
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாணைக்காவல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இன்று நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது திமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்ததோடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் தாக்கி பேசினார்.
பிரச்சாரம் முடிந்து வடிவேலு புறப்பட்டபோது, அவர் கார் மீது இரண்டு செருப்புகள் விழுந்தன. அப்போது அங்கிருந்த போலீசார் செருப்பு வீசியவரை பிடித்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்டவரின் பெயர் மாசிலாமணி என்றும், அவர் திருவாணைக்காவல் பகுதி தேமுதிக துணைச் செயலாளர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதனை அறிந்த திமுகவினர் தேமுதிக அலுவலகத்தை சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இன்று நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது திமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்ததோடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் தாக்கி பேசினார்.
பிரச்சாரம் முடிந்து வடிவேலு புறப்பட்டபோது, அவர் கார் மீது இரண்டு செருப்புகள் விழுந்தன. அப்போது அங்கிருந்த போலீசார் செருப்பு வீசியவரை பிடித்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்டவரின் பெயர் மாசிலாமணி என்றும், அவர் திருவாணைக்காவல் பகுதி தேமுதிக துணைச் செயலாளர் என்றும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதனை அறிந்த திமுகவினர் தேமுதிக அலுவலகத்தை சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment