Thursday, May 26, 2011

குழந்தைகள் பாதிப்பு : சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது.

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

சென்னையில் ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்திலும் சின்னம்மை நோய் பரவுவது உண்டு. அதே போல் இந்த ஆண்டும் சின்னம்மை நோய் பரவி வருகிறது. இதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சின்னம்மை நோய் தாக்கினால் 3 நாளில் அதன் தாக்கம் குறைந்து விடும் என்பதால் நிறைய வீடுகளில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதில்லை. வேப்பிலை சாறு, மோர் கொடுத்து சின்னம்மை நோயை குணப்படுத்தி விடுகின்றனர்.

உடல் முழுவதும் ஆங்காங்கே கொப்பளம் அதிகமாகி சிரமப்படும் குழந்தைகள் மட்டும் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ஒருவித தொற்று வைரஸ் கிருமிகள் மூலம் சின்னம்மை நோய் பரவுகிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவிவிடும். சிலருக்கு காய்ச்சலும் வரும். தற்போது தினசரி 10 பேர் வரை இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என்றார்.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுமதி கூறுகையில் எனது 10 வயது மகளுக்கு சின்னம்மை நோய் வந்து 3 நாள் ஆகிவிட்டது. தினமும் வேப்பிலை, மோர், இளநீர் கொடுத்து வந்தேன். தற்போது ஓரளவு குணமாகி விட்டது என்றார்.

No comments: