Thursday, May 26, 2011

தவறான குற்றசாட்டில் இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் அமெரிக்காவில் கைது .

அமெரிக்காவில் இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் தவறான  குற்றசாட்டில் கைது

அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சிலராக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா. இவர் மேற்படிப்புக்காக நியூயார்க் சென்றார். அங்குள்ள குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார்.

ஆனால் கிருத்திகா, அவரது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியைப் பற்றி தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கிருத்திகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் சிறையில் துன்புறுத்தியதாக கிருத்திகா தெரிவித்தார்.

இது தொடர்ப்பாக கடந்த 6-ந் தேதி நியூயார்க் நீதிமன்றத்தில் கிருத்திகா பிஸ்வாஸ் வக்கீல் ரவி பத்ரா மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி வக்கீல் ரவி பத்ரா தெரிவித்துள்ள செய்தியில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளியில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறாக நடந்தது என்றும் அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் அவர் மீது குற்றம் சுமத்தி பள்ளியில் இருந்து விலக்கி, சிறையில் வைத்தற்காக பள்ளியின் மீதுவழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments: