Monday, June 6, 2011

என்னை கொல்ல சதி : ராம்தேவ் பரபரப்பு புகார்.


ஹரித்துவார் ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வரும் பாபா ராம்தேவ் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

என்னை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி போலீசார் என்னை கொல்வதுடன் என் ஆதரவாளர்களையும் அதிக அளவில் கொன்று குவிக்க திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, எனது சீடர்கள் மீது போலீசார் கண்மூடித் தனமாக தாக்கினார்கள். பெண்களை அடித்து துன்புறுத்தினார்கள். ஆனால் யார் மீதும் தடியடி நடத்தவில்லை என்று டெல்லி போலீசார் பொய் சொல்கிறார்கள்.

டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து தேசிய மனித உரிமை கழகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். போலீசார் ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணீர் புகை குண்டுகளால் சுட்டனர். மின்சார ஜெனரேட்டர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பெரிய அளவில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். இது பற்றி தேசிய மனித உரிமை கமிஷன் விசாரிக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தான் நான் சுடிதார் அணிந்து தப்பிச் சென்றேன்.

சத்ரபதி சிவாஜி மாதிரி நான் நடந்து கொண்டேன். மீண்டும் போராட வந்துள்ளேன். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டுள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

No comments: