Monday, April 4, 2011

இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன் - பூனம் அறிவிப்பு.


உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் பொதுமக்கள் நிர்வாணமாக காட்சி தரத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம். இந்த நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், பூனம் எங்கே என்று கேட்டு பேஸ்புக்கிலும், ட்விட்டர் தளத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பூனத்தின் தரப்பில் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெளனத்தைக் கலைந்து வாய் திறந்துள்ளார் பூனம். இதுகுறித்து அவரது மேலாளர் விபின் கூறுகையில்,

பூனம் பாண்டேவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச பத்திரிகைகள் பூனத்தை அணுகின. தங்களது அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருமாறு அவை கேட்டுள்ளன. ஆனால் அதை பூனம் நிராகரித்து விட்டார். இந்தியா வென்றால் நிர்வாணமாவேன் என்று அவர் சொன்னதற்கு அர்த்தம், பொது இடத்தில் நிர்வாணமாவேன் என்று அர்த்தம் இல்லை. மாறாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக மட்டுமே நிர்வாணமாவேன் என்றுதான் அர்த்தம்.

எனவே பொது இடத்தில் பூனம் நி்ர்வாணமாக காட்சி தரும் திட்டம் இல்லை. எந்தப் பத்திரிகைக்கும் அவர் நி்ர்வாணமாக போஸ் தரவும் மாட்டார் என்றார்.

இதனால் பூனத்தின் தரிசனத்திற்காக காத்திருக்கும் ஜொள்ளு ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்கிடையே பூனத்திற்கு பல்வேறு அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து விபின் கூறுகையில், மாரல் போலீஸ் என்று கூறிக் கொள்ளும் சிலர் பூனத்தை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். நிர்வாணமாக காட்சி தரக் கூடாது என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றார்

No comments: