Friday, April 8, 2011

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி.


சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

4வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அனிருதா 55 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்களும், ரெய்னா 33 ரன்களும், டோனி 29 ரன்களும் எடுத்தனர்.


154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.


கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக காலிஸ் 54 ரன்களும், மனோஜ் திவாரி, பிஸ்லா ஆகியோர் தலா 27 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.



No comments: