Thursday, May 26, 2011

பாகிஸ்தானிடம் 50 தீவிரவாதிகள் பட்டியல்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

பாகிஸ்தானிடம் 50 தீவிரவாதிகள் பட்டியல்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

இந்தியாவால் தேடப்பட்டு வரும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் 50 தீவிரவாதிகள் பட்டியலை சமீபத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்நிலையில், அதற்கு, அமெரிக்க உதவி வெளியுறவு மந்திரி ராபர்ட் பிளேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவர், மத்திய மற்றும் தெற்கு ஆசிய விவகாரங்களை கவனிப்பவர் ஆவார். அவர் கூறுகையில், பாகிஸ்தானிடம் 50 தீவிரவாதிகள் பெயர் அடங்கிய பட்டியலை இந்தியா அளித்துள்ளது.

இது, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு அங்கம் ஆகும். இதை நாங்கள் ஆதரிக்கிறோம். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதத்தை இந்தியா தூண்டி விடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், நாங்கள் அப்படி கருதவில்லை. உள்நாட்டு பிரச்சினை களால்தான், அங்கு தீவிரவாதம் நிலவுவதாக கருதுகிறோம் என்றார்.

No comments: