Friday, April 8, 2011

கருணாதி-குடும்பம் பற்றி விமர்சனம்: ஜெயலலிதா-விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு.

கருணாதி - குடும்பம் பற்றி விமர்சனம் : ஜெயலலிதா - விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு; இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
கருணாதி-குடும்பம் பற்றி விமர்சனம்:    ஜெயலலிதா-விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு;    இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி. மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் அந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதையடுத்து மத்திய தேர்தல் கமிஷன் ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் விதியை மீறி தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்தது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆதாரமில்லாமல் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டு கூறி உள்ளீர்கள். ஊழல்வாதி, சினிமா துறையை சுரண்டிவிட்டார். தமிழகத்தை சுரண்டிவிட்டார் என தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்வதாக உங்கள் மீது தி.மு.க. முக்கிய நிர்வாகி பொன் முத்துராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார். இதற்கான விளக்கத்தை இன்று மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசை விஜயகாந்திடம் கொடுப்பதற்காக நேற்று இரவு 10.20 மணி அளவில் புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி கல்யாணசுந்தரம் சென்றார். ஆனால் ஓய்வெடுப்பதாக கூறி விஜயகாந்தை தேர்தல் அதிகாரி சந்திக்க தே.மு.தி.க.வினர் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து நோட்டீசை தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவிடம் தேர்தல் அதிகாரி கொடுத்தார். இதுபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவரையும், அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மத்திய தேர்தல் கமிஷன் 2 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

தேர்தல் ஆணையத்திடம் ஜெ., கேப்டன் 2 நாள் அவகாசம்.

இந்த புகார் குறித்து நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நோட்டீசுக்கு பதில் அளிக்க அவர்கள் இருவரும் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாக பிரவீன் குமார் தெரிவித்தார்.

1 comment:

Anonymous said...

விஜயகாந்த் இன்னும் முதல்வரே ஆகவில்லை .. அதற்குள் அவருக்கு எவ்வளவு தெனாவெட்டு !