Tuesday, May 3, 2011

நம்மாலும் முடியும் : இந்திய விமானப் படை.


ஒசாமா பின்லேடனை கண்டுபிடித்து அமெரிக்க கமாண்டோ படை தாக்குதல் நடத்தியது போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக் கூறியுள்ளார்.

தில்லியில் திங்கள்கிழமை நடந்த பி.சி.லால் நினைவு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.எனினும் அதுபோன்ற தாக்குதல்கள் நடத்துவதற்கு இந்தியாவிடம் எந்த மாதிரியான வசதிகள் இருக்கின்றன என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

ஒசாமா கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒசாமா மிகப்பெரிய பயங்கரவாதத் குழுவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் கொல்லப்பட்டிருப்பதால், அந்தக் குழு பதில் தாக்குதல் நடத்தக்கூடும். அதனால் ஒவ்வொருவரும் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவும் அதையே செய்திருக்கிறது' என்றார்.

No comments: