Friday, April 8, 2011

மானங்கெட்ட கூட்டணிக் கட்சிச் தலைவர்களுக்கு அன்புச் சகோதரி எழுதுவது


மானங்கெட்ட கூட்டணிக் கட்சிச் தலைவர்களுக்கு, அன்புச் சகோதரி எழுதுவது!

எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?

சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?

எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?

இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது.

அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?

மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!

விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்ல விரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது!

இப்படிக்கு
உங்கள் அன்பு சகோதரி

நன்றி : ரெட்டைவால்ஸ்

No comments: