Monday, June 6, 2011

உண்ணாவிரதத்தை கலைக்க மத்திய அரசு உத்தரவிட்டது ; போலீஸ் அதிகாரி தகவல் .

உண்ணாவிரதத்தை கலைக்க மத்திய அரசு உத்தரவிட்டது;    போலீஸ் அதிகாரி தகவல்

டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கலைக்க மத்திய அரசு தான் உத்தரவிட்டது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசிய அவர், ராம்லீலா மைதானம் யோகா முகாம் நடத்தவே 20 நாள் வாடகைக்கு எடுக்கப் பட்டது. அதில் போராட்டம் நடத்தப்பட்டாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்தியஅரசு உத்தரவிட்டதால் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருந்தவர்களை தடியடி நடத்தி கலைக்க வேண்டியதாகி விட்டது என்றார். அவர் மேலும் கூறுகை யில், மக்கள் அமைதியாக கலைந்து சென்றிருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. கல் வீசியதால் நாங்கள் தடியடி நடத்தினோம் என்றார்.

No comments: