Monday, June 6, 2011

பாபா ராம்தேவ் நம்பிக்கை மோசடி : மத்திய மந்திரி குற்றச்சாட்டு.

பாபா ராம்தேவ் நம்பிக்கை மோசடி: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ், அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் பற்றி அவருடன் பல முறை பேச்சு நடத்தினோம். அவரது கோரிக்கைகளை 100 சதவீதம் அளவில் நிறைவேற்ற முடியவில்லை.

என்றாலும் 90 சதவீதம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தோம். இதுபற்றி பிரதமரும், அவருக்கு தெளிவாக கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக முதலில் கூறினார். ஆனால், அவர் பின்னர் உண்ணாவிரதத்தை தொடருவதாக அறிவித்து விட்டார்.

அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மீறி விட்டார். இது அவரது மிகப்பெரிய நம்பிக்கை மோசடி என்று கூறினார்.


No comments: