Thursday, May 26, 2011

பொதுமக்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ.

பொதுமக்கள் காலில் விழுந்து   நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ.

சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்று இன்று காலை சேலம் வந்தார். அவர் ஜாகிர்ரெட்டிப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் ஓட்டு போட்ட வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். பின்னர் ஜி.வெங்கடாஜலம் நன்றி தெரிவித்து பேசியதாவது:-

என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் எது என அறிந்து அவற்றை தீர்த்து வைக்க பாடுபடுவேன். பொதுமக்கள் எப்போதும் என்னை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். இந்த தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கண்ட எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலமும், அவரது மனைவியும் தலா 5வருடங்கள் வீதம் 10வருடங்கள் கவுன்சிலர் பதவி வகித்தவர்கள்.

அந்த காலகட்டத்தில் இவர்கள் கவுன்சிலராக பதவி வகித்த வார்டு தொடர்பான உதவிகளுக்கு பொதுமக்கள் அணுகியபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், நீங்கள் எனக்கா ஓட்டு போட்டீர்கள் இரட்டை இலைக்குதானே போட்டீர்கள் என்று கூறி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தப்பித்தவர்தான் இந்த ஜி.வெங்கடாசலம்

இதன் விளைவாக இவர் ஓட்டு கேட்கப்போனபோது பல இடங்களில் கருப்பு கொடி ஏற்றிவைத்து தங்கள் எதிர்ப்பை அப்பகுதி மக்கள் காட்டினர். என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: