Thursday, May 26, 2011

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விளக்கமளிக்க வேண்டும் : தா.பாண்டியன்.

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்: தா.பாண்டியன்

சமச்சீர் கல்வித் திட்டம் என்ற கொள்கையை பற்றி அதிமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ள செய்தியில் தமிழக அரசு சமச்சீர் ஒத்திவைப்பதாக அறிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சமச்சீர் கல்வி திட்டம் என்ற கொள்கையை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதா? நிராகரிக்கிறதா? என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார் மேலும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு குறைகள் இருக்கிறது என்பதால் அதனை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதில் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அதற்கான காரணங்களை விளக்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் குறிப்பாக கல்வித்துறையினர் மத்தியில் எழுந்துள்ள குழப்பத்தை தீர்த்து வைக்கவேண்டும்.

தமிழக சட்டப்பேரவைக்காகவும் தலைமை செயலகத்திற்காகவும் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப்பணிகள் நிறைவு பெறவில்லை. எஞ்சியுள்ள பணியையும் தொடர்ந்து நடத்தி முடித்து மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் அரசு நிர்வாகப்பணிக்காகவோ மக்களுக்காகவோ உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசுப்பணிகளுக்காக புதிய கட்டிடத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை. பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர எதற்கு பயன் படுத்துவது என்பதை ஆளும் கட்சி தீர்மானிக்கலாம். மேட்டூர் அணையை ஜீன் 6-ம் தேதியே பாசனத்திற்காக திறப்பது என்ற தமிழக அரசு அறிவிப்பை தமிழக விவசாயிகள் வரவேற்றிருப்பது போலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்பதாக தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


No comments: