Thursday, July 21, 2011

அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை.

அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை

உலக மக்கள் தொகை வரும் அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960ம் ஆண்டு 300 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1999ஆம் வருட கணக்கெடுப்பின்படி 600 கோடியாக உயர்ந்தது.

ஒரு வினாடிக்கு 5 குழந்தைகள் வீதம் ஒரு வருடத்திற்கு 7.8 கோடி அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 2025ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயரும் என கணக்கிடப் பட்டுள்ளது.

No comments: