Sunday, May 1, 2011

150 ரூபாய்க்கு துப்பாக்கியை விற்ற சிறுவன்.

150 ரூபாய்க்கு துப்பாக்கியை விற்ற சிறுவன்

அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த 8 வயது சிறுவன் பள்ளிக்கு புறப்பட்டான். அப்போது வீட்டில் அவனது தந்தை மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை தனது பேக்கில் எடுத்து வந்தான். அந்த துப்பாக்கியில் 3 குண்டுகள் இருந்தன. அது சட்டவிரோதமான 9 எம்.எம். ரக துப்பாக்கியாகும்.

துப்பாக்கியை எடுத்து வந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனிடம் 150 ரூபாய்க்கு விற்றான். துப்பாக்கியை வாங்கிய மாணவன் பேக்கில் வைத்து தனது வீட்டுக்கு எடுத்து சென்றான்.

அதை பார்த்த அவனது தாயார் இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் புகார் கூறினார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments: