Thursday, May 26, 2011

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : மன்மோகன்சிங்...

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: மாநாட்டில் பிரகடனம்

ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் 2 நாட்கள் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் மன்மோகன்சிங் உரையாற்றினார்.

மாநாட்டுக்குப்பின் கூட்டமைப்பு சார்பில் 8 பக்க பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், லிபியாவில் போர் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்பினரும், அமைதியான வழிமுறைகளில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனத்தை மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் தங்கள் பகுதியில் தீவிரவாதிகள் தளம் அமைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உள்பட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

No comments: