Thursday, May 26, 2011

சங்ககிரியில் பயங்கரம் : 2 வாலிபர்கள் எரித்து கொலை ; நிர்வாண கோலத்தில் பிணம் வீச்சு.


சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஒரு கல்குவாரி உள்ளது. இதன் அருகே உள்ள காட்டுவேலி என்ற பகுதியில் முகம் எரிந்த நிலையில் 2 ஆண் பிணங்கள் கிடந்தது. அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி.வெங்கட்ராமன், போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம். மற்றும் சங்ககிரி டி.எஸ்.பி. ராமசாமி, மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர்களுக்கு 28 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கும் என தெரியவந்தது.

மேலும் ஒரு வாலிபர் பிணம் நிர்வாண கோலத்திலும், மற்றொரு வாலிபர் பிணம் ஜட்டியுடனும் கிடந்தது. இவர்கள் அடையாளம் தெரியாத இருக்கும் வகையில் முகம் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டு கிடந்தது. இவர்கள் 2 பேரையும் வெளியில் கொலை செய்து காரில் கொண்டு வந்து பிணத்தை இங்கே வீசிச்சென்றதற்கான தடயங்கள் உள்ளது.

இவர்கள் 2 பேரும் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யபட்டார்களா? அல்லது காதல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்று தெரிந்தால் தான் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதால் தனிப்படை போலீசார் அவர்களை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் யாராவது காணாமல் போய் இருப்பதாக புகார் வந்து இருக்கிறதா? என்றும் தகவல் கேட்டு இருக்கின்றனர். 2 வாலிபர்களின் பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சங்ககிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments: