
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணி புரிபவரின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ் (வயது 18). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
இவர் அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆபாச இ- மெயில்கள் அனுப்பியதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கையில் விலங்கு மாட்டி 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.
பாத்ரூம் செல்லக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் கிருத்திகா கைது செய்யப்பட்டது பற்றி அவரது தந்தைக்கோ, தூதரகத்துக்கோ கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. கிருத்திகா பள்ளியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆபாச இ-மெயில்களை அனுப்பியது கிருத்திகா அல்ல என்றும் ஒரு சீன மாணவர் அதை அனுப்பினார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிருத்திகா மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரூ.7 கோடி நஷ்டஈடு கேட்டு நியூயார்க் நகர நிர்வாகத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாணவி சார்பில் வக்கீல் ராஜீவ் பித்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.
மாணவி மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி உள்ளார். இந்திய மாணவி மீது நடவடிக்கை எடுத்த போலீசார் ஆபாச இ-மெயில் அனுப்பிய சீன மாணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. சஸ்பெண்டு செய்தும் உத்தரவிடவில்லை.
இது ஏன் என்று தனக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்ட இந்திய மாணவி கிருத்திகா கூறினார். வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு இது ஒரு உதாரணம். ஒரு தூதரக அதிகாரியின் மகளுக்கே இந்த கதி என்றால் சாதாரண மாணவர்களின் நிலை என்னவாகும் என அமெரிக்க மாணவர் ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
இவர் அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆபாச இ- மெயில்கள் அனுப்பியதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கையில் விலங்கு மாட்டி 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.
பாத்ரூம் செல்லக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் கிருத்திகா கைது செய்யப்பட்டது பற்றி அவரது தந்தைக்கோ, தூதரகத்துக்கோ கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. கிருத்திகா பள்ளியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆபாச இ-மெயில்களை அனுப்பியது கிருத்திகா அல்ல என்றும் ஒரு சீன மாணவர் அதை அனுப்பினார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிருத்திகா மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரூ.7 கோடி நஷ்டஈடு கேட்டு நியூயார்க் நகர நிர்வாகத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாணவி சார்பில் வக்கீல் ராஜீவ் பித்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.
மாணவி மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி உள்ளார். இந்திய மாணவி மீது நடவடிக்கை எடுத்த போலீசார் ஆபாச இ-மெயில் அனுப்பிய சீன மாணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. சஸ்பெண்டு செய்தும் உத்தரவிடவில்லை.
இது ஏன் என்று தனக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்ட இந்திய மாணவி கிருத்திகா கூறினார். வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு இது ஒரு உதாரணம். ஒரு தூதரக அதிகாரியின் மகளுக்கே இந்த கதி என்றால் சாதாரண மாணவர்களின் நிலை என்னவாகும் என அமெரிக்க மாணவர் ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment