு வெளிப்பக்கமாக சுற்றியநிலையில், முதுகுப் பக்கத்தோடு ஒன்றிணையட்டும்.

பயன்கள்:

உடல் எடை அளவோடு இருக்கும். கால்கள் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். மூலம், விரைவீக்கம் குணமாகும். மார்பு எலும்புகள் நன்கு விரியும். திரண்ட தோள்கள் அமையும். இடுப்பு சுருங்கும். பெண்களுக்கு பிடியிடை கிட்டும்.