Saturday, August 20, 2011

இன்டர்நெட்டில் போலியாக விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரியை, அதன் உரிமையாளரிடமே விற்க முயற்சி .

இன்டர்நெட்டில் போலியாக விளம்பரம் செய்து என்ஜினீயரிங் கல்லூரியை, அதன் உரிமையாளரிடமே விற்க முயற்சி

கரூரை அடுத்த காருடையாம்பாளையம் அருகே வி.எஸ்.பி. என்ற பெயரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி செயலாளர் விஜய், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகராஜனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இணையதளம் ஒன்றில் எங்கள் கல்லூரி பெயர் குறிப்பிடாமல், கல்லூரி தொடங்கப்பட்ட வருடம், பஸ் எண்ணிக்கை, கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் வசதிகள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு, கரூரில் உள்ள கல்லூரி விற்பனைக்கு உள்ளதாகவும் விலை விவரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணுடன் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்தவுடன், எங்கள் கல்லூரிதான் விற்கப்படுகிறது என புரிந்து கொள்ளும் அளவுவுக்கு அந்த விளம்பரம் அமைந்துள்ளது. கடந்த 2007, 2008-ம் வருடங்களில் இருந்தே சிலர் இதே போன்று கல்லூரியை பற்றி வதந்தியை பரப்பியும், விற்கவும் முயன்று வருகின்றனர். தற்போது நாகராஜ்(விருத்தாச்சலம்), காமராஜ்(நாமக்கல்), மணிகண்டன், ரகுபதி ஆகியோர் இன்னும் சிலருடன் சேர்ந்து இந்த விளம்பரத்தை கொடுத்து உள்ளனர்.

அவர்கள் கொடுத்துள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, எங்கள் கல்லூரி சம்பந்தமான போலி ஆவணம் தயார் செய்து கல்லூரி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. அத்துடன் எங்கள் கல்லூரியை விற்பதற்காக எங்களிடமே அவர்கள் விலை பேசினார்கள்.

இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் செல்போன் நம்பரில் காமராஜ் மற்றும் மணிகண்டனுடன் தொடர்பு கொண்டு பேசியதன் விவரம் அடங்கிய சி.டி. ஆகியவற்றையும் இணைத்து இருக்கிறோம். . இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments: