Thursday, June 23, 2011

காதலிக்கு 60 வயது : அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார்.



பெங்களூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் திருப்பதி. இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த லூர்துமேரி என்ற பெண் போன்மூலம் அறிமுகமானதாக தெரிகிறது.

இவர்கள் போன் மூலமாகவே பேசி நட்பை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

அண்மையில் போன் மூலம் பழக்கமான லூர்துமேரியை திருப்பதி நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் லூர்துமேரி 60 வயது மூதாட்டி என்ற உண்மை தெரிய வந்ததுள்ளது. காதலியாக நினைத்த பெண்ணை பாட்டியாக கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட திருப்பதி ஒகேனக்கல் சின்னாற்றின் அருகே ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

அப்போது சின்னாறு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்நிகழ்வினைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்து, தூக்குக் கயிரை கழற்றி அவரை மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் மேற்கண்டவிவரம் அனைத்தும் தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரைகள் கூறி, குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர்.

No comments: