Monday, June 6, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஏர்செல் நிறுவனரிடம் சி.பி.ஐ. விசாரணை.


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 மார்ச் 5-ம் தேதி , 8 ஏரியாக்களுக்கு யுஏஎஸ்எல் எனப்படும் உரிமம் கோரி சிவா குரூப் நிறுவனத்தின் சிவசங்கரனின் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) விண்ணப்பித்தது. அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். விண்ணப்பிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஏழு ஏரியாக்களுக்கான உரிமங்களுக்கு கையெழுத்தானது. மத்தியபிரதேசம் மாநிலத்திற்குக் கோரப்பட்டிருந்த உரிமம் மட்டும் கையெழுத்தாகவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய, இந்த திட்டம், அமைச்சர் தயாநிதி மாறன் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், 2005 மார்ச் 1ஆம் நாள் ஹரியானா, கேரளா, கொல்கத்தா, பஞ்சாப் மாநிலங்களில் உரிமம் கேட்டு டிஷ்நெட் விண்ணப்பித்தது.

தொலைத் தொடர்புத்துறை செயலாளர், தொலைத்தொடர்பு அமைச்சருடன் (தயாநிதி) ஆலோசித்ததில், துறை சார்பிலான எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் டிஷ்நெட் நிறுவனத்தின் ஃபைல்கள்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் அவை தொலைத் தொடர்புத்துறையின் பல பகுதிகளிலும் சுற்றியது.

அதே நேரத்தில், தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத் திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 2005ஆம் ஆண்டில் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட மேக்ஸிஸ் குரூப் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதாக கையெழுத்து ஆனது.

இதையடுத்து, ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் தொலைத் தொடர்புத் துறையில் அவசரமாக பரிசீலிக்கப்பட்டன. அதன்பின் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, குஜராத், என எல்லா மாநிலங்களுக்கும் உரிமம் கோரியது ஏர்செல். 2ஆண்டகளாக நிலுவையில் இருந்த பீகார், ஹிமாச்சல்பிரதேசம் என 15மாநிலங்களுக்கான உரிமங்கள் 15 நாட்களில் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டன.

இதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தொழில் அதிபர் சிவசங்கரனை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. அதை ஏற்று இன்று சிவசங்கரன் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார். 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அவரிடம் சி.பி.ஐ. பல்வேறு கேள்விகளை கேட்டது. சிவசங்கரன் அளித்த பதில்கள் அனைத்தையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

சிவசங்கரனின் வாக்குமூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தெஹல்கா எழுப்பிய கேள்வி

இந்த உரிமங்கள் வழங்கப்பட்ட நான்கே மாதங்களில், அதாவது 2007 பிப்ரவரி மாதத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் நிறுவனத்தின், துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஏசியா என்டர்டெய்ன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம், கலாநிதிமாறனின் சன் குரூப் நிறுவனத்தின் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் - சன் டி.டி.ஹெச்சில் சுமார் 600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. சன் எஃப்எம் ரேடியோ நெட்வொர்க்கில் சுமார் 100 கோடி ரூபாயை மேக்ஸிஸ் குரூப் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாயை சன் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது இயல்பாக நடந்தவையா என தெஹல்கா பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

No comments: