கடத்தப்பட்ட கப்பலை மீட்க சோமாலியா கொள்ளையருக்கு இந்தியா ரூ.10 கோடி பிணைத்தொகை வழங்கியது. சர கப்பல் கடத்தல்க்குஎம்.வி.சூயஸ் என்ற இந்திய சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
அதில் 53 இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர். பேச்சு வார்த்தைக்குப் பிறகு, 6 இந்தியர்கள் உள் பட 22 ஊழியர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மற்றவர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர். இவர்களை விடுவிக்க வேண்டுமானால் இந்திய அரசால் கைது செய்யப்பட்ட சோமாலிய கொள்ளையர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, கடத்தப்பட்ட கொள்ளையர்களிடம் பிணைக் கைதிகளாக இருக்கும் 6 பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று சோமாலியா கொள்ளையர்களுக்கு மத்திய அரசு ரூ.10 கோடி பிணைத் தொகை வழங்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து எம்.வி.சூயஸ் கப்பலும், அதில் உள்ள பிணைக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
அதில் 53 இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர். பேச்சு வார்த்தைக்குப் பிறகு, 6 இந்தியர்கள் உள் பட 22 ஊழியர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மற்றவர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர். இவர்களை விடுவிக்க வேண்டுமானால் இந்திய அரசால் கைது செய்யப்பட்ட சோமாலிய கொள்ளையர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, கடத்தப்பட்ட கொள்ளையர்களிடம் பிணைக் கைதிகளாக இருக்கும் 6 பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று சோமாலியா கொள்ளையர்களுக்கு மத்திய அரசு ரூ.10 கோடி பிணைத் தொகை வழங்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து எம்.வி.சூயஸ் கப்பலும், அதில் உள்ள பிணைக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment