Friday, July 22, 2011

`ஆன்ம விசாரணை ' - கண்களை மூடினால்... எடை குறையும் ! - தியானம் விளக்கம்.

உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை'
உங்களுக்கு ஒரு `ஆன்ம விசாரணை'

`கடவுள் இருக்கிறாரா? இல்லையா?' என்று நமக்கு தெளிவாகத் தெரியாது. ஆனால், `நாம் இருக்கிறோம்' என்பது நமக்கு நன்கு தெரியும். அதனால், முதலில் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நம் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்.

அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, `நான் யார்?, எனது செயல்கள் எப்படிப்பட்டவை? எனது குறிக்கோள் என்ன? அதை அடைய நான் செய்து கொண்டிருக்கும் முயற்சி என்ன?' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை! இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் போது இறுதியில், அந்த `நான்' என்பதற்கான விடை உங்களுக்கு கிடைக்கிறது.

அப்போதுதான் கடவுள் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரோடு நாம் ஒன்றாயிருக்கிறோமா, அவருடைய அம்சமாக இருக்கிறோமா அல்லது வேறாக தனித்து இருக்கிறோமா என்று தெரியவரும். எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம்.

ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாக எண்ணத்தில் வைத்து, அப்படியே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால், மற்ற நினைவுகள் அகன்று விடும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது மனவலிமையை பெற்று விடலாம். ஒவ்வொருவருடைய இயல்புக்கு தக்கவாறு தியான முறைகள் மாறுபடுகின்றன.

அகப்பயிற்சி செய்து வருபவர்கள் நேரடியாக ஆன்ம விசாரணையைத் தொடங்கலாம். இந்த முறையில் தொடர்ந்து செய்து வந்தால், வேறு எந்த எண்ணங்களும் மனதில் எழுவதில்லை. ஒவ்வொரு வருடைய எண்ண அலைகளின் ஆற்றலானது அவற்றின் முக்கிய விருப்பத்திற்கேற்ப, நன்மை அல்லது தீமையை உண்டாக்கும்.

அதேபோல், அந்த எண்ணங்களைப் பற்றிய நினைப்பில் உள்ளவர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும் என்கிறார், ரமணர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒருவன் செயல்களில் மட்டும் அல்லாது எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். "ஒரு பெண்ணைக் காமம் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் பாவம்.

அது அந்தப் பெண்ணுடன் கூடா ஒழுக்கம் கொள்வதற்குச் சமம்'' என்கிறார், இயேசு. நேரடியான ஆன்மவிசாரணைக்கு சிறந்த வழி, அதற்கு முதலில் நாம் யார் என்பதைத் தெரிந்து கொள்வது தான். நாம் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உலகம் மறைந்து விடுகிறது. எழும்போது மனம் விழித்துக் கொள்கிறது. அதனால், உலகம் வந்து விடுகிறது.

அதனால், உலகமே மனதை அடிப்படையாகக் கொண்டு தான் செயல்படுகிறது. ஆனால், மனமற்ற ஆழ்ந்த தூக்க நிலையிலும் நாம் இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த நிலையில் இருப்பதைப் போல நாம் எல்லா நிலைகளிலும், தொடர்ந்து இருக்கும்போது தான் தன்னை உணர முடியும்.

கண்களை மூடினால்... எடை குறையும்!

கண்களை மூடினால்... எடை குறையும்!

கண்களை மூடினால் உடல் எடை எப்படி குறையும்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். ஆனால் இது மனோதத்துவ முறை சிகிச்சையில் சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். இப்படி ஒரு புது மருத்துவ தெரபி, மும்பை, பெங்களூர், டெல்லி என பரவி, தற்போது சென்னையில் கால் பதித்துள்ளது.

மனோதத்துவ ரீதியான பயிற்சியினால், கண்களை மூடும்போது உள்ளத்தில் மாற்றம் நிகழும். அதுவே உடலில் வெளிக்காட்டப்பட்டு, எடை தானாக குறையும். மனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர். நாம் விழித்திருக்கும்போது மனது ஒரு மாதிரியாகவும், தூங்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும்.

ஆனால் மெய்மறந்த நிலையில் நாம் ஆழ்நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும். மருத்துவ ரீதியாக செய்யப்படும் இந்த ஹிப்னோதெரபியில் மனிதனின் இயல்பான மனம் விசுவரூபம் எடுக்கும்போது, அதன் விளைவுகளால் உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன.

இதை நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்ய வேண்டும். மன அழுத்தம் குறையும்போது உடல் சீராகி, எடையும் சீராகும்.

தியானம் விளக்கம்
தியானம் விளக்கம்

தியானம் செய்தல், உடல் நலத்தையும், மன அமைதியையும் தருகிறது. இதில் மிக முக்கியமானது ஆழ்நிலை தியானம்.ஆழ்நிலை தியானம் பதட்டத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு நினைவு திறனைக் கூட்டுகிறது.

புத்த சமயத்தில் புத்தரே வடிவமைத்த விபாசனா தியானம் தான், முதன்மையாக உள்ளது. சமண சமயத்தில் ஆழ்காட்சி தியானம் எனப்படும் பிரேக்ஷா தியானம் இன்றும் சிறப்பாக பேசப்படுகிறது.

இது மனதில் உள்ள வன்முறை எண்ணங்களை நீக்க உதவுகிறது. இப்பொழுது உள்ள வாழ்க்கை முறையில் தியான மற்றும் யோகா பயிற்சிகள் செய்வது உடலுக்கும்,மனதிற்கும் மிகவும் நல்லது

No comments: