Sunday, May 1, 2011

பிளஸ் - 2 மாணவி கற்பழிப்பு : தனியார் கம்பெனி ஊழியர் சிக்கினார்.

பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: மர்ம சாவு; தனியார் கம்பெனி ஊழியர் சிக்கினார்

கோவையை அடுத்துள்ள துடியலூர் நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் தீபிகா (வயது 16). பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஆர்.வி. நகர், கூடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்காக ஆர்.வி.நகரில் வசிக்கும் தனது பாட்டி கனகலதா வீட்டில் தீபிகா தங்கி இருந்தார். தீபிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான சதீஷ் குமாருக்கும் (24) கடந்த சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்தது.

முதலில் அத்தை மகன் என்ற உறவு இருப்பதாக நினைத்து சதீஷ்குமாருடன் தீபிகா பழகியுள்ளார். கனகலதா வீட்டுக்கு சதீஷ்குமார் அடிக்கடி வந்து தீபிகாவை சந்தித்து பேசி வந்தார். இதனை கனகலதா கண்டித்தார். மேலும் உறவு முறையில் சதீஷ்குமார் அத்தை மகன் அல்ல என்றும் அண்ணன்-தங்கை உறவுதான் வரும் என்றும் தீபிகாவிடம் கனகலதா கூறி எச்சரித்திருந்தார்.

இருந்த போதிலும் தீபிகாவும், சதீஷ்குமாரும் நெருங்கி பழகி வந்தனர். நேற்று இரவு ஒரு அறையில் கனகலதாவும் மற்றொரு அறையில் தீபிகாவும் இருந்தனர். இன்று அதிகாலை தீபிகாவின் பாட்டி கனகலதா அந்த அறைக்கு சென்றார். அங்கு தீபிகா பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த நேரத்தில் சதீஷ்குமார் கனகலதாவை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதை பார்த்த கனகலதா சத்த மிட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் இது தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் டி.எஸ்.பி. மாடசாமி, இன்ஸ் பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வில்லியம்ஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தீபிகா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை உறுதி செய்ய சதீஷ்குமாரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

சதீஷ்குமாரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சதீஷ்குமாரை மேட்டுப் பாளையம், கோவில் பாளையம், கோவை பகுதியில் தேடி வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் கோவில் பாளையத்தில் தனது நண்பர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரது நண்பர் உதவியுடன் பெரியநாயக்கன் பாளையத்துக்கு போலீசார் வரவழைத்தனர். அங்கு அவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது போலீசாரிடம் சதீஷ்குமார் கூறியதாவது:-

நேற்று இரவு நான் தீபிகாவின் பாட்டி கனகலதாவுக்கு தெரியாமல் தீபிகா அறைக்கு சென்றேன். அங்கு தீபிகாவுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் பேசினார். இது தீபிகாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னைவிட்டு வேறு பெண்ணிடமும் பழகுகிறாயா? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். அவரை சமாதானம் செய்த நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்.

நடுஇரவில் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தீபிகா வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்தேன். நீ உடனே வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தீபிகா கூறினார். இதனால் பயந்து போன நான் சற்று நேரம் கழித்து தீபிகா வீட்டுக்கு சென்றேன். அங்கு தீபிகா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் தீபிகா தூக்கில் தொங்கிய கயிற்றை அறுத்து கீழே இறக்க முயன்றேன். அந்த நேரத்தில் தீபிகாவின் பாட்டி அங்கு வந்ததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் தீபிகாவின் சாவில் மர்மம் நீடிக்கிறது. உண்மையில் தீபிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தீபிகா கொலை செய்யப்பட்டார? அல்லது தற்கொலை செய்து கொண்டாராப என்பது தெரிய வரும் என்று கூறினார். தீபிகாவுக்கு 16 வயதே ஆவதால் அவரை கற்பழித்ததாக சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.

No comments: