
டெல்லியில் காங்கிரஸ் செய்தியாளர் கூட்டம் நடந்தது.காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தனன் துவிவேதியை தாக்க முயற்சி நடந்தது.
ராம்தேவ் பற்றிய ஜனார்த்தனன் துவிவேதி விமர்சனத்துக்கு நவ்சஞ்சார்’ செய்தி நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த அவர் கையில் செருப்பை எடுத்துக்கொண்டு ஜனார்த்தனன் மீது பாய்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஜனார்த்தனன் மீது செருப்புடன் பாய்ந்த நிருபரை காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து இழுத்துச்சென்றனர்.
செருப்புடன் பாய்ந்த அந்த நிருபர் சுனில்குமார், ‘நவ்சஞ்சார்’ என்ற ராஜஸ்தான் பத்திரிகையில் பணிபுரிகின்றார்.
சுனில் குமாரை கைது செய்து டெல்லி போலீசார் விவாரணை செய்து வருகின்றனர்.
நடந்த இந்த சம்பவம் பற்றி ஜனார்த்தனன் துவிவேதி, ‘’நடந்த இந்த தாக்குதல் திட்டமிட்ட சதி’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment